சசிதரன்
27-07-2010, 03:14 PM
உங்களுக்கு தெரிந்ததைத்தான்
நான் சொல்கிறேன்.
அது உங்களிடையேதான் இருந்தது...
நான் வெளிக் கொண்டு வந்தேன்.
அதை நீங்கள் நாவிலேயே வைத்திருந்தீர்கள்..
நான் உரக்க சொல்லி விட்டேன்.
அதன் இருப்பு உங்களை பயம் கொள்ள செய்தது...
நான் அதனுடன் கை கோர்த்துக் கொண்டேன்.
அதன் பசி உங்களை மிரள வைத்தது...
நான் என் பிரியங்களை தின்னக் கொடுத்தேன்.
அது
ஏற்க முடியாததாயிருக்கிறது
தவிர்க்க முடியாததாகவுமிருக்கிறது.
உங்களுக்கு அதைப் பற்றி ஏதும் தெரியாதது போல்
கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
நிச்சயமாய் நானறிவேன்..
உங்களுக்கு தெரிந்ததைத்தான்
நான் சொல்கிறேன்.
நான் சொல்கிறேன்.
அது உங்களிடையேதான் இருந்தது...
நான் வெளிக் கொண்டு வந்தேன்.
அதை நீங்கள் நாவிலேயே வைத்திருந்தீர்கள்..
நான் உரக்க சொல்லி விட்டேன்.
அதன் இருப்பு உங்களை பயம் கொள்ள செய்தது...
நான் அதனுடன் கை கோர்த்துக் கொண்டேன்.
அதன் பசி உங்களை மிரள வைத்தது...
நான் என் பிரியங்களை தின்னக் கொடுத்தேன்.
அது
ஏற்க முடியாததாயிருக்கிறது
தவிர்க்க முடியாததாகவுமிருக்கிறது.
உங்களுக்கு அதைப் பற்றி ஏதும் தெரியாதது போல்
கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
நிச்சயமாய் நானறிவேன்..
உங்களுக்கு தெரிந்ததைத்தான்
நான் சொல்கிறேன்.