கலையரசி
25-07-2010, 09:59 AM
”என்னமோ மாதிரியிருக்கு. குடிக்க ஏதாவது கொடேன்”
சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?
”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.
காபியா? இல்லே டீயா?
ம்.. காபியே கொடு.
பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?
பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.
நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?
நரசுஸ் தூள்லேயே போடு.
ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?
ஸ்டிராங்காவே இருக்கட்டும்.
சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?
சர்க்கரை போட்டே கொடு.
கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?
”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்”
”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”
(பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு ந.துணுக்கு வந்தது. நண்பனைப் பாடச் சொல்வான் ஒருவன். அவனது சரமாரியான கேள்விகளால் நொந்து போனவன், கடைசியில் இப்படித்தான் முடிப்பான். அதே பாணியில் இந்த நகைச்சுவை துணுக்கு)
சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?
”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.
காபியா? இல்லே டீயா?
ம்.. காபியே கொடு.
பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?
பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.
நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?
நரசுஸ் தூள்லேயே போடு.
ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?
ஸ்டிராங்காவே இருக்கட்டும்.
சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?
சர்க்கரை போட்டே கொடு.
கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?
”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்”
”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”
(பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு ந.துணுக்கு வந்தது. நண்பனைப் பாடச் சொல்வான் ஒருவன். அவனது சரமாரியான கேள்விகளால் நொந்து போனவன், கடைசியில் இப்படித்தான் முடிப்பான். அதே பாணியில் இந்த நகைச்சுவை துணுக்கு)