மதி
23-07-2010, 11:04 AM
“அண்ணே.. அண்ணே.. அண்ணே.. இதை வாங்கிக்கண்ணே..”
அப்போது தான் மழை தூற ஆரம்பித்திருந்தது. எதையும் கண்டுக்காமல் அந்த சின்னக்கூடையில் இருந்த ப்ளாஸ்டிக் பொருட்களை விற்க முனைந்தாள் அவள். ஏறக்குறைய ஆறு வயதிருக்கும். கையில் மட்டும் சின்னக் கிழியலோடு மேல்சட்டையும் அழுக்கான பாவாடையும் அணிந்திருந்தாள். இந்த சிக்னலில் எப்போதும் அவளைப் பார்ப்பேன். சிக்னல் விழ எப்படியும் இரண்டு நிமிஷமாகும். அதற்குள் முடிந்தவரை விற்றுவிடவேண்டும் என்ற உத்வேகம் அவள் விற்பதில் இருக்கும். கடந்த ஒருவாரமாக என்னிடம் ஒரே மாதிரி பொருளை விற்றுக் கொண்டிருக்கிறாள். அன்றும் அப்படி தான் ஒரு பொருளையாவது என்னிடம் தள்ளிவிட முனைந்தாள். அத்தனையும் குழந்தைகள் விளையாடும் சின்ன சின்ன பொருட்கள்.
“ஏற்கனவே உன்கிட்ட தானே நிறைய வாங்கியிருக்கேனே. இன்னிக்கும் என்ன? திரும்ப திரும்ப ஒரே பொருளையே வாங்க சொல்ற.. இத வச்சுக்கிட்டு என்ன செய்யறது?”
“வீட்டுல பாப்பா இருந்தா விளையாடக்குடு. இல்லாட்டி யாராச்சும் சின்னப் புள்ளைங்க விளையாட வந்தா குடு. ப்ளீஸ்ண்ணே.. ஒன்னே ஒன்னு வாங்கிக்கண்ணே..”
பெரிய மனுஷி மாதிரி அவள் பேச சிக்னல் விழ இன்னும் முக்கால் நிமிஷமே இருந்தது. அதற்குள் ஒன்றையாவது என்னிடம் தள்ளிவிட முனைந்தாள். பால்மணம் மாறாத அவளின் முகத்தை கெஞ்சுவது போல் வைத்துக் கொள்ள அவசர அவசரமாக சட்டைப்பையில் இருந்து பணம் எடுத்து கொடுத்து வாங்கினேன். சிக்னல் விழுந்தால் கன்னாபின்னாவென்று ஹாரன் அடித்து காதை செவிடாக்குவார்கள். சிக்னல் விழ நான் கிளம்ப அவள் அடுத்த ஆளைத் தேடிப் போனாள் பெரிதாய் பெய்ய ஆரம்பித்த மழையிலும்.
மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி வீட்டுக்குள் நுழைந்ததும் துண்டை எடுத்து நீட்டினாள் என் தர்மபத்தினி. இனிய இல்லத்தரசி. இவளைக் கைப்பிடித்து ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு. வீட்டுக்குள் நான் நுழையும் போது எதிரில் இவள் புன்னகையோடு வரும் போது எப்பேர்ப்பட்ட தலைவலியும் பறந்து போகும். ஆபிஸில் மேனேஜரிடம் சண்டையா, கொடுக்கல் வாங்கலில் பிரச்சனையா.. எல்லாம் மறந்து போகும். அத்தனை வசீகரமான சிரிப்பு அவளுடையது. தலையை துவட்டிக் கொண்டே சட்டையை கழட்ட பையில் இருந்து டிபன் பாக்ஸை எடுக்கப் போனவள் பரிகாசமாய் சிரித்தாள்.
“இதோடு பதினொன்னாவது..”
“என்னாது..?”
“விளையாட்டு ஜாமான்… தினமும் ஒன்னு வாங்கிட்டு வர்றீங்க. அதுவும் ஒரே மாதிரி..க்கும்..”
செல்லமாய் நொடித்தாள்.
“அடியே.. எல்லாம் நம்ம குழந்தைக்குத் தானடி.. இப்போவே எல்லாத்தையும் சேத்துட்டு இருக்கேன்”
பனியனுடன் இருந்த நான் ஆசையாய் நன்றாய் மேடிட்டிருந்த அவள் வயிற்றை தடவ மறுபடி நக்கல் சிரிப்புடன்
“இதுக்கு ஒன்னு தான் கொறச்சல். உங்க புள்ள வந்ததும் உங்கள தான் கேக்கப் போறான்.. லூசாப்பா நீன்னு. ஒரே மாதிரி எத்தனை சாமான் செட்டு வாங்கி வச்சிருக்க..”
“அவன்.. இல்லே.. அவ.. நமக்கு பொண்குழந்த தான்..”
“அதெல்லாம் முடியாது. பையன் தான் பொறக்கப் போறான். இப்போவே நான் பேர் யோசிச்சுட்டு இருக்கேன்…”
அந்த விளையாட்டுப் பொருளை மறந்து எங்கள் விளையாட்டு தொடர்ந்தது.
“நீ ஒரு கர்நாடகம்… இளஞ்சேரலாதன்… இமயவரம்பன்னு ஏதாச்சும் பேர் வப்ப.. அதெல்லாம் முடியாது. பொண்ணு தான். நான் தான் பேர் வைப்பேன்..”
“ம்ஹூம்.. அதெல்லாம் முடியாது.. பையன் தான். நான் தான் பேர் வைப்பேன்.. நீங்க என்ன சொன்னாலும் சரி..”
சிணுங்க ஆரம்ப அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. நாளாக நாளாக அவள் முகம் பளபளப்பாகிக் கொண்டிருந்தது. அழகு கூடிக்கிட்டு இருக்கு. கர்ப்பகாலத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பாங்கன்னு சொன்னது உண்மை தான். தாய்மை என் தனத்தின் அழகை இன்னும் அழகாக்கிக் கொண்டிருந்தது.
தனம், அவளைக் கைபிடிக்கும் போது பி.எஸ்.ஸி முடித்து கனவுலகில் இருந்தாள். தமிழ் மேல் அளவுகடந்த காதல். அடிக்கடி கவிதை கதை என்றெழுதி என்னிடம் படிக்கக் கொடுப்பாள். அதுவரை அதிகம் தமிழ் படிக்காததாலும் அவ்வளவு ஆர்வம் இல்லாததாலும் கஷ்டப்படுவேன். அவளே படித்து அர்த்தமும் சொல்வாள். எல்லாம் என்னுடைய ‘ரொம்ப நல்லா எழுதறடி’னு நான் சொல்லும் வார்த்தைகளுக்காக. டி.வி. பார்ப்பதில் கூட சண்டை வரும். அவள் தமிழ் சானல் பார்க்க அடம் பிடிக்க நான் மூவிஸ் பார்க்க எங்கள் செல்ல சண்டையில் யாருமே பார்க்காமல் டி.வி மட்டும் ஓடிக் கொண்டிருக்கும்.
“சரி.. உனக்கும் வேணாம். எனக்கும் வேணாம். நமக்குள்ள ஒரு டீல். பொண்ணு பொறந்தா நான் பேர் வைப்பேன்… நேஹா, சுஷ்மிதானு ஏதோ ஒன்னு. பையன் பொறந்தா நீ பேர் வைய்யி. ஆனா பேர் வைக்கற வரைக்கும் ஒருத்தருக்கொருத்தர் தெரியக் கூடாது என்ன பேர்னு. என்கிட்ட கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது..”
சின்னதாய் முகம் சுருங்கி “ம்ம்.. சரி..”. உடனே மலர்ந்தவளாய், “தலைய சீக்கிரம் தோட்டிட்டு வாங்க. உங்களுக்குப் புடிச்ச பலகாரம் பண்ணிருக்கேன்..”
அடுத்தநாளும் அப்படியே. ஆனால் கொஞ்ச நல்ல சொக்காய் போட்டு வந்தாள். சிக்னல் தான் வண்டியை நிறுத்திவிட்டு அவளைக் கூப்பிட்டேன். வண்டியை பார்த்து நிதானித்து வந்தாள். என்னைப் பார்த்து வழக்கமான சிரிப்பு.
“பேர் என்ன?”
“செல்வி…”
“அதான் உன் பேரா…?”
“இல்ல.. தமிழ்ச் செல்வி. எதுக்கு கேக்கறீங்க?”
விற்பதற்கு அடுத்த ஆளை பிடிக்க வேண்டுமென்று அவசரப்பட்டாள்.
“செல்வி.. கொஞ்சம் இரு. ஒன்னுக்கு ரெண்டா வாங்கிக்கறேன். இதெல்லாம் வச்சு நீ விளையாண்டிருக்கியா?”
“இல்ல. கொண்டுட்டு போனவுடனே அம்மா எடுத்து வச்சுடும். விளையாண்டா பழசாயிடுமாம். யாரும் வாங்க மாட்டாங்களாம்..” பரிதாபமாய் சொன்னாள்.
“சரி. நீ ஸ்கூலுக்கெல்லாம் போலியா..?”
“ப்ச்.. அதெல்லாம் எதுக்கு? ஸ்கூல் போறேனு சொன்னா அம்மா திட்டும். எனக்கும் ஆசையா இருக்கும். யூனிபார்ம்லாம் போட்டு போணும்னு. அதுக்கு நெறைய செலவாவுமாம். அம்மா சொன்னுச்சு..”
பையிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்து,
“நூறு ரூபாய்க்கு குடு. உன் யாபாரத்த கெடுத்துட்டேன். சரி, நான் சேத்துவுட்டா போறியா?”
ரூபாய்க்கு தகுந்தவாறு ஜாமான்களைப் பொறுக்கியவள் நிமிர்ந்தாள். கண்ணில் ஒளி.
“ம்ம். போறேன்…”
“உன் வீடு எங்க இருக்கு..? நாளைக்கு உன்கூட வந்து உங்க அம்மாக்கிட்ட வந்து பேசறேன்”
“அதோ அந்த ஆத்த தாண்டி போணும். சரி.. வரேன்ண்ணா.. ரொம்ப டாங்க்ஸ்..” பெரிய மனுஷி மாதிரி சொல்லி சென்றாள்.
அன்றும் வழக்கம் போல தனம் நக்கலாய் சிரித்தாள்.
“வரவர நெறைய செலவழிக்கறீங்க போல. புள்ள பொறக்கறதுக்குள்ள அந்த சின்னப் பொண்ணு உங்களாலேயே பெரிய பணக்காரி ஆயிடுவா போல..”
புன்னகையினூடே.. “அப்படித் தான் வச்சுக்கயேன். பாவம் சின்னப் பொண்ணு. வெயிலேயும் மழையிலேயும் கஷ்டப்படுது. அதான்.”
“உங்கள மாதிரி ஆளுங்களால தான் மழையே பெய்யுதுன்னு இன்னிக்கு டிவியில சொன்னாங்க..”
நக்கலாய் பேச செல்லமாய் நான் அடிக்க முற்பட அவள் நகர்ந்தாள். என்னை வம்பிற்கு இழுப்பது தான் அவள் முழுநேர பொழுதுபோக்கு. எப்படியும் சிரிக்க வைத்துவிடுவாள். ரசிக்க வைத்துவிடுவாள்.
மறுநாள். வழக்கம் போல அவளுக்காக சிக்னலருகில் காத்திருக்க ஆளைக்காணோம். என்னவாயிற்று என்று தெரியாமல் அவள் சொன்ன ஆற்றைத் தாண்டி இருந்த குடிசைப் பகுதிகளில் விசாரித்தால் அவள் பெயரில் யாரையும் தெரியாதென்று சொன்னார்கள். இரண்டு மணிநேரத்திற்கும் மேல் அலைந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வாசலிலேயே காத்திருந்தாள் தனம்.
“ஒரு போனாச்சும் பண்ணிருக்க கூடாதா..? என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்”
பையை வாங்கிக் கொண்டே சொல்ல..
“சொல்லலாம்னு தான் நெனச்சேன். கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு. நேரமானதே தெரியல. செமையா பசிக்குது. என்ன செஞ்சிருக்க..?”
“கைகாலெல்லாம் அலம்பிட்டு வாங்க.. எடுத்து வைக்கிறேன். உங்களுக்குப் புடிச்ச புட்டு”
அடுத்த வாரத்தில் ஏழாம் மாசம் என்று அவள் வீட்டில் கூட்டிப் போக கண்கலங்கினாள்.
“வேளா வேளைக்கு சாப்பிடணும். கன்னாபின்னானு ஹோட்டல்ல போய் சாப்பிடாதீங்க. சாதம் மட்டும் வச்சிக்குங்க. கொழம்பு பக்கத்து வீட்டு கலா அக்காக்கிட்ட வாங்கிக்குங்க. அவங்ககிட்ட சொல்லிட்டேன். மறக்காம உடம்ப பாத்துக்குங்க. தலை குளிச்சா நல்லா துவட்டுங்க. அப்படியே சீவாதீங்க. ஜலதோஷம் பிடிச்சுக்கும். கண்டபடி மழையில நனையாதீங்க..”
சரவெடி மாதிரி லிஸ்ட் போட்டுக் கொண்டே போனாள். அவளை ரயிலில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் நுழையும் போது உயிரில்லாத உடல் மாதிரி இருந்தது. ஊருக்குப் போகும் போது வீட்டின் ஜீவனையும் எடுத்துக்கிட்டு போயிட்டாள். மனசு வெறுமையாக இருந்தது.
அடுத்த இரண்டு வாரங்களில் செல்வி சொன்ன இடம் போய் தேடிப் பார்த்தேன். அலைந்தது தான் மிச்சம். ஆளைப் பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் வளைகாப்பிற்கு போய் வந்ததும் அவள் பிரசவ வலி எடுத்ததும் என நாட்கள் வேகமாக ஓடியது. பிரசவ நேரத்தில் வெளியில் இருந்து இதுவரை வேண்டாத தெய்வங்கள் எல்லாம் வேண்டி அழகுசிலை போல பெண்குழந்தை பெற்றெடுத்தாள். அப்படி அவளை மாதிரி மூக்கும் முழியும்.
ஆசை ஆசையாய் அவளருகில் போய் நெற்றியில் முத்தமிட்டு,
“அப்படியே உன்ன மாதிரி இருக்கா…?” தந்தையான பூரிப்புடன் சொன்னேன்.
இன்னும் களைப்பாய் இருந்த அவள்..
“நீங்க ஜெயிச்சுட்டீங்க…” சிரித்தாள்.
"ச்சீ.. அசடு...".. மறுபடியும் சிரித்தாள்.
ஒருமாதம் கழித்து பேர் வைக்கும் வைபவம். அதுவரை என்ன பேரென்று யாரிடமும் சொல்லவில்லை. புரோகிதர்,
“பொண்ணு பேரை காதில் சொல்லுங்கோ..!” என
குனிந்து என் மகள் காதில்
“செல்வி.. தமிழ்ச்செல்வி” என்றேன்.
கண்களில் ஆச்சர்யத்துடனும் இன்ப் அதிர்ச்சியிலும் தனம் என்னைப் பார்க்க அவளைப் பார்த்து கண்ணடித்தேன்.
அப்போது தான் மழை தூற ஆரம்பித்திருந்தது. எதையும் கண்டுக்காமல் அந்த சின்னக்கூடையில் இருந்த ப்ளாஸ்டிக் பொருட்களை விற்க முனைந்தாள் அவள். ஏறக்குறைய ஆறு வயதிருக்கும். கையில் மட்டும் சின்னக் கிழியலோடு மேல்சட்டையும் அழுக்கான பாவாடையும் அணிந்திருந்தாள். இந்த சிக்னலில் எப்போதும் அவளைப் பார்ப்பேன். சிக்னல் விழ எப்படியும் இரண்டு நிமிஷமாகும். அதற்குள் முடிந்தவரை விற்றுவிடவேண்டும் என்ற உத்வேகம் அவள் விற்பதில் இருக்கும். கடந்த ஒருவாரமாக என்னிடம் ஒரே மாதிரி பொருளை விற்றுக் கொண்டிருக்கிறாள். அன்றும் அப்படி தான் ஒரு பொருளையாவது என்னிடம் தள்ளிவிட முனைந்தாள். அத்தனையும் குழந்தைகள் விளையாடும் சின்ன சின்ன பொருட்கள்.
“ஏற்கனவே உன்கிட்ட தானே நிறைய வாங்கியிருக்கேனே. இன்னிக்கும் என்ன? திரும்ப திரும்ப ஒரே பொருளையே வாங்க சொல்ற.. இத வச்சுக்கிட்டு என்ன செய்யறது?”
“வீட்டுல பாப்பா இருந்தா விளையாடக்குடு. இல்லாட்டி யாராச்சும் சின்னப் புள்ளைங்க விளையாட வந்தா குடு. ப்ளீஸ்ண்ணே.. ஒன்னே ஒன்னு வாங்கிக்கண்ணே..”
பெரிய மனுஷி மாதிரி அவள் பேச சிக்னல் விழ இன்னும் முக்கால் நிமிஷமே இருந்தது. அதற்குள் ஒன்றையாவது என்னிடம் தள்ளிவிட முனைந்தாள். பால்மணம் மாறாத அவளின் முகத்தை கெஞ்சுவது போல் வைத்துக் கொள்ள அவசர அவசரமாக சட்டைப்பையில் இருந்து பணம் எடுத்து கொடுத்து வாங்கினேன். சிக்னல் விழுந்தால் கன்னாபின்னாவென்று ஹாரன் அடித்து காதை செவிடாக்குவார்கள். சிக்னல் விழ நான் கிளம்ப அவள் அடுத்த ஆளைத் தேடிப் போனாள் பெரிதாய் பெய்ய ஆரம்பித்த மழையிலும்.
மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி வீட்டுக்குள் நுழைந்ததும் துண்டை எடுத்து நீட்டினாள் என் தர்மபத்தினி. இனிய இல்லத்தரசி. இவளைக் கைப்பிடித்து ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு. வீட்டுக்குள் நான் நுழையும் போது எதிரில் இவள் புன்னகையோடு வரும் போது எப்பேர்ப்பட்ட தலைவலியும் பறந்து போகும். ஆபிஸில் மேனேஜரிடம் சண்டையா, கொடுக்கல் வாங்கலில் பிரச்சனையா.. எல்லாம் மறந்து போகும். அத்தனை வசீகரமான சிரிப்பு அவளுடையது. தலையை துவட்டிக் கொண்டே சட்டையை கழட்ட பையில் இருந்து டிபன் பாக்ஸை எடுக்கப் போனவள் பரிகாசமாய் சிரித்தாள்.
“இதோடு பதினொன்னாவது..”
“என்னாது..?”
“விளையாட்டு ஜாமான்… தினமும் ஒன்னு வாங்கிட்டு வர்றீங்க. அதுவும் ஒரே மாதிரி..க்கும்..”
செல்லமாய் நொடித்தாள்.
“அடியே.. எல்லாம் நம்ம குழந்தைக்குத் தானடி.. இப்போவே எல்லாத்தையும் சேத்துட்டு இருக்கேன்”
பனியனுடன் இருந்த நான் ஆசையாய் நன்றாய் மேடிட்டிருந்த அவள் வயிற்றை தடவ மறுபடி நக்கல் சிரிப்புடன்
“இதுக்கு ஒன்னு தான் கொறச்சல். உங்க புள்ள வந்ததும் உங்கள தான் கேக்கப் போறான்.. லூசாப்பா நீன்னு. ஒரே மாதிரி எத்தனை சாமான் செட்டு வாங்கி வச்சிருக்க..”
“அவன்.. இல்லே.. அவ.. நமக்கு பொண்குழந்த தான்..”
“அதெல்லாம் முடியாது. பையன் தான் பொறக்கப் போறான். இப்போவே நான் பேர் யோசிச்சுட்டு இருக்கேன்…”
அந்த விளையாட்டுப் பொருளை மறந்து எங்கள் விளையாட்டு தொடர்ந்தது.
“நீ ஒரு கர்நாடகம்… இளஞ்சேரலாதன்… இமயவரம்பன்னு ஏதாச்சும் பேர் வப்ப.. அதெல்லாம் முடியாது. பொண்ணு தான். நான் தான் பேர் வைப்பேன்..”
“ம்ஹூம்.. அதெல்லாம் முடியாது.. பையன் தான். நான் தான் பேர் வைப்பேன்.. நீங்க என்ன சொன்னாலும் சரி..”
சிணுங்க ஆரம்ப அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. நாளாக நாளாக அவள் முகம் பளபளப்பாகிக் கொண்டிருந்தது. அழகு கூடிக்கிட்டு இருக்கு. கர்ப்பகாலத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பாங்கன்னு சொன்னது உண்மை தான். தாய்மை என் தனத்தின் அழகை இன்னும் அழகாக்கிக் கொண்டிருந்தது.
தனம், அவளைக் கைபிடிக்கும் போது பி.எஸ்.ஸி முடித்து கனவுலகில் இருந்தாள். தமிழ் மேல் அளவுகடந்த காதல். அடிக்கடி கவிதை கதை என்றெழுதி என்னிடம் படிக்கக் கொடுப்பாள். அதுவரை அதிகம் தமிழ் படிக்காததாலும் அவ்வளவு ஆர்வம் இல்லாததாலும் கஷ்டப்படுவேன். அவளே படித்து அர்த்தமும் சொல்வாள். எல்லாம் என்னுடைய ‘ரொம்ப நல்லா எழுதறடி’னு நான் சொல்லும் வார்த்தைகளுக்காக. டி.வி. பார்ப்பதில் கூட சண்டை வரும். அவள் தமிழ் சானல் பார்க்க அடம் பிடிக்க நான் மூவிஸ் பார்க்க எங்கள் செல்ல சண்டையில் யாருமே பார்க்காமல் டி.வி மட்டும் ஓடிக் கொண்டிருக்கும்.
“சரி.. உனக்கும் வேணாம். எனக்கும் வேணாம். நமக்குள்ள ஒரு டீல். பொண்ணு பொறந்தா நான் பேர் வைப்பேன்… நேஹா, சுஷ்மிதானு ஏதோ ஒன்னு. பையன் பொறந்தா நீ பேர் வைய்யி. ஆனா பேர் வைக்கற வரைக்கும் ஒருத்தருக்கொருத்தர் தெரியக் கூடாது என்ன பேர்னு. என்கிட்ட கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது..”
சின்னதாய் முகம் சுருங்கி “ம்ம்.. சரி..”. உடனே மலர்ந்தவளாய், “தலைய சீக்கிரம் தோட்டிட்டு வாங்க. உங்களுக்குப் புடிச்ச பலகாரம் பண்ணிருக்கேன்..”
அடுத்தநாளும் அப்படியே. ஆனால் கொஞ்ச நல்ல சொக்காய் போட்டு வந்தாள். சிக்னல் தான் வண்டியை நிறுத்திவிட்டு அவளைக் கூப்பிட்டேன். வண்டியை பார்த்து நிதானித்து வந்தாள். என்னைப் பார்த்து வழக்கமான சிரிப்பு.
“பேர் என்ன?”
“செல்வி…”
“அதான் உன் பேரா…?”
“இல்ல.. தமிழ்ச் செல்வி. எதுக்கு கேக்கறீங்க?”
விற்பதற்கு அடுத்த ஆளை பிடிக்க வேண்டுமென்று அவசரப்பட்டாள்.
“செல்வி.. கொஞ்சம் இரு. ஒன்னுக்கு ரெண்டா வாங்கிக்கறேன். இதெல்லாம் வச்சு நீ விளையாண்டிருக்கியா?”
“இல்ல. கொண்டுட்டு போனவுடனே அம்மா எடுத்து வச்சுடும். விளையாண்டா பழசாயிடுமாம். யாரும் வாங்க மாட்டாங்களாம்..” பரிதாபமாய் சொன்னாள்.
“சரி. நீ ஸ்கூலுக்கெல்லாம் போலியா..?”
“ப்ச்.. அதெல்லாம் எதுக்கு? ஸ்கூல் போறேனு சொன்னா அம்மா திட்டும். எனக்கும் ஆசையா இருக்கும். யூனிபார்ம்லாம் போட்டு போணும்னு. அதுக்கு நெறைய செலவாவுமாம். அம்மா சொன்னுச்சு..”
பையிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்து,
“நூறு ரூபாய்க்கு குடு. உன் யாபாரத்த கெடுத்துட்டேன். சரி, நான் சேத்துவுட்டா போறியா?”
ரூபாய்க்கு தகுந்தவாறு ஜாமான்களைப் பொறுக்கியவள் நிமிர்ந்தாள். கண்ணில் ஒளி.
“ம்ம். போறேன்…”
“உன் வீடு எங்க இருக்கு..? நாளைக்கு உன்கூட வந்து உங்க அம்மாக்கிட்ட வந்து பேசறேன்”
“அதோ அந்த ஆத்த தாண்டி போணும். சரி.. வரேன்ண்ணா.. ரொம்ப டாங்க்ஸ்..” பெரிய மனுஷி மாதிரி சொல்லி சென்றாள்.
அன்றும் வழக்கம் போல தனம் நக்கலாய் சிரித்தாள்.
“வரவர நெறைய செலவழிக்கறீங்க போல. புள்ள பொறக்கறதுக்குள்ள அந்த சின்னப் பொண்ணு உங்களாலேயே பெரிய பணக்காரி ஆயிடுவா போல..”
புன்னகையினூடே.. “அப்படித் தான் வச்சுக்கயேன். பாவம் சின்னப் பொண்ணு. வெயிலேயும் மழையிலேயும் கஷ்டப்படுது. அதான்.”
“உங்கள மாதிரி ஆளுங்களால தான் மழையே பெய்யுதுன்னு இன்னிக்கு டிவியில சொன்னாங்க..”
நக்கலாய் பேச செல்லமாய் நான் அடிக்க முற்பட அவள் நகர்ந்தாள். என்னை வம்பிற்கு இழுப்பது தான் அவள் முழுநேர பொழுதுபோக்கு. எப்படியும் சிரிக்க வைத்துவிடுவாள். ரசிக்க வைத்துவிடுவாள்.
மறுநாள். வழக்கம் போல அவளுக்காக சிக்னலருகில் காத்திருக்க ஆளைக்காணோம். என்னவாயிற்று என்று தெரியாமல் அவள் சொன்ன ஆற்றைத் தாண்டி இருந்த குடிசைப் பகுதிகளில் விசாரித்தால் அவள் பெயரில் யாரையும் தெரியாதென்று சொன்னார்கள். இரண்டு மணிநேரத்திற்கும் மேல் அலைந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வாசலிலேயே காத்திருந்தாள் தனம்.
“ஒரு போனாச்சும் பண்ணிருக்க கூடாதா..? என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்”
பையை வாங்கிக் கொண்டே சொல்ல..
“சொல்லலாம்னு தான் நெனச்சேன். கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு. நேரமானதே தெரியல. செமையா பசிக்குது. என்ன செஞ்சிருக்க..?”
“கைகாலெல்லாம் அலம்பிட்டு வாங்க.. எடுத்து வைக்கிறேன். உங்களுக்குப் புடிச்ச புட்டு”
அடுத்த வாரத்தில் ஏழாம் மாசம் என்று அவள் வீட்டில் கூட்டிப் போக கண்கலங்கினாள்.
“வேளா வேளைக்கு சாப்பிடணும். கன்னாபின்னானு ஹோட்டல்ல போய் சாப்பிடாதீங்க. சாதம் மட்டும் வச்சிக்குங்க. கொழம்பு பக்கத்து வீட்டு கலா அக்காக்கிட்ட வாங்கிக்குங்க. அவங்ககிட்ட சொல்லிட்டேன். மறக்காம உடம்ப பாத்துக்குங்க. தலை குளிச்சா நல்லா துவட்டுங்க. அப்படியே சீவாதீங்க. ஜலதோஷம் பிடிச்சுக்கும். கண்டபடி மழையில நனையாதீங்க..”
சரவெடி மாதிரி லிஸ்ட் போட்டுக் கொண்டே போனாள். அவளை ரயிலில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் நுழையும் போது உயிரில்லாத உடல் மாதிரி இருந்தது. ஊருக்குப் போகும் போது வீட்டின் ஜீவனையும் எடுத்துக்கிட்டு போயிட்டாள். மனசு வெறுமையாக இருந்தது.
அடுத்த இரண்டு வாரங்களில் செல்வி சொன்ன இடம் போய் தேடிப் பார்த்தேன். அலைந்தது தான் மிச்சம். ஆளைப் பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் வளைகாப்பிற்கு போய் வந்ததும் அவள் பிரசவ வலி எடுத்ததும் என நாட்கள் வேகமாக ஓடியது. பிரசவ நேரத்தில் வெளியில் இருந்து இதுவரை வேண்டாத தெய்வங்கள் எல்லாம் வேண்டி அழகுசிலை போல பெண்குழந்தை பெற்றெடுத்தாள். அப்படி அவளை மாதிரி மூக்கும் முழியும்.
ஆசை ஆசையாய் அவளருகில் போய் நெற்றியில் முத்தமிட்டு,
“அப்படியே உன்ன மாதிரி இருக்கா…?” தந்தையான பூரிப்புடன் சொன்னேன்.
இன்னும் களைப்பாய் இருந்த அவள்..
“நீங்க ஜெயிச்சுட்டீங்க…” சிரித்தாள்.
"ச்சீ.. அசடு...".. மறுபடியும் சிரித்தாள்.
ஒருமாதம் கழித்து பேர் வைக்கும் வைபவம். அதுவரை என்ன பேரென்று யாரிடமும் சொல்லவில்லை. புரோகிதர்,
“பொண்ணு பேரை காதில் சொல்லுங்கோ..!” என
குனிந்து என் மகள் காதில்
“செல்வி.. தமிழ்ச்செல்வி” என்றேன்.
கண்களில் ஆச்சர்யத்துடனும் இன்ப் அதிர்ச்சியிலும் தனம் என்னைப் பார்க்க அவளைப் பார்த்து கண்ணடித்தேன்.