சசிதரன்
21-07-2010, 04:18 PM
உங்களால் வேறெதுவும்
செய்ய இயலாது.
சாலை விபத்தொன்றில்
சாகக் கிடப்பவனின் கடைசிப் பார்வையைத்
தவிர்த்து விடுவதைத் தவிர
உங்கள் மீது பாய்ந்த
துரோகத்தின் கூரிய வாளொன்றை
உங்கள் கைவாளாய் மாற்றிக் கொள்வதைத் தவிர
காதலா காமமா
யாதென குழம்பும் வேளையில்
நட்பென அதற்குப் பெயரிடுவதைத் தவிர
எந்தவொரு மரண ஊர்வலத்திலும்
மரணித்த நபர் நீங்களில்லையென
நிம்மதியடைவதைத் தவிர
உங்களால் வேறெதுவும்
செய்ய இயலாது.
ஓரிரு துளி கண்ணீரோ
கரம்கூப்பி பிரார்த்தனையோ..
இவையன்றி
உங்களால் வேறெதுவுமே
செய்ய இயலாது.
செய்ய இயலாது.
சாலை விபத்தொன்றில்
சாகக் கிடப்பவனின் கடைசிப் பார்வையைத்
தவிர்த்து விடுவதைத் தவிர
உங்கள் மீது பாய்ந்த
துரோகத்தின் கூரிய வாளொன்றை
உங்கள் கைவாளாய் மாற்றிக் கொள்வதைத் தவிர
காதலா காமமா
யாதென குழம்பும் வேளையில்
நட்பென அதற்குப் பெயரிடுவதைத் தவிர
எந்தவொரு மரண ஊர்வலத்திலும்
மரணித்த நபர் நீங்களில்லையென
நிம்மதியடைவதைத் தவிர
உங்களால் வேறெதுவும்
செய்ய இயலாது.
ஓரிரு துளி கண்ணீரோ
கரம்கூப்பி பிரார்த்தனையோ..
இவையன்றி
உங்களால் வேறெதுவுமே
செய்ய இயலாது.