கோபாலன்
19-07-2010, 01:09 PM
நட்பிலக்கணம்
வாடிய பூவைக்கண்டாலே வதங்கிப்போகும் நீ
எனக்காய்
வானம் உயரமென்று வெட்டிவிடத் துணிந்தாய்!
பனித்துளி பாரமென்று கலங்கிப்போகும் நீ
எனக்காய்
கடல் ஆழமென்று கண்மாயாக்கத் துடித்தாய் !
நிலவொளி சுடுமென்று ஒதுங்கிப்போகும் நீ
எனக்காய்
சூரியச்சுடரொளி வெம்மைஎன்று பொசுக்கிவிடக் கொதித்தாய் !
தென்றல்காற்று தீங்கென்று தலைதெறிக்கும் நீ
எனக்காய்
சூறாவளி சுலபமென்று சுழற்றி தலைகவிழ்த்தாய் !
கடினமென்று மலைக்கும்போது மடியில்தாங்கும் நீ
எனக்காய்
மணல்கூட நிழலைச்சுடுமென்று மடித்துவிட முயன்றாய்!
உலகமே கூடி வந்தாலும் மயங்காது எதிர்த்து நிற்பேன்
ஆனால்
ஒருநொடி என்னை நீங்கினால் மனம் தளர்ந்து உயிர் துறப்பேன் !
வாடிய பூவைக்கண்டாலே வதங்கிப்போகும் நீ
எனக்காய்
வானம் உயரமென்று வெட்டிவிடத் துணிந்தாய்!
பனித்துளி பாரமென்று கலங்கிப்போகும் நீ
எனக்காய்
கடல் ஆழமென்று கண்மாயாக்கத் துடித்தாய் !
நிலவொளி சுடுமென்று ஒதுங்கிப்போகும் நீ
எனக்காய்
சூரியச்சுடரொளி வெம்மைஎன்று பொசுக்கிவிடக் கொதித்தாய் !
தென்றல்காற்று தீங்கென்று தலைதெறிக்கும் நீ
எனக்காய்
சூறாவளி சுலபமென்று சுழற்றி தலைகவிழ்த்தாய் !
கடினமென்று மலைக்கும்போது மடியில்தாங்கும் நீ
எனக்காய்
மணல்கூட நிழலைச்சுடுமென்று மடித்துவிட முயன்றாய்!
உலகமே கூடி வந்தாலும் மயங்காது எதிர்த்து நிற்பேன்
ஆனால்
ஒருநொடி என்னை நீங்கினால் மனம் தளர்ந்து உயிர் துறப்பேன் !