நாகரா
12-07-2010, 10:13 AM
இருப்பின் அகண்ட விரிவில்
குவிந்து திரளும் புள்ளி
"நான்"
மொத்த இருப்பின் அழுத்தம்
என்னைத் துளைத்துச்
செய்த இருதயத் துளையில்
"நான்"
மொத்தமாய்க் கழிய
இருப்பின் அகண்ட விரிவாய்
என்னை விளங்கி
"இருக்கிறேன்"
சுயம் "நான்"
இருப்பின் அகண்ட விரிவாம்
அயல் "அது"வாய்
தயவாய்ப் படர்கிறேன்.
அயலது தீ எனில்
சுயம் "நான்" வெம்மை போல்
இணை பிரியாதிருக்கிறோம்.
"நீர்" எனும்
முன்னிலைத் தண்மை
தீயதன்
உள்ளுறைத் தன்மை
தீயது கரும யோகம்
நீரது பத்தி யோகம்
வெம்மை நானது ஞான யோகம்
படர்க்கை முன்னிலை தன்மை
மூன்றும் பின்னிப் புணர்ந்த
ஓர்மை யாமே
நான்மீகம் சுட்டும் மகாயோகம்
கருமம் அடி: வயிறு
பத்தி நடு: மார்பு
ஞானம் முடி: தலை
மகா மனிதம்
அடி நடு முடி
யாமே
மெய்யெடுத்தோம்
யாமே!
யாம் "உயிர்மை"
மெய்யிருக்க
மரண பயமேன்!?
பிடிபடா அழகனைப்
படத்திலும் கல்லிலும்
பிடிக்கும் அவலம்!
அன்பின் திருமுகம்
செப்புங் குருமொழி
நெஞ்சுள் முழங்க
அவலமே பிடிக்கும்
அவமய மனம்!
குமரன் குருபரன்
அமர்ந்தான் இருதயம்!
"யாமிருக்க பயமேன்!?"
மந்திரம் கேண்மின்!
புந்தியில் தெறிக்கும்
நான்மீகம்!
குவிந்து திரளும் புள்ளி
"நான்"
மொத்த இருப்பின் அழுத்தம்
என்னைத் துளைத்துச்
செய்த இருதயத் துளையில்
"நான்"
மொத்தமாய்க் கழிய
இருப்பின் அகண்ட விரிவாய்
என்னை விளங்கி
"இருக்கிறேன்"
சுயம் "நான்"
இருப்பின் அகண்ட விரிவாம்
அயல் "அது"வாய்
தயவாய்ப் படர்கிறேன்.
அயலது தீ எனில்
சுயம் "நான்" வெம்மை போல்
இணை பிரியாதிருக்கிறோம்.
"நீர்" எனும்
முன்னிலைத் தண்மை
தீயதன்
உள்ளுறைத் தன்மை
தீயது கரும யோகம்
நீரது பத்தி யோகம்
வெம்மை நானது ஞான யோகம்
படர்க்கை முன்னிலை தன்மை
மூன்றும் பின்னிப் புணர்ந்த
ஓர்மை யாமே
நான்மீகம் சுட்டும் மகாயோகம்
கருமம் அடி: வயிறு
பத்தி நடு: மார்பு
ஞானம் முடி: தலை
மகா மனிதம்
அடி நடு முடி
யாமே
மெய்யெடுத்தோம்
யாமே!
யாம் "உயிர்மை"
மெய்யிருக்க
மரண பயமேன்!?
பிடிபடா அழகனைப்
படத்திலும் கல்லிலும்
பிடிக்கும் அவலம்!
அன்பின் திருமுகம்
செப்புங் குருமொழி
நெஞ்சுள் முழங்க
அவலமே பிடிக்கும்
அவமய மனம்!
குமரன் குருபரன்
அமர்ந்தான் இருதயம்!
"யாமிருக்க பயமேன்!?"
மந்திரம் கேண்மின்!
புந்தியில் தெறிக்கும்
நான்மீகம்!