கலையரசி
03-07-2010, 02:57 PM
”அம்மா! இனிமேல் நான் கல்லூரிக்குப் போகமாட்டேன்,” என்று சொல்லி, கையிலிருந்த புத்தகத்தை மேஜை மேல் தூக்கி எறிந்தவாறு கோபமாக உள்ளே நுழைந்தேன்.
“ஏன்?” என்பது போல் என்னை நிமிர்ந்து பார்த்த அம்மாவின் பார்வையில் உக்கிரம் தெரிந்தது.
“இனிமேல் கதை எழுதறதை நீங்க நிறுத்தினாலொழிய, நான் கல்லூரிக்குப் போக மாட்டேன்.”
“நான் கதை எழுதறதுக்கும், நீ கல்லூரி போறதுக்கும் என்னடி சம்பந்தம்?”
“ஒங்க இஷ்டத்துக்கு எப்படியெல்லாமோ நீங்க கதை எழுதறீங்க. கல்லூரியில எல்லாரும், ஒங்க கதையைப் பத்தி என்ன மாதிரி கிண்டல் செய்றாங்கன்னு எனக்கில்ல தெரியும்?”
“பேசுறவங்களை எங்கிட்ட வந்து பேசச் சொல்லுடி. அவங்க விமர்சனத்துக்குப் பயந்து, படிப்பைப் பாதியில நிறுத்தறது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தின கதை போலத்தான்.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க கதையை நிறுத்தலேன்னா, நான் போக மாட்டேன்.”
“சரி. உன்னிஷ்டம். நாளையிலேர்ந்து நீ போக வேண்டாம்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்ற அம்மாவைப் பார்த்துத் திகைத்து நின்றேன்.
பெண்ணுக்குப் படிப்பு தருவதைத் தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட அம்மாவா இப்படிச் சொல்வது? பள்ளியில் ஆசிரியையாகச் சம்பாதிக்கும் அம்மா ஏன் இந்தக் கதையெல்லாம் எழுத வேண்டும்? கன்னாபின்னா என்று எதையாவது எழுதி ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஏன் ஆளாக வேண்டும்?
அன்றிரவு எனக்கு உறக்கமே வரவில்லை. அம்மாவிடம் வந்து நானும் அவ்வளவு கோபமாகப் பேசியிருக்கக் கூடாது. என்ன செய்வது? அம்மாவைப் பர்றி மற்றவர்கள் இழிவாகப் பேசுவதை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? அம்மா ஒரு சாடிஸ்டாம். அதனால தான் அப்பா, அம்மாவை விட்டுட்டு ஓடிட்டாராம். இதெல்லாம் என் காதுபட கல்லூரியில பேசினது. இதை எப்படி நான் அம்மாக்கிட்ட சொல்றது?
அப்பா ஏன் அம்மாவை விட்டுட்டுப் போனார்? நானும் எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்துட்டேன். சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், நானே சொல்வேன்பாங்க. அம்மாவின் பிடிவாதம் எனக்குத் தெரியும். சொல்லக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டா, அவ்வளவு தான்.
அப்பா எதனால ஓடிப் போயிருந்தா எனக்கென்ன? என்னைப் பொறுத்தவரைக்கும் அம்மா தான் என் தெய்வம். அவங்களைப் பத்தி தப்பா பேசறதை, என்னால தாங்கிக்க முடியாது.
நாளையிலேர்ந்து கல்லூரி கிடையாது என்று நினைத்த போது வருத்தமாயிருந்தது. ஒரு வீம்புக்காகத் தான் அப்படிப் பேசினேனே தவிர, உண்மையில படிப்பை நிறுத்தறதைப் பத்தி என்னால கற்பனை கூடப் பண்ண முடியல.
அந்தக் கதையை நானும் தான் படிச்சேன். மனைவி மேல மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்தி விட்டு விடுகிறான் கணவன். போலீசிடம் தன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென்று அவள் காலைப் பிடித்து அழுகிறான். மன்னிக்கும்படி வேண்டுகிறான். இருந்தும் அவனை அவள் போலீசில் காட்டிக் கொடுக்கும் போது, எனக்கும் பாவமாய்த்தான் இருந்தது.
அம்மா கதை எழுதிட்டா, யார் சொன்னாலும் முடிவை மாத்த மாட்டாங்க. புருஷன் என்ன தப்பு செஞ்சாலும் மன்னிக்கிறது தான் பெண்மையாம். இந்தக் கதையில வர்ற கதாநாயகிக்குப் பெண்மையே இல்லியாம். இன்னும் என்னென்னவோ கல்லூரியில பேசினாங்க. பாதி எனக்கு மறந்து போயிடுச்சு. கதையை விமர்சனம் பண்றவங்க எதுக்குச் சொந்த வாழ்க்கையைப் பத்திப் பேசணும்? என்னைக் கோபப்பட வைக்கணும்னு தான் என் காதுபட பேசியிருக்காங்க. இதுக்காக நான் ஏன் கல்லூரிக்குப் போகாம இருக்கணும்? எவ்வளவு நாள் பேசுவாங்க? பேசிப் பேசி அலுத்துப் போயிடுச்சுன்னா தானா நிறுத்திடுவாங்க.
அம்மாக்கிட்ட மறுபடியும் கல்லூரிக்குப் போறதைப் பத்திக் கேட்க வெட்கமாயிருக்கு. நேத்து ரொம்ப வீம்பா பேசினியேன்னு கேட்பாங்க. பரவாயில்ல. எப்படியாவது மன்னிப்பு கேட்டுட்டு நாளையிலேர்ந்து போகணும்னு தீர்மானிச்சிட்டேன்.
மறுநாள் நான் விடியற்காலையிலேயே எழுந்து விட்டேன். அன்று வந்திருக்கும் கடிதங்களைக் கொண்டு வந்து அம்மாவின் மேசை மேல் அடுக்கிய போது, பெரியதாக இருந்த கவர் கண்ணில் படவே அதை எடுத்துப் பிரித்தேன். வழக்கமாக அம்மாவிற்கு வரும் கடிதங்களை நான் தான் பிரித்து வைப்பது வழக்கம். பெரும்பாலானவை வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள் தாம்.
கவரைப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தவுடன், ஒரு கணம் திடுக்கிட்டு நின்று விட்டேன்.
‘அன்புள்ள கீதா’ என்று அம்மாவின் பெயரை விளித்து எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதத்தில்.
நெஞ்சு படபடக்க, நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்களைத் துடைத்தவாறே அவசர அவசரமாகப் படிக்கலானேன்.
சென்னை, 07/06/2000
”அன்புள்ள கீதா’,
இப்படி அழைக்க எனக்கு உரிமையில்லை என்றாலும் நான் இப்படி விளித்திருப்பதற்கு முதலில் என்னை மன்னித்து விடு. தயவு செய்து கடிதத்தைக் கிழித்து எறிந்து விடாதே. கடந்த வாரம், வார இதழில் உன் புகைப்படத்துடன் வெளியான கதையைப் படித்தேன்.
அன்று நான் உன் மேல் மூட்டிய நெருப்பு இன்னும் அணையாமல் உன் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது என்ற உண்மையை அறிந்தேன். உன் கதாநாயகி போல், அன்று நீ என்னைக் காட்டிக் கொடுத்திருந்தாயானால், அன்றோடு என் வாழ்வு முடிந்திருக்கும். ஆனால் நீயோ என்னை மன்னித்தாய். மறு வாழ்வு அளித்தாய். ஆனால் நான் உனக்குக் கொடுத்த பரிசு......
கையில் ஒரு பெண் குழந்தையுடன் இருந்த உன்னை விட்டு விட்டு ஓடி விட்டேன். தீயில் கருகிய உன் பிசாசு முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல், உன்னை வாழாவெட்டியாக்கி விட்டு நான் மட்டும் ஒரு நல்ல வாழ்வைத் தேடிக் கொண்டேன்.
இன்று மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையில், கையில் பெண் குழந்தையோடு தனியாளாக இந்தச் சமுதாயத்தில் என்னென்ன துன்பங்களை நீ அனுபவித்திருப்பாய் என்று நினைக்கும் போது என் நெஞ்சமே நடுங்குகிறது.
இந்த ஜென்மத்தில் எனக்கு மன்னிப்பு கிடையாது என்று தெரிந்தும், உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். இந்த முறை என்னிடத்தில் போலித்தனம் இல்லை. தண்டனை என்று தனியாக எதுவும் கொடுக்கத் தேவையில்லை. என் மனசாட்சியே என்னைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.
இந்தக் கதையில் வரும் கதாநாயகனைத் தண்டிப்பதன் மூலம் என்னைப் பழி வாங்கிய திருப்தி, உனக்குக் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்....”
என்று நீண்டு கொண்டே சென்றது கடிதம்.
அதற்கு மேல் என்னால் படிக்க முடியாதவாறு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு மறைத்தது. ’ஓ அம்மா!’ என்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. ’இவ்வளவு பெரிய சோகக்கதையை நெஞ்சினிலே சுமந்து கொண்டு சாதாரணமாய் இருக்க எப்படி முடிகிறது உங்களால்?’
“என்ன கடிதம் அது?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்த அம்மாவிடம் கடிதத்தினைக் கொடுத்து விட்டு, அவர்களது கால்களைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.
(குங்குமத்தில் எழுதிய கதை)
“ஏன்?” என்பது போல் என்னை நிமிர்ந்து பார்த்த அம்மாவின் பார்வையில் உக்கிரம் தெரிந்தது.
“இனிமேல் கதை எழுதறதை நீங்க நிறுத்தினாலொழிய, நான் கல்லூரிக்குப் போக மாட்டேன்.”
“நான் கதை எழுதறதுக்கும், நீ கல்லூரி போறதுக்கும் என்னடி சம்பந்தம்?”
“ஒங்க இஷ்டத்துக்கு எப்படியெல்லாமோ நீங்க கதை எழுதறீங்க. கல்லூரியில எல்லாரும், ஒங்க கதையைப் பத்தி என்ன மாதிரி கிண்டல் செய்றாங்கன்னு எனக்கில்ல தெரியும்?”
“பேசுறவங்களை எங்கிட்ட வந்து பேசச் சொல்லுடி. அவங்க விமர்சனத்துக்குப் பயந்து, படிப்பைப் பாதியில நிறுத்தறது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தின கதை போலத்தான்.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க கதையை நிறுத்தலேன்னா, நான் போக மாட்டேன்.”
“சரி. உன்னிஷ்டம். நாளையிலேர்ந்து நீ போக வேண்டாம்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்ற அம்மாவைப் பார்த்துத் திகைத்து நின்றேன்.
பெண்ணுக்குப் படிப்பு தருவதைத் தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட அம்மாவா இப்படிச் சொல்வது? பள்ளியில் ஆசிரியையாகச் சம்பாதிக்கும் அம்மா ஏன் இந்தக் கதையெல்லாம் எழுத வேண்டும்? கன்னாபின்னா என்று எதையாவது எழுதி ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஏன் ஆளாக வேண்டும்?
அன்றிரவு எனக்கு உறக்கமே வரவில்லை. அம்மாவிடம் வந்து நானும் அவ்வளவு கோபமாகப் பேசியிருக்கக் கூடாது. என்ன செய்வது? அம்மாவைப் பர்றி மற்றவர்கள் இழிவாகப் பேசுவதை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? அம்மா ஒரு சாடிஸ்டாம். அதனால தான் அப்பா, அம்மாவை விட்டுட்டு ஓடிட்டாராம். இதெல்லாம் என் காதுபட கல்லூரியில பேசினது. இதை எப்படி நான் அம்மாக்கிட்ட சொல்றது?
அப்பா ஏன் அம்மாவை விட்டுட்டுப் போனார்? நானும் எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்துட்டேன். சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், நானே சொல்வேன்பாங்க. அம்மாவின் பிடிவாதம் எனக்குத் தெரியும். சொல்லக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டா, அவ்வளவு தான்.
அப்பா எதனால ஓடிப் போயிருந்தா எனக்கென்ன? என்னைப் பொறுத்தவரைக்கும் அம்மா தான் என் தெய்வம். அவங்களைப் பத்தி தப்பா பேசறதை, என்னால தாங்கிக்க முடியாது.
நாளையிலேர்ந்து கல்லூரி கிடையாது என்று நினைத்த போது வருத்தமாயிருந்தது. ஒரு வீம்புக்காகத் தான் அப்படிப் பேசினேனே தவிர, உண்மையில படிப்பை நிறுத்தறதைப் பத்தி என்னால கற்பனை கூடப் பண்ண முடியல.
அந்தக் கதையை நானும் தான் படிச்சேன். மனைவி மேல மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்தி விட்டு விடுகிறான் கணவன். போலீசிடம் தன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென்று அவள் காலைப் பிடித்து அழுகிறான். மன்னிக்கும்படி வேண்டுகிறான். இருந்தும் அவனை அவள் போலீசில் காட்டிக் கொடுக்கும் போது, எனக்கும் பாவமாய்த்தான் இருந்தது.
அம்மா கதை எழுதிட்டா, யார் சொன்னாலும் முடிவை மாத்த மாட்டாங்க. புருஷன் என்ன தப்பு செஞ்சாலும் மன்னிக்கிறது தான் பெண்மையாம். இந்தக் கதையில வர்ற கதாநாயகிக்குப் பெண்மையே இல்லியாம். இன்னும் என்னென்னவோ கல்லூரியில பேசினாங்க. பாதி எனக்கு மறந்து போயிடுச்சு. கதையை விமர்சனம் பண்றவங்க எதுக்குச் சொந்த வாழ்க்கையைப் பத்திப் பேசணும்? என்னைக் கோபப்பட வைக்கணும்னு தான் என் காதுபட பேசியிருக்காங்க. இதுக்காக நான் ஏன் கல்லூரிக்குப் போகாம இருக்கணும்? எவ்வளவு நாள் பேசுவாங்க? பேசிப் பேசி அலுத்துப் போயிடுச்சுன்னா தானா நிறுத்திடுவாங்க.
அம்மாக்கிட்ட மறுபடியும் கல்லூரிக்குப் போறதைப் பத்திக் கேட்க வெட்கமாயிருக்கு. நேத்து ரொம்ப வீம்பா பேசினியேன்னு கேட்பாங்க. பரவாயில்ல. எப்படியாவது மன்னிப்பு கேட்டுட்டு நாளையிலேர்ந்து போகணும்னு தீர்மானிச்சிட்டேன்.
மறுநாள் நான் விடியற்காலையிலேயே எழுந்து விட்டேன். அன்று வந்திருக்கும் கடிதங்களைக் கொண்டு வந்து அம்மாவின் மேசை மேல் அடுக்கிய போது, பெரியதாக இருந்த கவர் கண்ணில் படவே அதை எடுத்துப் பிரித்தேன். வழக்கமாக அம்மாவிற்கு வரும் கடிதங்களை நான் தான் பிரித்து வைப்பது வழக்கம். பெரும்பாலானவை வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள் தாம்.
கவரைப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தவுடன், ஒரு கணம் திடுக்கிட்டு நின்று விட்டேன்.
‘அன்புள்ள கீதா’ என்று அம்மாவின் பெயரை விளித்து எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதத்தில்.
நெஞ்சு படபடக்க, நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்களைத் துடைத்தவாறே அவசர அவசரமாகப் படிக்கலானேன்.
சென்னை, 07/06/2000
”அன்புள்ள கீதா’,
இப்படி அழைக்க எனக்கு உரிமையில்லை என்றாலும் நான் இப்படி விளித்திருப்பதற்கு முதலில் என்னை மன்னித்து விடு. தயவு செய்து கடிதத்தைக் கிழித்து எறிந்து விடாதே. கடந்த வாரம், வார இதழில் உன் புகைப்படத்துடன் வெளியான கதையைப் படித்தேன்.
அன்று நான் உன் மேல் மூட்டிய நெருப்பு இன்னும் அணையாமல் உன் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது என்ற உண்மையை அறிந்தேன். உன் கதாநாயகி போல், அன்று நீ என்னைக் காட்டிக் கொடுத்திருந்தாயானால், அன்றோடு என் வாழ்வு முடிந்திருக்கும். ஆனால் நீயோ என்னை மன்னித்தாய். மறு வாழ்வு அளித்தாய். ஆனால் நான் உனக்குக் கொடுத்த பரிசு......
கையில் ஒரு பெண் குழந்தையுடன் இருந்த உன்னை விட்டு விட்டு ஓடி விட்டேன். தீயில் கருகிய உன் பிசாசு முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல், உன்னை வாழாவெட்டியாக்கி விட்டு நான் மட்டும் ஒரு நல்ல வாழ்வைத் தேடிக் கொண்டேன்.
இன்று மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையில், கையில் பெண் குழந்தையோடு தனியாளாக இந்தச் சமுதாயத்தில் என்னென்ன துன்பங்களை நீ அனுபவித்திருப்பாய் என்று நினைக்கும் போது என் நெஞ்சமே நடுங்குகிறது.
இந்த ஜென்மத்தில் எனக்கு மன்னிப்பு கிடையாது என்று தெரிந்தும், உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். இந்த முறை என்னிடத்தில் போலித்தனம் இல்லை. தண்டனை என்று தனியாக எதுவும் கொடுக்கத் தேவையில்லை. என் மனசாட்சியே என்னைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.
இந்தக் கதையில் வரும் கதாநாயகனைத் தண்டிப்பதன் மூலம் என்னைப் பழி வாங்கிய திருப்தி, உனக்குக் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்....”
என்று நீண்டு கொண்டே சென்றது கடிதம்.
அதற்கு மேல் என்னால் படிக்க முடியாதவாறு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு மறைத்தது. ’ஓ அம்மா!’ என்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. ’இவ்வளவு பெரிய சோகக்கதையை நெஞ்சினிலே சுமந்து கொண்டு சாதாரணமாய் இருக்க எப்படி முடிகிறது உங்களால்?’
“என்ன கடிதம் அது?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்த அம்மாவிடம் கடிதத்தினைக் கொடுத்து விட்டு, அவர்களது கால்களைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.
(குங்குமத்தில் எழுதிய கதை)