shibly591
28-06-2010, 07:12 AM
மழை பொழியும் எல்லா இரவுகளிலும்
பிரிந்துபோன உன் ஞாபகம் கொஞ்சமேனும்
என்னை நனைத்துச்செல்லும்...
நாமிருவரும் பேசிய எத்தனையோ மழை இரவுகள் பற்றி
இப்போதெல்லாம் மௌனமாய் எனக்கு நானே பேசிக்கொள்கிறேன்..
ஒற்றைக்குடை
நீண்ட பாதை
அடைமழை
வழித்துணையாய் நீ
மறக்க முடியுமா ???
நான் எழுதும் காதல் கவிதைகளில்
உன்னை விட மழையின் வாசனையே அதிகம் மனம் நனைப்பதாய்
நீ சண்டையிட்ட நாளிலும் கொஞ்சம் மழை பெய்தது..
சின்னச்சின்ன ஊடல்களிலிருந்து
மீண்டும் நாம் பேசத்துவங்கும் எல்லா நாளிலும் மழை பெய்திருக்கிறது
கடைசியாய் உன் நிரந்தரப்பிரிவை நீ திட்டமாய் உரைத்தபோது
மண்ணிலும் என் கண்ணிலும் நிறையவே பெய்தது மழையும் அடைமழையும்..
உன் தொடர்பறுந்து சில பல வருடங்கள் உருண்டபின்னும்
உன்னை மறக்க விடாமல் பிரிவின் அத்தனை ரணங்களையும்
என்னில் நனைத்தபடி ...
இப்போதும் பெய்கிறது இரக்கமற்ற துரோக மழை..
- நிந்தவூர் ஷிப்லி -
பிரிந்துபோன உன் ஞாபகம் கொஞ்சமேனும்
என்னை நனைத்துச்செல்லும்...
நாமிருவரும் பேசிய எத்தனையோ மழை இரவுகள் பற்றி
இப்போதெல்லாம் மௌனமாய் எனக்கு நானே பேசிக்கொள்கிறேன்..
ஒற்றைக்குடை
நீண்ட பாதை
அடைமழை
வழித்துணையாய் நீ
மறக்க முடியுமா ???
நான் எழுதும் காதல் கவிதைகளில்
உன்னை விட மழையின் வாசனையே அதிகம் மனம் நனைப்பதாய்
நீ சண்டையிட்ட நாளிலும் கொஞ்சம் மழை பெய்தது..
சின்னச்சின்ன ஊடல்களிலிருந்து
மீண்டும் நாம் பேசத்துவங்கும் எல்லா நாளிலும் மழை பெய்திருக்கிறது
கடைசியாய் உன் நிரந்தரப்பிரிவை நீ திட்டமாய் உரைத்தபோது
மண்ணிலும் என் கண்ணிலும் நிறையவே பெய்தது மழையும் அடைமழையும்..
உன் தொடர்பறுந்து சில பல வருடங்கள் உருண்டபின்னும்
உன்னை மறக்க விடாமல் பிரிவின் அத்தனை ரணங்களையும்
என்னில் நனைத்தபடி ...
இப்போதும் பெய்கிறது இரக்கமற்ற துரோக மழை..
- நிந்தவூர் ஷிப்லி -