சசிதரன்
25-06-2010, 01:05 PM
நெடுநேரம் கேட்டிருந்த...
வழிதவறிய
ஒற்றை பறவையின் குரல்...
நின்று விட்டிருந்தது.
ஓர் பெருமழையினின்று...
சேகரித்த துளிகளை
கண்ணீரென சிந்தி கொண்டிருந்தது...
சாலையோர புங்கமரம்.
நிலவற்ற ஓர்
இரவு நேர வனமென...
அடர்ந்திருந்தது தனிமை.
உலர்ந்த உதடுகளில்...
இரை விழுங்கிய
ஓர் பாம்பென...
வார்த்தைகளை தின்று
அசையாதிருந்தது மௌனம்.
நான் மட்டுமே என்னோடு
உடனிருக்கும் தருணங்களில்...
மெல்ல தோள் தொட்டு
உடனமர்ந்து கொள்கிறது
புறக்கணிப்பின் பயங்கள்....
புறக்கணிப்பின் தடயம்
அழுந்த பதிந்த தருணங்கள்
குளிர் இரவென
சூழ்ந்திருக்கிறது
நீண்டு கொண்டேயிருக்கும்
இந்த இரவு...
அடுத்தடுத்த இரவுகளுக்கான
பயங்களை விதைக்கிறது.
இரவின் குளிர் தாங்காது
எரிக்க தொடங்குகிறேன்
என் கனவுகளை...
கனவுகளை மீட்டெடுக்க
ஆசைப்படும் நாளில்..
பற்றியெரியும் கனவுகளை அணைக்க
கண்ணீர் துளிகள் தேவைப்படலாம்..
அதிகமாகவே.
வழிதவறிய
ஒற்றை பறவையின் குரல்...
நின்று விட்டிருந்தது.
ஓர் பெருமழையினின்று...
சேகரித்த துளிகளை
கண்ணீரென சிந்தி கொண்டிருந்தது...
சாலையோர புங்கமரம்.
நிலவற்ற ஓர்
இரவு நேர வனமென...
அடர்ந்திருந்தது தனிமை.
உலர்ந்த உதடுகளில்...
இரை விழுங்கிய
ஓர் பாம்பென...
வார்த்தைகளை தின்று
அசையாதிருந்தது மௌனம்.
நான் மட்டுமே என்னோடு
உடனிருக்கும் தருணங்களில்...
மெல்ல தோள் தொட்டு
உடனமர்ந்து கொள்கிறது
புறக்கணிப்பின் பயங்கள்....
புறக்கணிப்பின் தடயம்
அழுந்த பதிந்த தருணங்கள்
குளிர் இரவென
சூழ்ந்திருக்கிறது
நீண்டு கொண்டேயிருக்கும்
இந்த இரவு...
அடுத்தடுத்த இரவுகளுக்கான
பயங்களை விதைக்கிறது.
இரவின் குளிர் தாங்காது
எரிக்க தொடங்குகிறேன்
என் கனவுகளை...
கனவுகளை மீட்டெடுக்க
ஆசைப்படும் நாளில்..
பற்றியெரியும் கனவுகளை அணைக்க
கண்ணீர் துளிகள் தேவைப்படலாம்..
அதிகமாகவே.