lenram80
24-06-2010, 05:49 PM
நிறைகளை குரல் வளை மட்டும்
குறைகளை வானம் தொட்டும்
கனப்படுத்தும் என் கணவா!
அருகில் வா! அறிவுரை கூறுகிறேன்!
அருகில் பார்த்தால் குழிகளாய்!
அண்ணாந்து ரசித்தால் வனப்பாய் வட்டமாய் - நிலா!
தனித்துப் பார்த்தால் எழுத்தாய்!
தொகுத்துப் படித்தால் கவியாய்!
சளித்துப் பார்க்காதே!
குவித்துப் பார்!
அணுவாய் பார்க்காதே!
மொத்தமாய் அணைத்துப் பார்!
மாசற்ற மலர் நான்!
குறையற்ற குறள் நான்!
என்று நானா சொன்னேன்?
எனக்கும்
இருமல், தும்மல் வரும்!
இடை, எடை கூடும்!
எப்போதும் சிரித்தாலும்
நானும் சிக்கலானவள் தான்!
நட்சத்திரமாய் பார்ப்பாயா?
பிரபஞ்சமாய் பார்ப்பாயா?
விழி திறந்து விசாலமாய் பாரடா!
உன் அடி முழுதும் என் அன்பு வேரடா!
குறைகளை வானம் தொட்டும்
கனப்படுத்தும் என் கணவா!
அருகில் வா! அறிவுரை கூறுகிறேன்!
அருகில் பார்த்தால் குழிகளாய்!
அண்ணாந்து ரசித்தால் வனப்பாய் வட்டமாய் - நிலா!
தனித்துப் பார்த்தால் எழுத்தாய்!
தொகுத்துப் படித்தால் கவியாய்!
சளித்துப் பார்க்காதே!
குவித்துப் பார்!
அணுவாய் பார்க்காதே!
மொத்தமாய் அணைத்துப் பார்!
மாசற்ற மலர் நான்!
குறையற்ற குறள் நான்!
என்று நானா சொன்னேன்?
எனக்கும்
இருமல், தும்மல் வரும்!
இடை, எடை கூடும்!
எப்போதும் சிரித்தாலும்
நானும் சிக்கலானவள் தான்!
நட்சத்திரமாய் பார்ப்பாயா?
பிரபஞ்சமாய் பார்ப்பாயா?
விழி திறந்து விசாலமாய் பாரடா!
உன் அடி முழுதும் என் அன்பு வேரடா!