பாரதி
16-06-2010, 06:15 PM
அன்று....
ஆடு மாடு மந்தை போல்
அடுத்தடுத்து மடிந்தோம்.
நேற்று வந்தது தீர்ப்பு!
நீதான் குற்றவாளி
கட்டு பணத்தை....
போ வீட்டுக்கென....
கூவி நீதியும் நீண்ட தீர்ப்பெழுதும்.
ஆண்டவனே கதியென
ஆண்டிருப்பாத்தாறு காத்திருந்து
கூண்டுப்பறவையென மனிதம் ஆகும்;
ஆண்டாண்டு முடியாததை
அடுத்த பத்து நாளில் செய்ய
அமைச்சரவையும் கூடும்.
அமெரிக்காவானாலும்
ஆண்டர்சனானாலும்
குற்றம் குற்றமேயென
அக்னிப்பிளம்பாய் அறிக்கை வீசும்.
அணு உலை அபாயம் மட்டும்
அமைதியாயிப்போது மூடிவைக்கும்.
ஆண்டர்சனிங்கு வந்தாலும்
அடுத்த இருபதாண்டிற்கு
அரசின் கஜானாதான்
அதற்கும் செலவு செய்யும்.
ஆகவே....
அப்போதைக்கு அழுததற்கு
இப்போதைக்கு வைக்கோலும்
இறந்த பின்னர் வாய்க்கரிசியும்
உண்டுமக்கென்று எழுதி வைக்கும்.
காந்தியின் கைத்தடி இருக்கும் மட்டும்
காவல் கையில் இருக்கும் மட்டும்
வசதி தேடும் வழக்குரைஞர் இருக்கும் மட்டும்
இதுதான் இந்தியாவில் எப்போதும் நடக்கும்.
ஆண்டு பல கடக்கும்;
அடுத்த முறை மீண்டுமிதே தீர்ப்பு வரும்
கையாளாகாத மனிதத்திற்கு
கண்ணீர் மட்டுமே கைகொடுக்கும்.
ஆடு மாடு மந்தை போல்
அடுத்தடுத்து மடிந்தோம்.
நேற்று வந்தது தீர்ப்பு!
நீதான் குற்றவாளி
கட்டு பணத்தை....
போ வீட்டுக்கென....
கூவி நீதியும் நீண்ட தீர்ப்பெழுதும்.
ஆண்டவனே கதியென
ஆண்டிருப்பாத்தாறு காத்திருந்து
கூண்டுப்பறவையென மனிதம் ஆகும்;
ஆண்டாண்டு முடியாததை
அடுத்த பத்து நாளில் செய்ய
அமைச்சரவையும் கூடும்.
அமெரிக்காவானாலும்
ஆண்டர்சனானாலும்
குற்றம் குற்றமேயென
அக்னிப்பிளம்பாய் அறிக்கை வீசும்.
அணு உலை அபாயம் மட்டும்
அமைதியாயிப்போது மூடிவைக்கும்.
ஆண்டர்சனிங்கு வந்தாலும்
அடுத்த இருபதாண்டிற்கு
அரசின் கஜானாதான்
அதற்கும் செலவு செய்யும்.
ஆகவே....
அப்போதைக்கு அழுததற்கு
இப்போதைக்கு வைக்கோலும்
இறந்த பின்னர் வாய்க்கரிசியும்
உண்டுமக்கென்று எழுதி வைக்கும்.
காந்தியின் கைத்தடி இருக்கும் மட்டும்
காவல் கையில் இருக்கும் மட்டும்
வசதி தேடும் வழக்குரைஞர் இருக்கும் மட்டும்
இதுதான் இந்தியாவில் எப்போதும் நடக்கும்.
ஆண்டு பல கடக்கும்;
அடுத்த முறை மீண்டுமிதே தீர்ப்பு வரும்
கையாளாகாத மனிதத்திற்கு
கண்ணீர் மட்டுமே கைகொடுக்கும்.