PDA

View Full Version : 90' - அப்படியுமொரு காலம் இருந்தது



M.Rishan Shareef
16-06-2010, 02:44 AM
90' - அப்படியுமொரு காலம் இருந்தது


அப்படியும் காலமொன்றிருந்தது

அக்காலத்தில் நாம்
இருபது வயதுகளின் யுவதிகள்
எமது குழுவில் இருந்தனர்
அவ்வயதையொத்த இளைஞர்களும்

அப்படியும் காலமொன்றிருந்தது

கவிதை நாடகம் பாடல் கூத்து
விவாதம் திரைப்படப் பிரதிகள் என
தேடித் தேடி அலைந்து திரிந்த
எண்ணற்ற அந்திப் பொழுதுகள்

அப்படியும் காலமொன்றிருந்தது

தெய்வத்துக்கு நிகராக
உளளத்தினுள் வீற்றிருந்த பிம்பங்களை
அவ்வாறே காத்திட
உணவின்றி
உறக்கமின்றி
தேனீர்தானுமின்றி
பொழுதுகள் பலவும் வாதம்புரிந்த

அப்படியும் காலமொன்றிருந்தது

எதிர்பார்ப்புகள் கனத்த
புத்திளம் இதயங்களில்
சோகத்தின்
பயத்தின்
சந்தேகத்தின்
நிழலொன்றேனும் வீழ்ந்திடாத
என்னவானாலும்
மீளச் சென்று வர இயலுமானால்
எவ்வளவோ நல்லதென எண்ணக் கூடிய

அப்படியும் காலமொன்றிருந்தது

மூலம் - சஜீவனி கஸ்தூரி ஆரச்சி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# ஊடறு
# பெண்ணியம்
# கூடு

பாரதி
16-06-2010, 03:16 PM
இக்கவிதையை படித்து முடித்ததும் ஏக்கப்பெருமூச்சுதான் வந்தது...
கவிஞருக்கும் மொழிமாற்றித்தந்த உங்களுக்கும் நன்றி நண்பரே.

சிவா.ஜி
16-06-2010, 03:32 PM
சுகமான நினைவுகள்...இன்று சுமையாகிப் போனது.

ஆற்றாமையோடு படித்து ஆயாசப் பெருமூச்சு விட வேண்டியதாயிருக்கிறது.

மொழிமாற்றுக்கும், பகிர்வுக்கும் நன்றி ரிஷான்.

govindh
16-06-2010, 03:46 PM
மனதில் நீங்கா நினைவுகள்...தனி சுகம்...
அருமையான பதிவு....
பகிர்வுக்கு மிக்க நன்றி...ரிஷான்.

M.Rishan Shareef
29-06-2010, 02:18 PM
அன்பின் பாரதி,

//இக்கவிதையை படித்து முடித்ததும் ஏக்கப்பெருமூச்சுதான் வந்தது...
கவிஞருக்கும் மொழிமாற்றித்தந்த உங்களுக்கும் நன்றி நண்பரே.//

நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
29-06-2010, 02:20 PM
அன்பின் சிவா.ஜி,

//சுகமான நினைவுகள்...இன்று சுமையாகிப் போனது.

ஆற்றாமையோடு படித்து ஆயாசப் பெருமூச்சு விட வேண்டியதாயிருக்கிறது.

மொழிமாற்றுக்கும், பகிர்வுக்கும் நன்றி ரிஷான்.//

ஆமாம் நண்பரே.
மீளச் சென்றுவிட முடியாத அழகிய காலங்கள் பொக்கிஷங்கள் அல்லவா?

கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
29-06-2010, 02:21 PM
அன்பின் கோவிந்த்,

//மனதில் நீங்கா நினைவுகள்...தனி சுகம்...
அருமையான பதிவு....
பகிர்வுக்கு மிக்க நன்றி...ரிஷான்.//

நிச்சயமாக நண்பரே.
கருத்துக்கு நன்றி :-)

அமரன்
29-06-2010, 08:45 PM
இங்க நான் வரக்கூடாது போல.:)

இருபதில அஞ்சு ஆசை!

நாற்பதில இருபது ஆசை!

அறுபதில எல்லாத்திலயும் ஆசை!

நதியோட்டத்துக்கு எதிர் நீச்சல் போடலும் சுகம்..

நதியோட்டத்துக்கு ஒத்து நீந்தலும் சுகமோ சுகம்.

shibly591
30-06-2010, 06:07 AM
நினைவுகளை மீட்டுப்பார்க்கும் கவிதைகள் எப்போதும் ஏக்கப்பெருமூச்சை வெளியிட் வைக்கும்..

கண்ணீரே வந்துவிட்டது..அற்புதமான கவிதை..அழகான மொழிபெயர்ப்பு..

M.Rishan Shareef
02-07-2010, 03:38 AM
அன்பின் அமரன்,

//இங்க நான் வரக்கூடாது போல.:)

இருபதில அஞ்சு ஆசை!

நாற்பதில இருபது ஆசை!

அறுபதில எல்லாத்திலயும் ஆசை!

நதியோட்டத்துக்கு எதிர் நீச்சல் போடலும் சுகம்..

நதியோட்டத்துக்கு ஒத்து நீந்தலும் சுகமோ சுகம்.//

அழகான கருத்து.
நன்றி நண்பரே !

M.Rishan Shareef
02-07-2010, 03:40 AM
அன்பின் ஷிப்லி,

//நினைவுகளை மீட்டுப்பார்க்கும் கவிதைகள் எப்போதும் ஏக்கப்பெருமூச்சை வெளியிட் வைக்கும்..

கண்ணீரே வந்துவிட்டது..அற்புதமான கவிதை..அழகான மொழிபெயர்ப்பு.. //

கவிதை குறித்தான கருத்துக்கு நன்றி நண்பரே !