PDA

View Full Version : உன்னதமான நட்பு



சரண்யா
15-06-2010, 02:10 AM
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/kids.jpg?t=1276567238
சூரியன் வெளிர் மஞ்சள் நிறத்தில் அழகாய் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.சின்ன சிட்டுகள் ஆங்கே மணல் வீடு கட்டி விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.ஒரு பக்கம் பட்டத்தை வானில் பறக்கவிட்டு விண்ணை எட்டும் என நூலினை தளர்த்தி காற்றாடியினை பார்த்து ரசித்திருந்தனர்..
கோடை வெய்யிலின் தாகம் தணிக்க ஐஸ்கீரிம் தள்ளுவண்டிகள் வந்த வண்ணம் இருந்தன...
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/trying.jpg?t=1276567300
அங்கே இருந்த சூழலில் மிக அமைதியாக கடல் அலைகளை பார்த்துக் கொண்டே அஸ்வின் தான் வாழ்க்கையில போராடி அலுவலகத்தில உள்ள தான் நினைத்த லாபம் கிடைக்காமலும் ப்ராஜக்ட் செய்ய முடியாம போனதில் மனம் வருந்தி என்ன இது வாழ்க்கை என இருந்தவன் தன்னை மறந்து கடற்கரையில் அமர்ந்திருந்தான்.
இங்க உள்ள எல்லாவற்றையும் ரசித்த கொண்டிருந்த அவன் தான் பள்ளியில் படித்த காலத்தையும் நினைத்துப் பார்க்கிறான்.

அது ஆங்கில வழிக்கல்விமுறையை கற்று தரும் பள்ளி..அந்த ஊரில அந்த பள்ளி தான் மிகவும் பெரிய பள்ளிக்கூடம்.விசாலமான வகுப்பு அறைகள்.
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/dsc01212.jpg?t=1276567397
ஆனாலும் கடைசி இருக்கையில் தான் அஸ்வின் மற்றும் அவன் தோழர்கள் அமர்திருப்பார்கள்..

சின்ன சின்ன குறும்பு செய்யும் அசோக், அவனோட விளையாட்டுத் தனம், இப்படி இவனை எல்லாருக்கும் பிடிக்கும்.எதையாவது செய்வான்.எல்லாரையும் சிரிக்க வைப்பான்.சிரிப்பு வந்திடும்..ஆனா வசமா வகுப்புக்கு வந்த ஆசிரியரிடம் மாட்டிகிட்டு முழிப்பான்.அவங்க அம்மா இவனை நினைத்து ரொம்ப கவலை படுவாங்க..அவனோட அப்பா ஆட்டோ ஓட்டி இவனை படிக்க வைச்சாங்க.ரொம்ப அன்பா இருப்பாங்க.... தன்னோட பிள்ளையாவது பின்னாடி கஷ்டப்படக் கூடாது என்பதில உறுதியா இருந்தாங்க.

அப்பறம் சுதாகர் ரொம்ப அமைதியா இருப்பான் நல்லா படிப்பான்..எல்லாருக்கும் சொல்லி தருவான்.இவனுக்கு ஒரே ஒரு அக்கா.அவுங்க வீட்டில எல்லாரும் ..நல்லா பாசமா இருப்பாங்க குறிப்பா அவன் பாட்டி இவன் மேல அவ்வளவு ப்ரியமா இருப்பாங்க..இவனை விளையாட அழைத்த போது ஒரு முறை பார்த்திட்டாங்க பிள்ளை விழுந்துடுவான் வேண்டாம் வேண்டாம் என மறுத்து இவன் வீட்டிற்கு பின்னாடி பெரிய இடத்தையே கொடுத்து இவனோட விளையாட சொல்லுவாங்க...

அதே பென்ச்சில அடுத்து இருந்தது முகமது இவன் படிப்பான், சில நேரத்தில இவன் செய்கிற மிமிக்கிரில எல்லாரும் ஆச்சிர்யப் படுவோம்.நல்லா விளையாடுவான்.இவனுக்கு இரண்டு அக்கா அப்பா வெளிநாட்டில வேலை பார்க்கிறாங்க..ஒரே பையன் தான் அதனால இவனை செல்லமா..வைச்சுப்பாங்க.....எப்ப எது கேட்டாலும் வாங்கி தந்திடுவாங்க இவனோட அம்மா.அதனால இவன் லூட்டி தாங்காது.

எங்க வீட்டில அம்மா அண்ணா எல்லாரும் இவுங்க வந்தாலே நான் எப்படி படிப்பேன் என்ன செய்வேன் என்று எல்லாவற்றையும் கேட்டு தெரிச்சுப்பாங்க.அப்பா எதையும் கண்டுக்க மாட்டாங்க.கணினியே கதி என்று தன் வேலையில் மும்மரமாக இருப்பாங்க.ஆனால் எனக்கும் கணினி வாங்கி கொடுத்து எல்லா கோர்சும் படிக்க வைச்சது எல்லாம் அப்பா தான்.
அஸ்வின் கண்கள் திறந்திருந்தாலும் அவன் எண்ண அலைகள் அவன் பள்ளிப்படிப்பில தொடங்கி வேலை என இத்தனை தூரம் இந்த நிமிடம் வரை காட்சிகளில் தன்னோட இன்பதுன்பங்களை சமாளித்ததை எண்ணி கொண்டிருந்தபோது அவன் தோளில் யாரோ கை வைக்க....... திரும்பிப் பார்த்தான்.பார்த்தவன்..சட்டென்று எழுந்தான்.அவன் நினைத்து கொண்டிருந்த தோழனில் ஒருவனான் அசோக் தான் அது.
ஹே என்னடா.... எப்படி இருக்கிற...கட்டித் தழுவிக்கொண்டான்.இப்பாசப்பிணைபிற்கு விவரிப்பதற்குக் கூட வார்த்தைகள் இல்லை ...
அச்சந்திப்பில் அவ்வளவு அன்பு நிறைந்திருந்தது.
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/sky.jpg?t=1276567454
மற்ற இருவரையும் சந்தித்தையும் சொன்னான் அசோக்...பின் அவர்களையும் வரவழைத்து ஆனந்தமாய் நால்வரும் சந்தித்து கொண்டனர்.
ஊர் மாறி மாறி இப்படி இங்கே சந்திப்போம் என எவருமே நினைத்துக்கூட பார்க்கவில்லை...
அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட இல்லை என்றே சொல்லணும்..சோகம் நிறைந்த அவரவர் வாழ்வியல் பற்றி பகிர்ந்துகிட்டாங்க.எல்லார் வாழ்வியலிலும் இருந்தது "பணத்தட்டுபாடு" என்பதே ப்ரச்சினையாக இருந்தது தெரிய வந்தது.

இணைப்பிரியாமல் இருந்தவர்கள்
இணையாமல் போனது விதியால்
இனியாவது என்றும் பிரியாமல்
இணைந்திருக்க எண்ணினார்கள்

நாம எல்லாரும் ஒன்றா இருக்கலாமா கேட்டான் அசோக்...பதில் சொல்ல முடியல எனினும் அவர்கள் மனதில எங்கயோ தனியா இருப்பதற்க்கு பதிலா நாம ஒன்றாகவே இருந்திடலாம் என யோசித்தார்கள்..படிக்கும் போது அவர்கள் ஒன்றாக கலகலப்பாக இருந்ததை வாழ்வில் எந்நாளும் மறக்க இயலாது.வேலையின் நிமித்தம் இங்கு வந்ததில் இருந்து அவர்கள் தனிமையில் வாழ்ந்ததால் மீண்டும் அந்த பழைய சந்தோஷத்தில் பாதியாவது திரும்ப பெறலாம் என்ற எண்ணத்தில் ஆலோசித்தனர்.
அஸ்வின் இப்பொழுது தான் தெளிவு பெற்றது போல முகம் மலர்ந்தான்.

சுதாகர் சொன்னான் வெளியில ஒரு நகரில உள்ள வீடை ஒரு வாரம் முன்பு தான் வாங்கி இருந்தேன் டா...நீங்க எல்லாரும் அந்த வீட்டிற்கு வந்திடுங்கள்..
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/4b62e844b713aa38104ab75ee.jpg?t=1276567485
ஒரே வீட்டில நிறைய அறைகள் இருக்கிறது டா...என்ன சொல்லுறீங்க...மறுநாள் அவனோட வீடு ரொம்ப ஜகஜோதியாக நட்பாலும் அன்பாலும் நிறைந்து இருந்தது...

அசோக அவன் மனைவி அக்க்ஷயா மற்றும் அவனோட மகள் அஸ்வினியோட வந்தான்..சுதாகர் அவனை தன் மனைவி நிர்மலாவிடம் அறிமுகம் செய்தான்..அழகாய் ஓடி வந்தான் அஜய் அவனோட பையன்... அஸ்வின் தன் மனைவி விசாலியை அறிமுகப்படுத்தினான்...இப்ப தான் 6 மாததிற்கு முன்னாடி இவர்களுக்கு கல்யாணமாயிற்று...

முகமது அவன் அம்மாவோட வந்து இருந்தான்..அம்மா எல்லாரையும் பார்த்தவுடனே மகிழ்ச்சியாய் இருந்தாங்க...பிள்ளைகள் பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டாங்க..ஏன் பா இவனையும் கல்யாணம் பண்ணிக்க சொல்ல வேண்டியது தானே...என்னவோ வெளிநாட்டில போய் சம்பாதிச்சுட்டு வந்து தான் சொல்லுறானே...கேட்க மாட்டிங்களா என சொன்னவுடன் ஒருவரை ஒருவர் பார்த்துகிட்டாங்க...
ஏன் டா என்ன சொல்லுற இப்போ தான ஒன்றாக இருக்கலாம் வந்தோம் ..ஏன் டா எங்க டா போக போற என எல்லாரும் முகமது கிட்ட சின்ன சினுங்கலோட கேட்டாங்க...
எங்கயும் போல டா..தோ இங்க கிட்ட இருக்கிற குவைத் தான்....தினமும் உங்களோட பேசுறேன்..அம்மாவை உங்களவிட யாருடா நல்லா பார்த்திக்க முடியும் என்றான்..நீங்க கோசிப்பீங்கன்னு தான் நேற்று நான் சொல்லல...சேர்ந்து இருக்க நினைத்த போது வெளிநாட்டிற்கு போவதை நானும் நினைக்கவில்லை.

எனினும் நம்ம எல்லாருக்கும் இருப்பது பணம் என்ற ஒரே ப்ரச்சினை தான்...
பசங்க பெரிசா ஆனா நாம கஷ்டப் படுறதை அவங்களும் கஷ்டபடக்கூடாது டா..
அதான் டா.அப்பா ரொம்ப நாளா வேலை பார்க்கிறார்.பாவம் நான் அங்க சென்று அப்பாவை அனுப்பி வைக்கிறேன்...நான் இங்கில்லை என்றாலும் என்னொட மனசு இங்க தான் டா இருக்கும். அக்கா இரண்டு பேரும் சௌதியில இருக்காங்க.அம்மா இங்க தான் இந்தியாவில தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாங்க....

சரி வாங்க எல்லாரும் ஒன்றா சாப்பிடலாம் என சொல்லி அழைக்கிறான்.
நான் சொல்லுவது கேளுங்க..ஒரு இரண்டு வருஷம் தான் அப்பறம் நான் இங்க வந்திடுவேன்.
உங்க எல்லாருக்கும் என்ன வேண்டுமோ அதை செய்ய நான் தயாரா இருக்கேன்..ரொம்ப பொறுப்பா பேசினான்.
அவன் சொல்லுவது உண்மை தான என எண்ணி எல்லாரும் சமாதானம் ஆகி விடுகிறார்கள்.

பின் அவனோட அம்மா பிள்ளைகளோட மகிழ்வதை பார்த்து ரசிக்கிறான் முகமது.தன் அக்காவின் குழந்தைகளை காணமுடியாத அம்மா இவர்களை பார்த்து சந்தோஷபடுவதை மனத்ருப்தி அடைகிறான்.
வெளிநாட்டில அவன் சம்பாதிச்சு சுதாகருக்கு வீடு வாங்கிய கடனை அடைக்க, அசோகோட பிஸினஸுக்கு,அஸ்வினுக்கு தன்னம்பிக்கை கொடுத்து அவனாலயும் சாதிக்க முடியும் என நம்பிக்கை கொடுத்து ,தனியா ஒரு நிறுவனம் அமைக்க பணம் கொடுத்து உதவுகிறான்.
இவர்கள் யாரும் அவனை கேட்கவில்லை என்றாலும் தன்னால் ஆன உதவியை முகமது நட்பால் அறிந்து செய்து கொண்டிருந்தான்.
அஸ்வினி,அஜய் முதல் எல்லாரும் முகமதுவிடம் வாரம் ஒரு முறை பேசி மகிழ்வர்.

எல்லாம் ரொம்ப அழகாய் யோசித்து செய்தான் முகமது. அவனுக்கு ஒரு வாழ்க்கை அமைய வேண்டுமென நண்பர்கள் மூவரும் சேர்ந்து
முகமதுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்து பெண் பாருங்க மா..அவன வரவழைச்சிடலாம் என்றவுடன் அவனோட அம்மா பழையவீட்டில இருந்தபோது உதவியா இருந்த ஆப்ரின்..ரொம்ப அழகாய் இருப்பாள்.அமைதியான பெண்..அவுங்க வீட்டில அவ்வளவு வசதி இல்லை தான் இருந்தாலும் முகமதுக்கு ஏற்ற பெண் என சொல்ல முடிவு செய்தனர்...

முகமதுவை வரவழைக்க நல்ல நேரம் வந்தது...ரொம்ப அருமையாக கோலாகலமாக திருமணம் நடந்தது...
முகமதுவின் அம்மாவும் அப்பாவும் தன்னொட மகனுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என அவ்வளவு சந்தோஷ பட்டாங்க...
நிறைவான வாழ்க்கை அவர்கள் அனைவருக்குமே அமைந்திருந்தது.கை தூக்கி விட வந்த நட்பு அவர்கள் வாழ்வில் ஓர் மாற்றம் ஏற்ப்படுத்தியது தான் உண்மை.மனம் தளராமல் தங்களின் திறமையால் வென்றிடும் நண்பர்கள்.வாழ்க்கையில் தன்னம்பிக்கையான தோழமை ஆங்கே குடிக்கொண்டிருந்தது அவர்களின் நட்பில்.தன்னலமற்ற நட்பு தோள் கொடுத்தது.
எல்லாரையும் சேர்த்து வைத்த அந்த கடற்கரையில் சென்று ஆடி மகிழ்ந்து நட்பால் உறவான பந்தங்கள் இங்கே தனிமையை தள்ளிவிட்டு ஒன்றாய் சிரித்து மகிழ்ந்தனர்.எல்லாரும் அவர்கள் வாழ்வியலில் முன்னேற்றிய முகமதுவை அஸ்வின்,அசோக் மற்றும் சுதாகர் நன்றியோட இன்றும் என்றும் இணைந்து இருப்போம்...இன்பமாக.. என அவர்கள் பார்வையில் பேசினர்..என்றேன்றும் நாம் நட்போடு இணைந்திருப்போம்.நாமும் முன்னேறிடுவோம்,முன்னேற முயற்சி செய்வோருக்கும் உதவியாக இருப்போம்.
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/HoldingHands1.jpg?t=1276567530
சந்தோஷம் நிறைந்திருந்த ஓர் நட்பு..
சாதனைகள் பல நிகழ்த்திய ஓர் பாசம்...
பிரிந்த சில நாளில் பாசாத்தால் ஓர் புரிதல்
புரிந்து நடந்தததில் வாழ்க்கையில் ஓர் பிடிப்பு
எதற்கும் ஈடில்லாத தூய்மையான ஓர் பந்தம்...
என்றென்றும் இவர்கள் வாழ்வில் ஓர் வசந்தம்.

பாரதி
15-06-2010, 02:18 AM
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உங்கள் கோணத்தில் விளக்கி இருக்கிறீர்கள். சாதியாலும் சமயத்தாலும் நட்பு பிளவுபட்டு விடக்கூடாது என்ற எண்ணமும் எப்போதும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் விளங்குகிறது.
புகைப்படங்கள் நன்றாக இருக்கிறன்றன.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகிறேன்.

சிவா.ஜி
15-06-2010, 05:38 AM
நட்பின் மேன்மையைச் சொல்லும் கதை. சிறுவயது நட்பு...இப்போதும் அந்த அன்பு குறையாமல் தொடர்வதைப் பார்க்கும்போது, அவர்களின் நட்பின் ஆழம் தெரிகிறது.

நல்ல கருத்தைச் சொல்லும் கதை. படங்களுடன் அழகாய் இருக்கிறது.

வாழ்த்துக்கள் சரண்யா.

செல்வா
15-06-2010, 06:46 AM
கதைக்கு அழகான படங்களுடன்...
நல்ல முயற்சி சரண்யா அவர்களே...

ஆனால் கதையின் ஓட்டத்தில் வார்த்தைகள் அலைக்கழிக்கின்றன ஒரு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. இது ஒரு வேளை எனக்கு மட்டுமேயான தோன்றலாகவும் இருக்கலாம்.

இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப வாசித்தீர்கள் என்றால் சில இரண்டு மூன்று வரிகளை இணைத்து ஒரே வாக்கியமாகக் கட்ட இயலும்...
தொய்வு நீக்கினால் பட்டாய் ஜொலிக்கும்....

தொடர்ந்து எழுதுங்கள் .. வாழ்த்துக்கள்....

த.ஜார்ஜ்
15-06-2010, 02:04 PM
சில நிமிடங்கள் குழ்ந்தையாக உணர செய்துவிட்டது... பட கதை

அறிஞர்
15-06-2010, 02:23 PM
உண்மையான நட்பு.. நிரந்தரமான நட்பு...... என்றும் நிலைக்கும்.....

கதை அருமை சரண்யா..

சரண்யா
15-06-2010, 03:51 PM
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உங்கள் கோணத்தில் விளக்கி இருக்கிறீர்கள். சாதியாலும் சமயத்தாலும் நட்பு பிளவுபட்டு விடக்கூடாது என்ற எண்ணமும் எப்போதும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் விளங்குகிறது.
புகைப்படங்கள் நன்றாக இருக்கிறன்றன.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி பாரதி அவர்களே...
ஆம் புகைப்படங்கள் எனக்கு தெரிந்த போட்டோஷாப்பில் எடிட் செய்தேன்..அந்த ஐஸ்கிரீம் தள்ளுவண்டி இங்கே வந்து அமைத்தது..அந்த பட்டம் எல்லாம்..சேர்ந்த படமாக கதைக்காக செய்தேன்..
முதன்மையாக வந்து வாழ்த்தியமைக்கு..
எழுத்திற்கு என்ன விமர்சனம் என்பதில் ஆர்வம் இருக்கும் தானே...
நன்றி..

சரண்யா
15-06-2010, 03:53 PM
நட்பின் மேன்மையைச் சொல்லும் கதை. சிறுவயது நட்பு...இப்போதும் அந்த அன்பு குறையாமல் தொடர்வதைப் பார்க்கும்போது, அவர்களின் நட்பின் ஆழம் தெரிகிறது.

நல்ல கருத்தைச் சொல்லும் கதை. படங்களுடன் அழகாய் இருக்கிறது.

வாழ்த்துக்கள் சரண்யா.

மிக்க நன்றிணா..
உங்களின் கருத்தை காணும் போது மகிழ்ச்சியே...
மிக அருமையாக கதை சொல்லும் வித்தகராச்சே...
உங்க பசங்க கொடுத்து வைச்சவங்க..நல்லா கதை சொல்லுவீங்களா..

சரண்யா
15-06-2010, 03:57 PM
கதைக்கு அழகான படங்களுடன்...
நல்ல முயற்சி சரண்யா அவர்களே...

ஆனால் கதையின் ஓட்டத்தில் வார்த்தைகள் அலைக்கழிக்கின்றன ஒரு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. இது ஒரு வேளை எனக்கு மட்டுமேயான தோன்றலாகவும் இருக்கலாம்.

இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப வாசித்தீர்கள் என்றால் சில இரண்டு மூன்று வரிகளை இணைத்து ஒரே வாக்கியமாகக் கட்ட இயலும்..
தொய்வு நீக்கினால் பட்டாய் ஜொலிக்கும்....

தொடர்ந்து எழுதுங்கள் .. வாழ்த்துக்கள்....
ஆம் இது கதைப்போட்டிற்கு நான் செய்த முயற்சி தானுங்க..வெற்றியோ தோல்வியோ கலந்து கொள்ள வேண்டும் என முயற்சி செய்தேன்..
நிச்சயம் இன்னொரு முறை கதை எழுதும் போது இதனை

இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப வாசித்தீர்கள் என்றால் சில இரண்டு மூன்று வரிகளை இணைத்து ஒரே வாக்கியமாகக் கட்ட இயலும்..

மனதில் வைத்து எழுத முயற்சிக்கிறேன்...
மிக்க நன்றி
தங்களின் கருத்தை கொடுத்தமைக்கு...

சரண்யா
15-06-2010, 03:58 PM
சில நிமிடங்கள் குழ்ந்தையாக உணர செய்துவிட்டது... பட கதை
நன்றி ஜார்ஜ் அவர்களே...
ஆமாம்..அப்படி குழந்தையாகவே இருந்திருக்கலாம் போல...

சரண்யா
15-06-2010, 04:02 PM
உண்மையான நட்பு.. நிரந்தரமான நட்பு...... என்றும் நிலைக்கும்.....

கதை அருமை சரண்யா..

அட அருமை என்பதை உங்களிடம் தானுங்க அறிகிறேன்...
மிக்க நன்றி தங்களின் ஊக்கத்திற்கு..
ஆம் என்றுமே மாறாத நட்பு....உன்னதமாய் இங்கே காட்சியளிக்கிறது.

அய்யா
18-06-2010, 08:36 AM
அக்கா .. இது தொடர்கதையா? இன்னும் கதை இருக்கா?

கலையரசி
18-06-2010, 01:37 PM
போட்டியில் ப்ங்கேற்ற போதே படித்து விட்டேன் சரண்யா.
உலகில் உன்னதமான நட்புக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை விளக்கும் கதை.
படங்களும் அருமை. வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள். செல்வா சொன்னது போல் எழுத்து நடையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கண்டிப்பாக ஒரு நாள் பரிசை வெல்வீர்கள்.
வாழ்த்துக்கள் சரண்யா!

சரண்யா
21-06-2010, 01:42 AM
அக்கா .. இது தொடர்கதையா? இன்னும் கதை இருக்கா?

இல்லயே...தொடர்கதை குட்டீஸ் என எழுதியுள்ளேன்..இதே பகிதியில் இருக்கும் பா..
நன்றி..

சரண்யா
21-06-2010, 01:44 AM
போட்டியில் ப்ங்கேற்ற போதே படித்து விட்டேன் சரண்யா.
உலகில் உன்னதமான நட்புக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை விளக்கும் கதை.
படங்களும் அருமை. வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள். செல்வா சொன்னது போல் எழுத்து நடையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கண்டிப்பாக ஒரு நாள் பரிசை வெல்வீர்கள்.
வாழ்த்துக்கள் சரண்யா!

நன்றி கலையரசி அவர்களே....இதில் கலந்து கொண்டதே எனக்கு சந்தோஷம் தான்..
நட்பின் உன்னதத்தை மேலும் பள்ளி நட்பிற்கு ஈடு எதுவுமே இல்லை என தோன்றியதில் உதித்தது.

பா.ராஜேஷ்
22-06-2010, 05:37 PM
போட்டியில் படித்ததை விட இங்கு படங்களுடன் படிப்பது நன்று.. உங்களால் இன்னும் நன்றாக எழுத முடியும் சரண்யா... முயலுங்கள்.. பாராட்டுக்கள்

சரண்யா
23-06-2010, 02:54 AM
போட்டியில் படித்ததை விட இங்கு படங்களுடன் படிப்பது நன்று.. உங்களால் இன்னும் நன்றாக எழுத முடியும் சரண்யா... முயலுங்கள்.. பாராட்டுக்கள்

மிக்க நன்றி ராஜேஷ்..
நான் அனுப்பி வைத்திருந்தேன்..கதைக்காகவே சில படங்கள் செய்தேன்.
ஆனால் எல்லா கதைகளும் இருந்த இடத்தில் வைத்ததால் படங்கள் நிராகரிக்கப்பட்டன..

அன்புரசிகன்
23-06-2010, 03:36 AM
கதையின் யதார்த்தமாக பயணித்தாலும் பிற்பாதி கதை என்பதை நிஜமாக்கிறது. இடையில் நண்பர்கள் சொன்னது போல் கதையின் ஓட்டத்தில் ஒரு சறுக்கல்.
வாழ்த்துக்கள் சரண்யா..

சரண்யா
23-06-2010, 02:24 PM
கதையின் யதார்த்தமாக பயணித்தாலும் பிற்பாதி கதை என்பதை நிஜமாக்கிறது. இடையில் நண்பர்கள் சொன்னது போல் கதையின் ஓட்டத்தில் ஒரு சறுக்கல்.
வாழ்த்துக்கள் சரண்யா..

மிக்க நன்றி அன்பு ரசிகன் அவர்களே....
அடுத்த முறை எழுதும் சந்தர்பத்தில் கவனமாக கையாள நினைக்கிறேன்.
கலந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.வாய்ப்பிற்கு நன்றி..

அமரன்
23-06-2010, 06:45 PM
கதைப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கு முதலில் வாழ்த்துகள்.

பல அம்சங்களை உள்ளடக்கியபடி தன்பாட்டுக்குப் பயணிக்கிறது கதை. அதைப் பின் தொடர்ந்து போவதில் வசதிக்குறைவு உள்ளது.


எழுத எழுத எல்லாமே வசப்பட்டு விடும். இடை வெளி விழுத்தாமல் எழுதுங்கள் சரண்யா.

வாழ்த்துகள்.

சரண்யா
24-06-2010, 01:37 AM
கதைப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கு முதலில் வாழ்த்துகள்.

பல அம்சங்களை உள்ளடக்கியபடி தன்பாட்டுக்குப் பயணிக்கிறது கதை. அதைப் பின் தொடர்ந்து போவதில் வசதிக்குறைவு உள்ளது.


எழுத எழுத எல்லாமே வசப்பட்டு விடும். இடை வெளி விழுத்தாமல் எழுதுங்கள் சரண்யா.

வாழ்த்துகள்.
அவ்வசதியை மேம்பட செய்ய நினைக்கிறேன்.
நன்றி அமரன் அண்ணா..தங்களின் ஊக்கம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

கீதம்
24-06-2010, 05:56 AM
கதைப்போட்டியில் பங்கெடுத்தமைக்கு என் பாராட்டுகள், சரண்யா. எடுத்துக்கொண்ட கரு அருமை. படங்கள் வெகு அற்புதம். உங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன். மன்ற நண்பர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து எழுதி உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்.

சரண்யா
24-06-2010, 02:51 PM
கதைப்போட்டியில் பங்கெடுத்தமைக்கு என் பாராட்டுகள், சரண்யா. எடுத்துக்கொண்ட கரு அருமை. படங்கள் வெகு அற்புதம். உங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன். மன்ற நண்பர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து எழுதி உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்.
நன்றி கீதம் அவர்களே...
நான் உங்க கதைகளை படித்திருக்கிறேன்.
தங்களின் பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி.