பாரதி
12-06-2010, 09:11 AM
குளமாய் இரு.
குரு கவலையுடன் இருந்த அந்த சீடனைப்பார்த்தார்.
கை நிறைய உப்பும் ஒரு குவளையில் நீரையும் கொண்டு வந்தார்.
உப்பை அந்த குவளை நீரில் இட்டு கலக்கினார். அதைக்குடிக்குமாறு சீடனைப் பணித்தார்.
"எப்படி இருக்கிறது?" என்று அவனிடம் வினவினார்.
"உவ்வே... வாயில் வைக்கவே முடியவில்லை. உப்புக்கரிக்கிறது" என்றான் சீடன்.
முன்பு கொண்டு வந்த அதே அளவு உப்பை கையில் எடுத்துக்கொண்டு சீடனையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த குளத்திற்குச் சென்றார்.
கையிலிருந்த உப்பை குளத்திலிட்டார்.
"இப்போது குளத்து நீரைக்குடி" என்றார்.
சீடனும் குளத்து நீரைப்பருகினான்.
"எப்படி இருக்கிறது?" என்று வினவினார் குரு.
"நன்றாக இருக்கிறது" என்றான் சீடன்.
"உப்பின் சுவையை உணர்ந்தாயா..?" என்றார் குரு.
"இல்லை" என்றான் சீடன்.
அவனது கைகளை மெதுவாகப் பற்றிக்கொண்டு "வாழ்க்கையில் வரும் துன்பம் என்பது உப்பைப்போன்றது. அதை விட சற்றுக்கூட கூடுதலாகவோ குறைவாகவோ இல்லை. அதே போல வாழ்வில் வரும் துன்பத்தின் அளவு கூடவோ குறையவோ போவதில்லை. அது ஒரே அளவாகத்தான் இருக்கிறது. நாம் எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறோம் என்பது அதை எதில் இட்டுப்பார்க்கிறோமோ அதைப் பொருத்தது. ஆகவே துன்பத்தில் இருக்கும் போது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நமது பார்வையை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும்" என்றார்.
சீடன் அமைதியாக கவனித்தான்.
"சுருக்கமாக சொன்னால் குவளையாய் இருக்காதே... குளமாய் இரு. புரிகிறதா? " என்றார்.
கதையின் மூலம்: தெரியவில்லை.
நன்றி : கதை ஆசிரியருக்கும், ஆங்கிலத்தில் கதையை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கும்.
குரு கவலையுடன் இருந்த அந்த சீடனைப்பார்த்தார்.
கை நிறைய உப்பும் ஒரு குவளையில் நீரையும் கொண்டு வந்தார்.
உப்பை அந்த குவளை நீரில் இட்டு கலக்கினார். அதைக்குடிக்குமாறு சீடனைப் பணித்தார்.
"எப்படி இருக்கிறது?" என்று அவனிடம் வினவினார்.
"உவ்வே... வாயில் வைக்கவே முடியவில்லை. உப்புக்கரிக்கிறது" என்றான் சீடன்.
முன்பு கொண்டு வந்த அதே அளவு உப்பை கையில் எடுத்துக்கொண்டு சீடனையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த குளத்திற்குச் சென்றார்.
கையிலிருந்த உப்பை குளத்திலிட்டார்.
"இப்போது குளத்து நீரைக்குடி" என்றார்.
சீடனும் குளத்து நீரைப்பருகினான்.
"எப்படி இருக்கிறது?" என்று வினவினார் குரு.
"நன்றாக இருக்கிறது" என்றான் சீடன்.
"உப்பின் சுவையை உணர்ந்தாயா..?" என்றார் குரு.
"இல்லை" என்றான் சீடன்.
அவனது கைகளை மெதுவாகப் பற்றிக்கொண்டு "வாழ்க்கையில் வரும் துன்பம் என்பது உப்பைப்போன்றது. அதை விட சற்றுக்கூட கூடுதலாகவோ குறைவாகவோ இல்லை. அதே போல வாழ்வில் வரும் துன்பத்தின் அளவு கூடவோ குறையவோ போவதில்லை. அது ஒரே அளவாகத்தான் இருக்கிறது. நாம் எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறோம் என்பது அதை எதில் இட்டுப்பார்க்கிறோமோ அதைப் பொருத்தது. ஆகவே துன்பத்தில் இருக்கும் போது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நமது பார்வையை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும்" என்றார்.
சீடன் அமைதியாக கவனித்தான்.
"சுருக்கமாக சொன்னால் குவளையாய் இருக்காதே... குளமாய் இரு. புரிகிறதா? " என்றார்.
கதையின் மூலம்: தெரியவில்லை.
நன்றி : கதை ஆசிரியருக்கும், ஆங்கிலத்தில் கதையை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கும்.