கலையரசி
30-05-2010, 11:26 AM
நான் ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளைத் தமிழில் இங்குப் பகிர்ந்துள்ளேன். நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகின்றேன்:-
ஜோக்-1
கலைக்கூடமொன்றில் தம் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார் ஓவியர் ஒருவர்.
அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,
"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர்.
"உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல செய்தி ஒன்றும், கெட்ட செய்தி ஒன்றும் உள்ளது."
அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்"
"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார். ஆம். கூடும் என்று நான் சொன்னவுடன், உங்களது 15 ஓவியங்களையும் அவரே
வாங்கிவிட்டார்."
"சரி. அந்த கெட்ட சேதி?"
"அந்த ஆள் வேறு யாருமில்லை. உங்கள் குடும்ப டாக்டர் தாம்."
(Readers Digest)
ஜோக்-2
குருவைச் சந்தித்து ஞானோதயம் பெறுவது எப்படி என்ற தம் சந்தேகத்தைக் கேட்டார் அறிஞர் ஒருவர்.
"மழை பெய்யும் போது இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு நில்லுங்கள்; ஞானோதயம் கிடைக்கும்," என்றார் குரு.
"குருஜி! நீங்கள் சொன்னவாறே நேற்று மழையில் நின்றேன். தண்ணீர் என் கழுத்து வழியாக கீழே இறங்கி ஓடிய போது, நான் ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்" என்றார் அந்த நபர்.
"முதல் நாள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஞானோதயம் அது தான்," என்றார் குரு.
(Readers Digest)
ஜோக்-3
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் என் நண்பனுடன் சேர்ந்து கொண்டு எங்களைத் தாண்டிச் செல்லும் மாணவிகளின் முக அழகிற்கேற்ப ஒன்றிலிருந்து பத்து வரை மதிப்பெண்
கொடுக்க முடிவு செய்தேன்.
நாங்கள் காத்துக் கொண்டிருந்த போது, இரண்டு மாணவிகள் எங்களைக் கடந்து சென்றனர். நான் நண்பனிடம் எதுவும் சொல்வதற்கு முன், முதலாமவள் சட்டெனத் தன் தோழிப் பக்கம் திரும்பி,
"ஏழு" என்றாள்.
(Readers Digest)
ஜோக்-4
"டாக்டர்! தினமும் எனக்கு விநோதமான கனவுகள் வருகின்றன. நீங்கதான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவுகள் ?"
"தினமும் கழுதைகளுடன் நான் கால்பந்து விளையாடுவதாக கனவு"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கழுதை குழுவோட விளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்களில் கழுதைங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைளை அவரிடம் கொடுத்து,
"நான்கு மணி நேரத்துக்கொருமுறை மூன்று மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுகளிலிருந்து முற்றிலுமாக உங்களுக்கு விடுதலை கிடைக்கும்"
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"
(The Hindu- Young world)
ஜோக்-1
கலைக்கூடமொன்றில் தம் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார் ஓவியர் ஒருவர்.
அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,
"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர்.
"உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல செய்தி ஒன்றும், கெட்ட செய்தி ஒன்றும் உள்ளது."
அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்"
"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார். ஆம். கூடும் என்று நான் சொன்னவுடன், உங்களது 15 ஓவியங்களையும் அவரே
வாங்கிவிட்டார்."
"சரி. அந்த கெட்ட சேதி?"
"அந்த ஆள் வேறு யாருமில்லை. உங்கள் குடும்ப டாக்டர் தாம்."
(Readers Digest)
ஜோக்-2
குருவைச் சந்தித்து ஞானோதயம் பெறுவது எப்படி என்ற தம் சந்தேகத்தைக் கேட்டார் அறிஞர் ஒருவர்.
"மழை பெய்யும் போது இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு நில்லுங்கள்; ஞானோதயம் கிடைக்கும்," என்றார் குரு.
"குருஜி! நீங்கள் சொன்னவாறே நேற்று மழையில் நின்றேன். தண்ணீர் என் கழுத்து வழியாக கீழே இறங்கி ஓடிய போது, நான் ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்" என்றார் அந்த நபர்.
"முதல் நாள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஞானோதயம் அது தான்," என்றார் குரு.
(Readers Digest)
ஜோக்-3
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் என் நண்பனுடன் சேர்ந்து கொண்டு எங்களைத் தாண்டிச் செல்லும் மாணவிகளின் முக அழகிற்கேற்ப ஒன்றிலிருந்து பத்து வரை மதிப்பெண்
கொடுக்க முடிவு செய்தேன்.
நாங்கள் காத்துக் கொண்டிருந்த போது, இரண்டு மாணவிகள் எங்களைக் கடந்து சென்றனர். நான் நண்பனிடம் எதுவும் சொல்வதற்கு முன், முதலாமவள் சட்டெனத் தன் தோழிப் பக்கம் திரும்பி,
"ஏழு" என்றாள்.
(Readers Digest)
ஜோக்-4
"டாக்டர்! தினமும் எனக்கு விநோதமான கனவுகள் வருகின்றன. நீங்கதான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவுகள் ?"
"தினமும் கழுதைகளுடன் நான் கால்பந்து விளையாடுவதாக கனவு"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கழுதை குழுவோட விளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்களில் கழுதைங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைளை அவரிடம் கொடுத்து,
"நான்கு மணி நேரத்துக்கொருமுறை மூன்று மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுகளிலிருந்து முற்றிலுமாக உங்களுக்கு விடுதலை கிடைக்கும்"
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"
(The Hindu- Young world)