சிவா.ஜி
30-05-2010, 08:35 AM
http://i194.photobucket.com/albums/z250/sivag/Shanthi.jpg
'காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்' என்கிற பயனுள்ளமொழியை பாழாக புரிந்துகொண்டு, பதவி இருக்கும்போதே வாரிக்குவிப்பவர்களுக்கு மத்தியில்... சொந்தக் காசில்கன்றுக்குட்டிகளைவாங்கிக்கொடுத்து 50 தலித்குடும்பங்களைக்வாழ வைத்திருக்கிறார் ஒருபஞ்சாயத்துத்தலைவி. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாப்பாக்கம் ஊராட்சிமன்றத்தலைவியான சாந்திதான் இந்த 'அடடே' பெண்மணி!
சுமார் ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட இந்தக்கிராமத்தில் விவசாயமே பிரதானதொழில். ஆனால், சமீபகாலமாக ரியல்எஸ்டேட்பிசினஸ் நுழைய... விவசாயம் தள்ளாடுகிறது.
பிழைப்புக்கே கதியற்று கஷ்டஜீவனமே நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான், இந்தமுடிவை எடுத்தாராம் சாந்தி.
பயன்பெற்றவர்களில் ஒருவரான வெண்ணிலா,
''விவசாயவேலை இல்லாததால எங்கமக்கள் மெட்ராஸ், பெங்களூரூன்னு கூலிவேலைத்தேடிபோயிட்டாங்க. அப்படிப்போகக்கூட எங்களுக்கு வழியில்ல... குழந்தைங்களை வெச்சுகிட்டு வாழவும்வழியில்ல... நல்லவேளை எங்க பிரசிடென்ட் எங்களுக்கு கன்னுகுட்டி கொடுத்திருக்காங்க. ரெண்டுவருஷத்தில் அது நல்லாவளர்ந்து பால்கறக்க ஆரம்பிச்சிடும். எங்க குடும்பத்துக்கு கஞ்சி ஊத்த அதுவேபோதும்...'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
''தமிழரசிக்கு வாய்பேசமுடியாது. கணவனை விதிகிட்ட பறிகொடுத்துட்டு, நாலு பொண்ணுங்களை வைச்சுக்கிட்டு தனியாதவிக்கிறா... பிரசிடென்ட்கொடுத்த கன்னுக்குட்டிக்கு லட்சுமின்னுபேர்வெச்சிருக்கிற தமிழரசி, குடும்பத்துக்குவந்து சேர்ந்த 'லட்சுமி'யாகவேஅதைப்பார்க்கிறா...'' என்கிறார்கள் அக்கம்பக்க குடும்பத்தினர்.
தலைவிசாந்தியைச்சந்தித்துப்பேசினோம்.
''எங்களுக்கு சொந்தமா ரெண்டரைஏக்கர் நிலமும், போதுமான பசுமாடுகளும் இருக்குதுங்க. அதுபோக, வீட்டிலேயே சின்னமளிகைக் கடையும் இருக்கு. இதில் கிடைக்கிறவருமானமே எங்ககுடும்பத்துக்குப் போதும். போன தடவை எங்கவீட்டுக்காரரைத் தலைவராதேர்ந்தெடுத்தாங்க. குடிக்கக்கூட தண்ணியில்லாத இந்த ஊரின் பஞ்சத்தைப் போக்க ரெண்டுமூணு கிணறுவெட்டி தண்ணி கொடுத்தாரு. காலங்காலமா போக்குவரத்துவசதியில்லாத ஊருக்கு ஒருநாளைக்கு மூணுதடவை பஸ்ஸைவந்து போகவெச்சதுன்னு அவர் நல்லதுபண்ணினார். இந்தமுறை ஊரேசேர்ந்து என்னை தலைவியாக்கிடுச்சு. 'ஒரு முருங்கைமரமும் பசுவும்போதும்... ஏழைவாழ்வு நிறைஞ்சு போகும்'னு பாட்டாகவேபாடி இருக்காங்களே..! அதான் ஏழைங்கபொழப்புக்கு வழி பண்ணிக்கொடுக்க பசுமாடுவழங்குற ஐடியாவை யோசிச்சேன்.
ஒருபசுமாடு வாங்கனும்னா கிட்டத்தட்ட 10 ஆயிரம்ரூபாய்வரை செலவாகும். அவ்வளவுபணத்துக்கு எங்கிட்ட வழியில்லை. அதனாலதான் மூவாயிரம்ரூபாய் மதிப்புள்ளகன்னுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தேன்.
ரெண்டுவருஷத்தில் அதுங்க ஒருநாளைக்கு நாலுலிட்டர் பால்கறந்தாலே, அந்தக்குடும்பத்து ஜீவனத்துக்கு உதவியா இருக்கும்ல...'' என்றவர், ''இதைக்கேட்கவா என்னைத்தேடி இவ்வளவுதூரம்வந்தீங்க?'' என்றார்ஆச்சர்யமாக.
கோயிலுக்கு உபயமாக ஒற்றைடியூப்லைட்டை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன்வெளிச்சமே வெளியில்வராத அளவுக்கு தன்பெயரை எழுதிவைக்கிற இந்தக்காலத்தில்... சாந்தியின் ஆச்சர்யமே ஒரு ஆச்சர்யம்தானே!
- டி.தணிகைவேல்
நன்றி: ஆனந்தவிகடன்
'காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்' என்கிற பயனுள்ளமொழியை பாழாக புரிந்துகொண்டு, பதவி இருக்கும்போதே வாரிக்குவிப்பவர்களுக்கு மத்தியில்... சொந்தக் காசில்கன்றுக்குட்டிகளைவாங்கிக்கொடுத்து 50 தலித்குடும்பங்களைக்வாழ வைத்திருக்கிறார் ஒருபஞ்சாயத்துத்தலைவி. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாப்பாக்கம் ஊராட்சிமன்றத்தலைவியான சாந்திதான் இந்த 'அடடே' பெண்மணி!
சுமார் ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட இந்தக்கிராமத்தில் விவசாயமே பிரதானதொழில். ஆனால், சமீபகாலமாக ரியல்எஸ்டேட்பிசினஸ் நுழைய... விவசாயம் தள்ளாடுகிறது.
பிழைப்புக்கே கதியற்று கஷ்டஜீவனமே நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான், இந்தமுடிவை எடுத்தாராம் சாந்தி.
பயன்பெற்றவர்களில் ஒருவரான வெண்ணிலா,
''விவசாயவேலை இல்லாததால எங்கமக்கள் மெட்ராஸ், பெங்களூரூன்னு கூலிவேலைத்தேடிபோயிட்டாங்க. அப்படிப்போகக்கூட எங்களுக்கு வழியில்ல... குழந்தைங்களை வெச்சுகிட்டு வாழவும்வழியில்ல... நல்லவேளை எங்க பிரசிடென்ட் எங்களுக்கு கன்னுகுட்டி கொடுத்திருக்காங்க. ரெண்டுவருஷத்தில் அது நல்லாவளர்ந்து பால்கறக்க ஆரம்பிச்சிடும். எங்க குடும்பத்துக்கு கஞ்சி ஊத்த அதுவேபோதும்...'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
''தமிழரசிக்கு வாய்பேசமுடியாது. கணவனை விதிகிட்ட பறிகொடுத்துட்டு, நாலு பொண்ணுங்களை வைச்சுக்கிட்டு தனியாதவிக்கிறா... பிரசிடென்ட்கொடுத்த கன்னுக்குட்டிக்கு லட்சுமின்னுபேர்வெச்சிருக்கிற தமிழரசி, குடும்பத்துக்குவந்து சேர்ந்த 'லட்சுமி'யாகவேஅதைப்பார்க்கிறா...'' என்கிறார்கள் அக்கம்பக்க குடும்பத்தினர்.
தலைவிசாந்தியைச்சந்தித்துப்பேசினோம்.
''எங்களுக்கு சொந்தமா ரெண்டரைஏக்கர் நிலமும், போதுமான பசுமாடுகளும் இருக்குதுங்க. அதுபோக, வீட்டிலேயே சின்னமளிகைக் கடையும் இருக்கு. இதில் கிடைக்கிறவருமானமே எங்ககுடும்பத்துக்குப் போதும். போன தடவை எங்கவீட்டுக்காரரைத் தலைவராதேர்ந்தெடுத்தாங்க. குடிக்கக்கூட தண்ணியில்லாத இந்த ஊரின் பஞ்சத்தைப் போக்க ரெண்டுமூணு கிணறுவெட்டி தண்ணி கொடுத்தாரு. காலங்காலமா போக்குவரத்துவசதியில்லாத ஊருக்கு ஒருநாளைக்கு மூணுதடவை பஸ்ஸைவந்து போகவெச்சதுன்னு அவர் நல்லதுபண்ணினார். இந்தமுறை ஊரேசேர்ந்து என்னை தலைவியாக்கிடுச்சு. 'ஒரு முருங்கைமரமும் பசுவும்போதும்... ஏழைவாழ்வு நிறைஞ்சு போகும்'னு பாட்டாகவேபாடி இருக்காங்களே..! அதான் ஏழைங்கபொழப்புக்கு வழி பண்ணிக்கொடுக்க பசுமாடுவழங்குற ஐடியாவை யோசிச்சேன்.
ஒருபசுமாடு வாங்கனும்னா கிட்டத்தட்ட 10 ஆயிரம்ரூபாய்வரை செலவாகும். அவ்வளவுபணத்துக்கு எங்கிட்ட வழியில்லை. அதனாலதான் மூவாயிரம்ரூபாய் மதிப்புள்ளகன்னுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தேன்.
ரெண்டுவருஷத்தில் அதுங்க ஒருநாளைக்கு நாலுலிட்டர் பால்கறந்தாலே, அந்தக்குடும்பத்து ஜீவனத்துக்கு உதவியா இருக்கும்ல...'' என்றவர், ''இதைக்கேட்கவா என்னைத்தேடி இவ்வளவுதூரம்வந்தீங்க?'' என்றார்ஆச்சர்யமாக.
கோயிலுக்கு உபயமாக ஒற்றைடியூப்லைட்டை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன்வெளிச்சமே வெளியில்வராத அளவுக்கு தன்பெயரை எழுதிவைக்கிற இந்தக்காலத்தில்... சாந்தியின் ஆச்சர்யமே ஒரு ஆச்சர்யம்தானே!
- டி.தணிகைவேல்
நன்றி: ஆனந்தவிகடன்