kulirthazhal
28-05-2010, 11:49 AM
அசந்து உறங்கும்
அதிகாலை விடியல்,,..
அதட்டி எழுப்ப
ஆற்றலோடு ஆசைதான்...
உலகம்
விழித்துக்கொண்டால்...???
அவளை
கண்டபின் செல்ல
இருள் காத்துக்கொண்டிருந்தது..,
தற்கொலை ஆசையோடு....
அவள் விழி ஒளியை
எதிர்த்து பார்த்து கரைந்துபோகும்...
என் மூச்சி காற்றோடு
உயிர் தொலைவதுபோல்...
தாவணி ஒளிபிழம்பு
தலைக்குளியல்
துண்டு சுற்றிவந்தாள்....
காரிருளில் மின்னல்
மெதுவாக தவழ்வதுபோல்....
அவள் கைகளிடும்
கோலத்தைபற்றி
கற்பனை ஏதுமில்லை.,
தரிசன போதையில்
குழந்தையின் உற்சாகத்தோடு
துல்லிய மனம்
பேச ஏதுமின்றி
முன்னே ஓடியது...
அடுத்த விடியலை
துரத்திக்கொண்டு...,
நானும் ஓடினேன்
தொடர்ந்து......
இன்னும் எட்டு தெருக்களுக்கு
பேப்பர் போட.......,,,,,
-குளிர்தழல்
அதிகாலை விடியல்,,..
அதட்டி எழுப்ப
ஆற்றலோடு ஆசைதான்...
உலகம்
விழித்துக்கொண்டால்...???
அவளை
கண்டபின் செல்ல
இருள் காத்துக்கொண்டிருந்தது..,
தற்கொலை ஆசையோடு....
அவள் விழி ஒளியை
எதிர்த்து பார்த்து கரைந்துபோகும்...
என் மூச்சி காற்றோடு
உயிர் தொலைவதுபோல்...
தாவணி ஒளிபிழம்பு
தலைக்குளியல்
துண்டு சுற்றிவந்தாள்....
காரிருளில் மின்னல்
மெதுவாக தவழ்வதுபோல்....
அவள் கைகளிடும்
கோலத்தைபற்றி
கற்பனை ஏதுமில்லை.,
தரிசன போதையில்
குழந்தையின் உற்சாகத்தோடு
துல்லிய மனம்
பேச ஏதுமின்றி
முன்னே ஓடியது...
அடுத்த விடியலை
துரத்திக்கொண்டு...,
நானும் ஓடினேன்
தொடர்ந்து......
இன்னும் எட்டு தெருக்களுக்கு
பேப்பர் போட.......,,,,,
-குளிர்தழல்