PDA

View Full Version : தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை



M.Rishan Shareef
20-05-2010, 02:05 PM
தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை (http://mrishanshareef.blogspot.com/2010/05/blog-post_20.html)

வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை

கூடு திரும்பும் ஆவல்
தன் காலூன்றிப் பறந்த
மலையளவு மிகைத்திருக்கிறது
நாடோடிப் பறவைக்கு

அது நதி நீரை நோக்கும் கணம்
காண நேரிடலாம்
நாணல்களின் துயரையும்

சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து
தான் கண்டுவந்த
இரயில்பாதையோர நாணல்களின் துயர்
இதைவிட அதிகமென
அது சொல்லும் ஆறுதல்களை
நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும்

எல்லாத்துயர்களையும்
சேகரித்த பறவை
தன் துயரிறக்கிவர
தொலைவானம் ஏகும்
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்
கண்டுவரக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# மறுபாதி - கவிதைகளுக்கான காலாண்டிதழ் - 02
# சிக்கிமுக்கி இதழ் - 4 பெப்ரவரி, 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்

சிவகுமார்
20-05-2010, 03:38 PM
மிகவும் அற்புதமான வரிகள்! திரும்பத் திரும்ப படிக்க வைத்தது உங்களின் வார்த்தை ஜாலங்கள்! பாராட்டுக்கள் ரிஷான்!!

சிவா.ஜி
20-05-2010, 04:28 PM
நல்ல வரிகள் ரிஷான். உங்கள் கவிதைகளைக் குறித்து எப்போதுமிருக்கும் அதே ஆச்சர்யம் மற்றும் லேசான தடுமாற்றம்(விளங்கிக்கொள்வதில்தான்) இதிலும் இருக்கிறது.

இப்படிப்பட்ட குறியீட்டுக் கவிதைகள்...எனக்கு அதிகம் நெருக்கத்துக்கு வருவதில்லை.

ஆனாலும்...ரசிக்க முடிகிறது....ஆஹா என சிலாகிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் ரிஷான்.

jawid_raiz
21-05-2010, 04:55 AM
மனிதன் மனிதனை மதிக்க மறந்தாலும், நாணல்களினதும்... விட்டில்களினதும் துயருக்காக அழுபவன் கவிஞன் மட்டும் தான்.

அருமையான கற்பனை... அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரா!

ஆதி
24-05-2010, 09:44 AM
வரும் இன்னல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள பறவைகளுக்கு சிறகுகள் உண்டு நாணல்களுக்கு ??

ஆற்றோடு இருக்கும் நாணல்கள் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்கின்றன, ஆனால் ரயில் பாதையில் இருக்கும் நாணல்களின் நிலைமை நசுங்குவதை தவிர ஒன்றுமில்லை.. வளைந்தாளும் வெட்டுப்படும், நிமிர்ந்தாலும் வெட்டுப்படும்..

பெருந்துயர் வரும் போது நாணலாய் இரு என்பார்கள், ஆனால் நாணலாய் இருப்பதில் கூட இடம் உண்டு, இரயில் பாதையில் நாணலாய் இருத்தல் என்ன பிரையோசனம், நசிந்துபடுதலே கதி..

பெருவெள்ளமாய் நதி பாய்ந்து வந்தாலும் அது நாணலை நசிப்பதில்லை.. இரயிலோ தன் இறும்பு பாதங்களால் அவற்றை நசித்துப் போடும், வரும் போதும் போம் போதும்..


நதியோர நாணலின் துயருக்கு ஆறுதல் அறிந்த பறவைக்கு, தன் துயர் போக்கி கொள்ள வழியறியவில்லை..

பறவை - புலம்பெயர்ந்த பறவை

இரயில் பாதையில் உள்ள நாணல்கள் - சிக்கி கொண்ட உறவுகள்..

நதியில் உள்ள நாணல்கள் - மற்ற பிரதேசத்தில்/நாட்டில் உள்ள உறவுகள்/மனிதர்கள் வாழ்வின் ஏற்படும் துன்பங்கள் குறித்து வருந்துபவர்கள்..

இப்படி பொருள் கொள்கிறே ரிஷான் அண்ணா, சரியா தெரியவில்லை..

மீண்டும் அந்த பறவை தன் கூட்டை பார்த்துவரும் என்பதன் மூலம் பறவைக்கு தன் மண்ணில் நிரந்திரமாக தங்கும் சமயம் வரவில்லை என்பது புரிகிறது..

பாராட்டுக்கள் ரிஷான் அண்ணா..

அமரன்
24-05-2010, 09:19 PM
சபாஷ் ஆதன்..

ஒரு சில விசயங்களில் நமக்குக் கீழே எத்தனைபேர் என எண்ணி ஆறுதலடைய வேணும். வேறு சிலதில் நமக்கு மேல் எத்தனை பேர் என எண்ணி உழைக்க வேணும். கவிஞர் கூட இதை அழகாக மக்கள் திலகம் ஊடாகச் சொல்லி இருப்பார். சொன்ன கவிஞருக்கு எத்தனை துயரோ..

நம்முடன் கூடவே வந்தாலும் ஒன்றாகி விடுவதில்லை நிழல். அது மாதிரித்தான் பறவையின் துயரமும்.. உனக்காவது சிறகிருக்கு.. சிறகறந்த பறவைகளுக்கு.. இப்படித்தான் சொல்ல வேண்டி இருக்குப் பறவைக்கு. இந்த மாதிரியான சங்கிலிச் சுமப்புகள், ஆறுதல் அணைப்புகளில்தான் பூவுலகு இன்றும் சுழன்றுகொண்டுள்ளது.

பாராட்டுகிறேன் ரிஷான்.

M.Rishan Shareef
05-06-2010, 06:03 AM
அன்பின் சிவகுமார்,

//மிகவும் அற்புதமான வரிகள்! திரும்பத் திரும்ப படிக்க வைத்தது உங்களின் வார்த்தை ஜாலங்கள்! பாராட்டுக்கள் ரிஷான்!!//

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef
05-06-2010, 06:10 AM
அன்பின் ஆதன்,
//வரும் இன்னல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள பறவைகளுக்கு சிறகுகள் உண்டு நாணல்களுக்கு ??

ஆற்றோடு இருக்கும் நாணல்கள் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்கின்றன, ஆனால் ரயில் பாதையில் இருக்கும் நாணல்களின் நிலைமை நசுங்குவதை தவிர ஒன்றுமில்லை.. வளைந்தாளும் வெட்டுப்படும், நிமிர்ந்தாலும் வெட்டுப்படும்..

பெருந்துயர் வரும் போது நாணலாய் இரு என்பார்கள், ஆனால் நாணலாய் இருப்பதில் கூட இடம் உண்டு, இரயில் பாதையில் நாணலாய் இருத்தல் என்ன பிரையோசனம், நசிந்துபடுதலே கதி..

பெருவெள்ளமாய் நதி பாய்ந்து வந்தாலும் அது நாணலை நசிப்பதில்லை.. இரயிலோ தன் இறும்பு பாதங்களால் அவற்றை நசித்துப் போடும், வரும் போதும் போம் போதும்..


நதியோர நாணலின் துயருக்கு ஆறுதல் அறிந்த பறவைக்கு, தன் துயர் போக்கி கொள்ள வழியறியவில்லை..

பறவை - புலம்பெயர்ந்த பறவை

இரயில் பாதையில் உள்ள நாணல்கள் - சிக்கி கொண்ட உறவுகள்..

நதியில் உள்ள நாணல்கள் - மற்ற பிரதேசத்தில்/நாட்டில் உள்ள உறவுகள்/மனிதர்கள் வாழ்வின் ஏற்படும் துன்பங்கள் குறித்து வருந்துபவர்கள்..

இப்படி பொருள் கொள்கிறே ரிஷான் அண்ணா, சரியா தெரியவில்லை..

மீண்டும் அந்த பறவை தன் கூட்டை பார்த்துவரும் என்பதன் மூலம் பறவைக்கு தன் மண்ணில் நிரந்திரமாக தங்கும் சமயம் வரவில்லை என்பது புரிகிறது..

பாராட்டுக்கள் ரிஷான் அண்ணா..//

கவிதையை மிகவும் ஆழமாகவும், மிகச் சரியாகவும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். மனம் மகிழவும், ஆச்சரியப்படுத்தவும் செய்கிறது உங்கள் கருத்து.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef
05-06-2010, 06:16 AM
அன்பின் சிவா.ஜி,

//நல்ல வரிகள் ரிஷான். உங்கள் கவிதைகளைக் குறித்து எப்போதுமிருக்கும் அதே ஆச்சர்யம் மற்றும் லேசான தடுமாற்றம்(விளங்கிக்கொள்வதில்தான்) இதிலும் இருக்கிறது.

இப்படிப்பட்ட குறியீட்டுக் கவிதைகள்...எனக்கு அதிகம் நெருக்கத்துக்கு வருவதில்லை.

ஆனாலும்...ரசிக்க முடிகிறது....ஆஹா என சிலாகிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் ரிஷான்.//

சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. அவற்றுக்கு குறியீடுகள் தேவைப்படுகின்றன. எனது கவிதைகளோடு தொடர்ந்து வரும் உங்களது கருத்து மகிழச் செய்கிறது.

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef
05-06-2010, 06:19 AM
அன்பின் Jawid_Raiz,

//மனிதன் மனிதனை மதிக்க மறந்தாலும், நாணல்களினதும்... விட்டில்களினதும் துயருக்காக அழுபவன் கவிஞன் மட்டும் தான்.

அருமையான கற்பனை... அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரா!//

:-)
அழகான கருத்து நண்பரே.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி !

M.Rishan Shareef
05-06-2010, 06:22 AM
அன்பின் நண்பர் அமரன்,

//சபாஷ் ஆதன்..

ஒரு சில விசயங்களில் நமக்குக் கீழே எத்தனைபேர் என எண்ணி ஆறுதலடைய வேணும். வேறு சிலதில் நமக்கு மேல் எத்தனை பேர் என எண்ணி உழைக்க வேணும். கவிஞர் கூட இதை அழகாக மக்கள் திலகம் ஊடாகச் சொல்லி இருப்பார். சொன்ன கவிஞருக்கு எத்தனை துயரோ..

நம்முடன் கூடவே வந்தாலும் ஒன்றாகி விடுவதில்லை நிழல். அது மாதிரித்தான் பறவையின் துயரமும்.. உனக்காவது சிறகிருக்கு.. சிறகறந்த பறவைகளுக்கு.. இப்படித்தான் சொல்ல வேண்டி இருக்குப் பறவைக்கு. இந்த மாதிரியான சங்கிலிச் சுமப்புகள், ஆறுதல் அணைப்புகளில்தான் பூவுலகு இன்றும் சுழன்றுகொண்டுள்ளது.

பாராட்டுகிறேன் ரிஷான்.//

நிச்சயமாக நண்பரே.
உங்களைப் போன்ற அன்பானவர்களின் ஆதரவுதான் சிறகொடிந்த பறவைக்குக் கூட பறப்பதற்கும் அதன் எதிர்காலத்தைக் கண்டுகொள்ளவும் தூண்டுதலாக இருக்கிறது தொடர்ந்தும்.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

பாரதி
09-06-2010, 03:39 PM
வேடந்தாங்கலாய் இல்லாமல் வெறும் கூடாயினும் தன் கூடாக இருக்கட்டும் என முயற்சிக்கும் பறவையின் நம்பிக்கை மெய் பெறட்டும்.
நல்ல சொற்கட்டுடன் அமைந்த கவிதை.
பாராட்டுகிறேன் நண்பரே.

M.Rishan Shareef
16-06-2010, 03:03 AM
அன்பின் பாரதி,

//வேடந்தாங்கலாய் இல்லாமல் வெறும் கூடாயினும் தன் கூடாக இருக்கட்டும் என முயற்சிக்கும் பறவையின் நம்பிக்கை மெய் பெறட்டும்.
நல்ல சொற்கட்டுடன் அமைந்த கவிதை.
பாராட்டுகிறேன் நண்பரே. //

உங்கள் வார்த்தைகள் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிறது.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே.