PDA

View Full Version : அன்புத் தோழி



சுடர்விழி
18-05-2010, 08:54 AM
சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி !

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!



----சுடர்விழி

govindh
18-05-2010, 09:55 AM
"சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
ஆழமான நட்பு நம்முள்..."

நட்புக்கு நன்றி கூறும் நல் வாழ்த்து...
பாராட்டுக்கள்.

சுடர்விழி
18-05-2010, 01:07 PM
நன்றி !!!

கலையரசி
18-05-2010, 01:59 PM
"சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !"

உயிர்த்தோழியின் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் அருமையான வரிகள்!
பாராட்டுக்கள் சுடர்விழி!

சுடர்விழி
18-05-2010, 02:07 PM
நன்றி கலையரசி ! இது என்னுடைய உயிர்த் தோழிக்காக நான் எழுதியது...

பாரதி
13-06-2010, 09:22 AM
நல்ல கவிதை!
உண்மையான நட்பின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.
மன்றத்தில் முன்பும் கூட சில உறவுகள் இதைப்போன்ற சிறப்பான கவிதைகளை தந்திருக்கிறார்கள்.
இன்னும் எழுதுங்கள்.
வாழ்த்தும் நன்றியும்.

சுடர்விழி
14-06-2010, 02:07 AM
நன்றி பாரதி !

simariba
14-06-2010, 03:08 AM
நட்புக்கு ஒரு மகுடம் இக்கவிதை நன்று!! வாழ்த்துக்கள்!!

சுடர்விழி
14-06-2010, 07:51 AM
நன்றி அபி !!

கீதம்
16-06-2010, 11:34 PM
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!



----சுடர்விழி

என் தோழியைப் பிரிந்து பல காலம் ஆகிவிட்டது. அவள் எங்கிருக்கிறாள் என்பதும் எனக்குத் தெரியாது. அவள் என்னை நினைத்துப்பார்ப்பாளா என்றும் தெரியவில்லை.உங்கள் கவிதை என் பழைய நினைவுகளை அசைபோடச் செய்தது. மிகுந்த பாராட்டுகள், சுடர்விழி.

அமரன்
17-06-2010, 04:36 PM
நட்புக்கு இன்னொரு கவிதை..

எதையும் இழக்கும் அளவுக்கு எதுவும் இருக்கக் கூடாது என்பதே என் நிலைப்பாடு.

பாராட்டுகள் சுடர்விழி

சுடர்விழி
21-06-2010, 01:24 AM
நன்றி அமரன் !

பா.ராஜேஷ்
30-06-2010, 06:56 PM
அருமையான நட்பின் வெளிப்பாடு. வரிகளும் மிக அருமை. பாராட்டுக்கள் நண்பரே.

சுடர்விழி
02-07-2010, 08:18 AM
நன்றி நண்பரே !!!