PDA

View Full Version : சூடு, சுரணை...!



குணமதி
11-05-2010, 04:46 PM
சூடு, சுரணை...!


உணவளித்தவரிடம்
வாலைக் குழைக்கிறது.

பழகாத பிறர் எதுவும் பணித்தால்
'கொர் முர்' என்று உறுமுகிறது.

உணவிட்டவர்க்கு உதவ
உயிரையும் கொடுக்கிறது.

ஊர்க் கொள்ளையரை உயிர்பறிக்கும் கேடரைப்
பிடிக்க உயிர் கொடுத்தும் போராடுகிறது.

நன்றி உணர்வோடு
சூடும் சுரணையுமுள்ள உயிரி!

அக்னி
11-05-2010, 05:05 PM
தலைக்கும் உடலுக்குமான பொருத்தம் எனக்குப் பிடிபடவில்லை...

இருந்தும், ஓவியனின்
வேரைத் தே(நா)டி 02 - ஜிம்மி..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21058&highlight=%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D)
நினைவுப்பதிவை நினைவிலெழுப்பிவிட்டது.

பாராட்டு...

அமரன்
11-05-2010, 06:42 PM
நல்லதையே நாடு..

வாலைக் குழைத்து வரும் நாய்தான்..

பாராட்டு குணமதி!

எப்போதும் உங்கள் சொற்கட்டு
நெஞ்சை வருடும் நேற்றய காற்று.

குணமதி
15-05-2010, 05:47 PM
அக்னி, அமரன் இருவருக்கும் நன்றி.