ரங்கராஜன்
02-05-2010, 01:45 PM
நான் இனிமேல் ரிப்போர்ட்டர் இல்லை...
வணக்கம் உறவுகளே...
அனைவரும் நன்றாக தான் இருப்பீர்கள், நானும் தான். அதுவும் இந்த இரண்டு நாளாய், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் இரண்டு நாளாய் சென்னையில் மழை. அதுவும் முதல் நாள் பெய்த கன மழையில் இதுவரை அடித்த வெயில் அனைத்தையும் சாப்பிட்டு விட்டது. தட்பவெட்பம் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. எனக்கு இந்த மாதிரி மழை காலம் ரொம்ப பிடிக்கும். ரொம்ப பிடிக்கும் என்றால் மழையில் போய் மணிரத்தினம் பட நாயகி மாதிரி ஆட பிடிக்காது. பார்க்க பிடிக்கும், அதுவும் எனது வீட்டில் எனது அறையில் பிரத்தியேக அழுக்கு ஜன்னல் வழியாக மழை பெய்யும் காட்சியை பார்க்க ஆயிரம் கண் வேண்டும்........... காரணம் காற்றுடன் மழை பெய்யும் போது, ஒவ்வொரு கண்ணிலும் தூசி விழும், துடைக்கும் நேரத்தில் மற்ற
கண்ணில் பார்க்கலாமே. ஹா ஹா ஹா சும்மா சொன்னேன். அந்த காட்சி உண்மையில் அழகாக இருக்கும்.
மழை பெய்யும் பொழுது உருவாகின்ற அந்த சாரலுடன் அடிக்கின்ற காற்று முகத்தில் படும் போது கிடைகின்ற தெளிவு, ராத்திரி சரக்கு அடித்து விட்டு காலையில் மோர் குடித்த பின்னர் கிடைக்குமே ஒரு தெளிவு அதைவிட பல மடங்கு இருக்கும். மழை காலத்தில் கண்டிப்பாக ஜுரம், கொசு, தும்மல், சரக்கு அடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும், பழைய காதலியின் ஞாபகம், மாடியில் வடாம் காயவச்சோமே, நாளைக்கு தயிர் புளிக்காதே.............. அனைவருக்கும் எதாவது ஒன்று வரும். ஆனால் எனக்கு எழுத வரும், என்னை போல பல பேருக்கு இந்த சூழ்நிலையில் எழுத வரும் என்று நினைக்கிறேன். மனம் வேறு, பாலாஜியின் மனைவி இறந்துவிட்டாளே, என்று வருத்தமாக இருக்கிறது. அவனை இன்று மாலை, சந்தித்தேன்....
இரண்டு நாள் கழித்து. சோகத்தை அவனிடம் காட்டாமல்
"என்ன மச்சி, எங்கடா போற" என்றேன்.
"இட்லி வாங்க போறேன்டா"
"சரி வீட்டுக்கு வாடா"
"இல்லடா நான் வரக்கூடாது டா"
"ஏன் வீட்டுக்கு தூரமா" என்றேன். சிரித்தான்.
"பின்ன என்னடா, வா வீட்டுக்கு, என்று கையை பிடித்தேன்". கையை உதறியவன்.
"போச்சு போச்சு நீ போய் வீட்டுல குளிக்கணும், இப்ப"
"டேய் எனக்கு மூடு இருந்தா தான் குளிப்பேன், இந்த மாதிரி விஷயத்திற்கு எல்லாம் என்னால் குளிக்க முடியாது. சாக்கடையில் விழுந்த கூட மூடு இல்லன்னா, முகத்தை மட்டும் கழிவிட்டு போய் டிவி பாப்பேன்டா"
சிரித்தான். அவன் தோள் மீது கையை போட்டேன், திமிறினான் தூர ஒடினான்.
"சரி கிட்ட வாடா, எப்படி இருந்தாலும் நான் போய் குளிக்க போறேன், அப்புறம் என்ன வாகிட்ட" என்றேன். வந்தான்.
"வா வீட்டுக்கு போலாம்"
"இல்லடா நான் வரக்கூடாது"
"சரி நாளைக்கு வா"
"இல்லடா இன்னும் ஒரு வருஷத்திற்கு யார் வீட்டுக்கும் போக கூடாது"
"அப்புறம் அசிங்கமா, எதாவது சொல்லிடுவேன், ஒழுங்கு மரியாதையா, வா வீட்டுக்கு"
"இல்லடா வீட்டுல அம்மா திட்டுவாங்க, மத்தவங்க வீட்டுக்கு போனா தீட்டு அவங்களை தாக்குமா"
"அப்ப எனக்கு ஒரு ஹேல்ப் பண்ணு, எனக்கு ஆவாதவன் ஒருத்தன் ஆபிஸ்ல இருக்கான், அவன் வீட்டுக்கு போய்டு வந்துடேன், அவனை உன் தீட்டு தாக்கட்டும்"
அமைதியாக சிரித்தான்.
"சரி வா, எங்காவது வெளியில போய்டு வரலாம்"
"ம்ம் சரி ஆனா, 6 மணிக்குள் வீட்டு வந்துடனும்"
"இல்லன்னா"
"தீட்டு டா"
"அய்யோ அப்பா விடுறா சாமி, 6 மணிக்குள் வந்துடலாம்" என்று கடிகாரத்தை பார்த்தேன். மணி 6.45 காட்டியது. அவனை பார்த்தேன். அவன் சிரித்தான். கையில் எதோ பொட்டலம் வைத்து இருந்தான்.
"கையில என்னடா" என்றேன். அவன் முகம் சட்டென்று இறுகியது.
"மூக்கு கண்ணாடி டா, அவளுடையது ரிப்பேர் ஆயிடுச்சி, அத சரி செய்ய குடுத்தேன், 4 வாரம் ஆச்சு, இப்ப தான் திரும்பி கொடுத்தான்" குரல் உள்ளே சென்றது. அவன் என் கண்ணை பார்த்தான், நான் அவனை தவிர்த்து விட்டு அந்த கண்ணாடியை பார்த்தேன். இறுக்க பிடித்துக் கொண்டு இருந்தான். இருவரும் கொஞ்ச நேரம் பேசவில்லை, அமைதியாக வெளியில் போடப்பட்ட சிமெண்ட் பலகையில் அமர்ந்து இருந்தோம். அந்த நேரம் பார்த்து என்னுடைய இன்னொரு நண்பன் வந்தான். வரும் போது நிலைமை அறியாது, பாட்டு வேற அதுவும், விஜயின் சுறா புதுப்பட பாடலை சத்தமாக
பாடிக்கொண்டு வந்தான்.
"வங்ககடல் எல்ல, நான் சிங்கம் பெத்தபிள்ள ............." என்று என்னிடம் வந்து சிரித்தான்.
"உங்கப்பாவுக்கு அது தெரியுமாடா" என்றேன் நான் சீரியஸாக. அவ்வளவு தான் குபீர் என்று பாலாஜி சத்தமாக சிரிக்க, ரோட்டின் முனையில் சென்றவர்கள் கூட திரும்பி பார்த்தார்கள். அவன்
சிரிப்பை அடக்க 5 நிமிடம் ஆனது. என்னுடைய வேலை முடிந்து விட்டது என்று அங்கு இருந்து கிளம்பினேன்.
சரி இந்த திரியின் தலைப்புக்கும் நான் இதுவரை சொன்ன விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று நீங்கள் நினைக்க கூடும், ஆம் நான் எழுத நினைத்தது வேறு ஆனால் என்னை எழுத வைத்த விஷயம் வேறு........... சாரி......... சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் இனிமேல் ரிப்போர்ட்டர் கிடையாது............. உதவி செய்தி ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்து விட்டது. எனக்கு எனக்கே ஆச்சர்யம் இது நடக்கும் என்று சத்தியமாக நான் நினைக்கவில்லை........ காரணம் இந்த பதவிக்கு 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். செய்தித்துறையில் ஊரி இருக்க வேண்டும். பல ஆண்டுகால அனுபவம் வேண்டும், எந்த செய்தி வேண்டும், எது வேண்டாம் என்று பிரித்து பார்க்கும் திறன் வேண்டும்........... இதில் எதுவுமே இல்லாத எனக்கு இந்த பதவி கிடைத்தது....... மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது........... காரணம் நான் இந்த துறைக்கு வந்து 10 மாதம் கூட முழுமையடையவில்லை. ஆனால் என் சேனலுக்கு வந்த போராத காலம் எனக்கு இந்த பதவி கிடைத்து விட்டது............ இந்த பதவியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது.......... அப்புறம் ஏன் இவ்வளவு லேட்டா சொல்றேன், என்று கோபப்படாதீர்கள். எனக்குள்ளே சில பயம் இருந்தது. இந்த வேலையை என்னால் செய்யமுடியுமா என்ற அவநம்பிக்கை வேறு. காரணம் செய்தி ஆசிரியர் தான் சேனல் உரிமையாளருக்கு அடுத்த போஸ்டில் இருப்பவர், அவருக்கு அடுத்த போஸ்டில் இருக்கும் பதவி தான் இந்த உதவி செய்தி ஆசிரியர் வேலை.......... அதனால் தான் இந்த தயக்கம்............... ஆனால் கடந்த சில வாரமாக என்னால் தனியாக ஒரு செய்தி தொகுப்பையே ஆன் ஏர் டெலக்காஸ்ட் செய்ய முடிந்தது. கடந்த சில தினங்களாக காலை செய்தி 7 டூ 7.30 நான் செய்தது தான். நம்பிக்கை வந்து விட்டது, அதனால் மன்றத்தில் இதை முதலில் சொல்லுகிறேன். வீட்டில் கூட தெரியாது. தல, தாமரை, ஆரென் அண்ணன்களுக்கு மட்டும் தெரியும்.
எனக்கு தமிழ், உலக அறிவு, அரசியல், பொறுமை, வாழ்க்கை தத்துவம், தந்திரம், மார்கெட்டிங், இப்படி அனைத்தையும் கத்துக் கொடுத்த மன்றத்திற்கு நன்றி. மன்றத்தின் மூலமாக இணைந்து இருக்கும அனைத்து அண்ணன்கள், தங்கைகள், அக்காக்கள், தாத்தாக்கள் (தல), பாட்டிகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள், சகலகலா வல்லவர்கள், சண்டைக்காரர்கள், அப்பிரானிகள் போன்ற அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். காரணம் உங்கள் அனைவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவை அனைத்தும் தான், என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமாக அமைகிறது. என் வளர்ச்சியில் கண்டிப்பாக மன்றத்தின் பங்கு மிக அதிகம். என்னை போல மன்றம் இன்னும் பலரை வழிநடத்தி வாழ்க்கையில் வெற்றியடைய செய்ய வேண்டும்.
நன்றி ............... வணக்கம் ................... மெகா சீரியல் முடிச்சுபோச்சு......... போய் வேலையை பாருங்க...........ஹா ஹா ஹா
வணக்கம் உறவுகளே...
அனைவரும் நன்றாக தான் இருப்பீர்கள், நானும் தான். அதுவும் இந்த இரண்டு நாளாய், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் இரண்டு நாளாய் சென்னையில் மழை. அதுவும் முதல் நாள் பெய்த கன மழையில் இதுவரை அடித்த வெயில் அனைத்தையும் சாப்பிட்டு விட்டது. தட்பவெட்பம் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. எனக்கு இந்த மாதிரி மழை காலம் ரொம்ப பிடிக்கும். ரொம்ப பிடிக்கும் என்றால் மழையில் போய் மணிரத்தினம் பட நாயகி மாதிரி ஆட பிடிக்காது. பார்க்க பிடிக்கும், அதுவும் எனது வீட்டில் எனது அறையில் பிரத்தியேக அழுக்கு ஜன்னல் வழியாக மழை பெய்யும் காட்சியை பார்க்க ஆயிரம் கண் வேண்டும்........... காரணம் காற்றுடன் மழை பெய்யும் போது, ஒவ்வொரு கண்ணிலும் தூசி விழும், துடைக்கும் நேரத்தில் மற்ற
கண்ணில் பார்க்கலாமே. ஹா ஹா ஹா சும்மா சொன்னேன். அந்த காட்சி உண்மையில் அழகாக இருக்கும்.
மழை பெய்யும் பொழுது உருவாகின்ற அந்த சாரலுடன் அடிக்கின்ற காற்று முகத்தில் படும் போது கிடைகின்ற தெளிவு, ராத்திரி சரக்கு அடித்து விட்டு காலையில் மோர் குடித்த பின்னர் கிடைக்குமே ஒரு தெளிவு அதைவிட பல மடங்கு இருக்கும். மழை காலத்தில் கண்டிப்பாக ஜுரம், கொசு, தும்மல், சரக்கு அடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும், பழைய காதலியின் ஞாபகம், மாடியில் வடாம் காயவச்சோமே, நாளைக்கு தயிர் புளிக்காதே.............. அனைவருக்கும் எதாவது ஒன்று வரும். ஆனால் எனக்கு எழுத வரும், என்னை போல பல பேருக்கு இந்த சூழ்நிலையில் எழுத வரும் என்று நினைக்கிறேன். மனம் வேறு, பாலாஜியின் மனைவி இறந்துவிட்டாளே, என்று வருத்தமாக இருக்கிறது. அவனை இன்று மாலை, சந்தித்தேன்....
இரண்டு நாள் கழித்து. சோகத்தை அவனிடம் காட்டாமல்
"என்ன மச்சி, எங்கடா போற" என்றேன்.
"இட்லி வாங்க போறேன்டா"
"சரி வீட்டுக்கு வாடா"
"இல்லடா நான் வரக்கூடாது டா"
"ஏன் வீட்டுக்கு தூரமா" என்றேன். சிரித்தான்.
"பின்ன என்னடா, வா வீட்டுக்கு, என்று கையை பிடித்தேன்". கையை உதறியவன்.
"போச்சு போச்சு நீ போய் வீட்டுல குளிக்கணும், இப்ப"
"டேய் எனக்கு மூடு இருந்தா தான் குளிப்பேன், இந்த மாதிரி விஷயத்திற்கு எல்லாம் என்னால் குளிக்க முடியாது. சாக்கடையில் விழுந்த கூட மூடு இல்லன்னா, முகத்தை மட்டும் கழிவிட்டு போய் டிவி பாப்பேன்டா"
சிரித்தான். அவன் தோள் மீது கையை போட்டேன், திமிறினான் தூர ஒடினான்.
"சரி கிட்ட வாடா, எப்படி இருந்தாலும் நான் போய் குளிக்க போறேன், அப்புறம் என்ன வாகிட்ட" என்றேன். வந்தான்.
"வா வீட்டுக்கு போலாம்"
"இல்லடா நான் வரக்கூடாது"
"சரி நாளைக்கு வா"
"இல்லடா இன்னும் ஒரு வருஷத்திற்கு யார் வீட்டுக்கும் போக கூடாது"
"அப்புறம் அசிங்கமா, எதாவது சொல்லிடுவேன், ஒழுங்கு மரியாதையா, வா வீட்டுக்கு"
"இல்லடா வீட்டுல அம்மா திட்டுவாங்க, மத்தவங்க வீட்டுக்கு போனா தீட்டு அவங்களை தாக்குமா"
"அப்ப எனக்கு ஒரு ஹேல்ப் பண்ணு, எனக்கு ஆவாதவன் ஒருத்தன் ஆபிஸ்ல இருக்கான், அவன் வீட்டுக்கு போய்டு வந்துடேன், அவனை உன் தீட்டு தாக்கட்டும்"
அமைதியாக சிரித்தான்.
"சரி வா, எங்காவது வெளியில போய்டு வரலாம்"
"ம்ம் சரி ஆனா, 6 மணிக்குள் வீட்டு வந்துடனும்"
"இல்லன்னா"
"தீட்டு டா"
"அய்யோ அப்பா விடுறா சாமி, 6 மணிக்குள் வந்துடலாம்" என்று கடிகாரத்தை பார்த்தேன். மணி 6.45 காட்டியது. அவனை பார்த்தேன். அவன் சிரித்தான். கையில் எதோ பொட்டலம் வைத்து இருந்தான்.
"கையில என்னடா" என்றேன். அவன் முகம் சட்டென்று இறுகியது.
"மூக்கு கண்ணாடி டா, அவளுடையது ரிப்பேர் ஆயிடுச்சி, அத சரி செய்ய குடுத்தேன், 4 வாரம் ஆச்சு, இப்ப தான் திரும்பி கொடுத்தான்" குரல் உள்ளே சென்றது. அவன் என் கண்ணை பார்த்தான், நான் அவனை தவிர்த்து விட்டு அந்த கண்ணாடியை பார்த்தேன். இறுக்க பிடித்துக் கொண்டு இருந்தான். இருவரும் கொஞ்ச நேரம் பேசவில்லை, அமைதியாக வெளியில் போடப்பட்ட சிமெண்ட் பலகையில் அமர்ந்து இருந்தோம். அந்த நேரம் பார்த்து என்னுடைய இன்னொரு நண்பன் வந்தான். வரும் போது நிலைமை அறியாது, பாட்டு வேற அதுவும், விஜயின் சுறா புதுப்பட பாடலை சத்தமாக
பாடிக்கொண்டு வந்தான்.
"வங்ககடல் எல்ல, நான் சிங்கம் பெத்தபிள்ள ............." என்று என்னிடம் வந்து சிரித்தான்.
"உங்கப்பாவுக்கு அது தெரியுமாடா" என்றேன் நான் சீரியஸாக. அவ்வளவு தான் குபீர் என்று பாலாஜி சத்தமாக சிரிக்க, ரோட்டின் முனையில் சென்றவர்கள் கூட திரும்பி பார்த்தார்கள். அவன்
சிரிப்பை அடக்க 5 நிமிடம் ஆனது. என்னுடைய வேலை முடிந்து விட்டது என்று அங்கு இருந்து கிளம்பினேன்.
சரி இந்த திரியின் தலைப்புக்கும் நான் இதுவரை சொன்ன விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று நீங்கள் நினைக்க கூடும், ஆம் நான் எழுத நினைத்தது வேறு ஆனால் என்னை எழுத வைத்த விஷயம் வேறு........... சாரி......... சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் இனிமேல் ரிப்போர்ட்டர் கிடையாது............. உதவி செய்தி ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்து விட்டது. எனக்கு எனக்கே ஆச்சர்யம் இது நடக்கும் என்று சத்தியமாக நான் நினைக்கவில்லை........ காரணம் இந்த பதவிக்கு 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். செய்தித்துறையில் ஊரி இருக்க வேண்டும். பல ஆண்டுகால அனுபவம் வேண்டும், எந்த செய்தி வேண்டும், எது வேண்டாம் என்று பிரித்து பார்க்கும் திறன் வேண்டும்........... இதில் எதுவுமே இல்லாத எனக்கு இந்த பதவி கிடைத்தது....... மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது........... காரணம் நான் இந்த துறைக்கு வந்து 10 மாதம் கூட முழுமையடையவில்லை. ஆனால் என் சேனலுக்கு வந்த போராத காலம் எனக்கு இந்த பதவி கிடைத்து விட்டது............ இந்த பதவியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது.......... அப்புறம் ஏன் இவ்வளவு லேட்டா சொல்றேன், என்று கோபப்படாதீர்கள். எனக்குள்ளே சில பயம் இருந்தது. இந்த வேலையை என்னால் செய்யமுடியுமா என்ற அவநம்பிக்கை வேறு. காரணம் செய்தி ஆசிரியர் தான் சேனல் உரிமையாளருக்கு அடுத்த போஸ்டில் இருப்பவர், அவருக்கு அடுத்த போஸ்டில் இருக்கும் பதவி தான் இந்த உதவி செய்தி ஆசிரியர் வேலை.......... அதனால் தான் இந்த தயக்கம்............... ஆனால் கடந்த சில வாரமாக என்னால் தனியாக ஒரு செய்தி தொகுப்பையே ஆன் ஏர் டெலக்காஸ்ட் செய்ய முடிந்தது. கடந்த சில தினங்களாக காலை செய்தி 7 டூ 7.30 நான் செய்தது தான். நம்பிக்கை வந்து விட்டது, அதனால் மன்றத்தில் இதை முதலில் சொல்லுகிறேன். வீட்டில் கூட தெரியாது. தல, தாமரை, ஆரென் அண்ணன்களுக்கு மட்டும் தெரியும்.
எனக்கு தமிழ், உலக அறிவு, அரசியல், பொறுமை, வாழ்க்கை தத்துவம், தந்திரம், மார்கெட்டிங், இப்படி அனைத்தையும் கத்துக் கொடுத்த மன்றத்திற்கு நன்றி. மன்றத்தின் மூலமாக இணைந்து இருக்கும அனைத்து அண்ணன்கள், தங்கைகள், அக்காக்கள், தாத்தாக்கள் (தல), பாட்டிகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள், சகலகலா வல்லவர்கள், சண்டைக்காரர்கள், அப்பிரானிகள் போன்ற அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். காரணம் உங்கள் அனைவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவை அனைத்தும் தான், என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமாக அமைகிறது. என் வளர்ச்சியில் கண்டிப்பாக மன்றத்தின் பங்கு மிக அதிகம். என்னை போல மன்றம் இன்னும் பலரை வழிநடத்தி வாழ்க்கையில் வெற்றியடைய செய்ய வேண்டும்.
நன்றி ............... வணக்கம் ................... மெகா சீரியல் முடிச்சுபோச்சு......... போய் வேலையை பாருங்க...........ஹா ஹா ஹா