PDA

View Full Version : இதயத்துள் நீ !



சுடர்விழி
01-05-2010, 11:33 AM
இன்று...
நீ என் இதயத்தில்
வார்த்தை
முட்களை விதைக்கிறாய் !
வருத்தமாக இருக்கிறது..!
எனக்கு வலிப்பதால் அல்ல!
நீ
முதன்முதலில்
உன் பாதம் பதித்து வரும்போது..
உனக்கு வலிக்குமே என்று ...!

---சுடர்விழி

குணமதி
01-05-2010, 11:49 AM
பழைய செய்தி புதிய உத்தியில்!

பாராட்டு.

அமரன்
01-05-2010, 11:57 AM
இன்று...
நீ என் இதயத்தில்
வார்த்தை
முட்களை விதைக்கிறாய் !
வருத்தமாக இருக்கிறது..!
எனக்கு வலிப்பதால் அல்ல!
நீ
முதன்முதலில்
உன் பாதம் பதித்து வரும்போது..
உனக்கு வலிக்குமே என்று ...!

---சுடர்விழி

சிலந்தி பின்னிய வலையில்
சிக்குவதில்லை சிலந்தி..

என்
தலை மயிர்க் கணக்கில்
வலையோடும் இழைகளில்
தனக்கென ஒரு வழி
அமைத்திடும் சிலந்தி..

சிவா.ஜி
01-05-2010, 12:11 PM
என்ன ஒரு நம்பிக்கை....முள்பதித்தவளே...அதனுள் நுழைவாளென்று....

நல்ல மனசுக்காரன் இந்தக் காதலன்....இன்னா செய்தவளுக்கு நன்னயம் செய்கிறானே..

வாழ்த்துக்கள் சுடர்விழி.

அமரன்
01-05-2010, 12:13 PM
என்ன ஒரு நம்பிக்கை....முள்பதித்தவளே...அதனுள் நுழைவாளென்று....

நல்ல மனசுக்காரன் இந்தக் காதலன்....இன்னா செய்தவளுக்கு நன்னயம் செய்கிறானே..

வாழ்த்துக்கள் சுடர்விழி.

இவனா நல்ல மனசுக்காரன்..

முள்ளு வந்துட்டுது... ரோசாவே நீ எங்கே என்று வஞ்சகம் பூண்கிறான் சிவா..

அதுக்கு அவள் என்ன சொல்வாள் தெரியுமா..

துணிச்சவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை..

வீரனுக்கு முட்படுக்கை கட்டு இல் மெத்தை.

கீதம்
01-05-2010, 12:15 PM
இருவழிப்பாதை கொண்ட இதயமாக இருந்தால் இந்தத் துன்பம் கிடையாது. ஆனால் ஒருவழியில் வந்து மறுவழியில் வெளியேறிடுவாளோ என்ற பயமும் இருக்கிறது.

கவிதை நன்று. பாராட்டுகள் சுடர்விழி.

சிவா.ஜி
01-05-2010, 12:32 PM
ஆமாம் பாஸ்....உனக்குப் பாதுகாப்பா இருக்கிற முள்ளே என்கிட்ட வந்துடிச்சி....நீ மட்டும் தனியா வெளியே நிக்க முடியாது...நீயும் மனசுக்குள்ள* வந்துடுன்னு சொல்றான். கில்லாடிதான்.

சுடர்விழி
02-05-2010, 02:06 PM
பாராட்டிய அனைவருக்கும் நன்றி !!! சிவா அவர்கள் ஒரு கதையே சொல்லி விட்டார்கள் ...(காதலனாகத் தான் இருக்க வேண்டுமா? காதலியாக இருக்கக் கூடாதா?)

ஆன்டனி ஜானி
17-12-2010, 09:20 AM
அன்பே முள்ளில் இருக்கும்
ரோஜாப் பூ
ஆனால் காதலன் மனதில் இருக்கும்
முல்லைப் பூ வாகிய நீ
இறுதுயில் காதில் பூவை வைக்காதே

வார்த்தை முட்களை விதைக்கும் காதலன்
திரும்ப அதில் குடி கொள்ள போகும் காதலனின்
பாதம் முட்கள் குத்தும் என்று வருத்தப் படும் என்று
நினைக்கும் காதலி
ரெம்ப அருமையான வரிகள்

தொடருங்கள் ......

என்றும் அன்புடன்
ஜானி .......