PDA

View Full Version : மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்



M.Rishan Shareef
01-05-2010, 11:16 AM
மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள் (http://mrishanshareef.blogspot.com/2010/05/blog-post.html)

இருப்புக்கருகே
மூர்க்கத்தனத்தோடு
பெரும் நதி நகரும்
ஓசையைக் கொண்டுவருகிறது
கூரையோடுகளில் பெய்யும்
ஒவ்வோர் அடர்மழையும்

வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில் வானில்
இராநிலாத் தேடி யன்னலின்
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்
பிஞ்சு விரல்களை அழுது கதற
விடுவித்துக் கொண்டோடுகிறாள்
குழந்தையின் தாய்

தொடர்ந்து விழும் இடி
ஏதோ ஒரு
நெடிய மரத்தை எரித்து அணைய
நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்

சிவா.ஜி
01-05-2010, 12:23 PM
உங்கள் கவிதைகளின் பலமே....சிறப்பான சொல்லாடல்கள்தான். மிக வித்தியாசமாய் வார்த்தைகளைப் பொருத்தி...சாதாரணத்தை அசாதாரணமாக்கிவிடுகிறீர்கள் ரிஷான்.

அழகான கவிதை....

வாழ்த்துக்கள் ரிஷான்.

பாரதி
02-05-2010, 12:20 AM
நேசத்தை இழந்தவர்கள் குறித்த கவிதையா..?

இரண்டாவது பத்தியின் இறுதி கவிதையோடு முழுமையாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றவில்லை.

சொல்லாடல் அழகு. பாராட்டு நண்பரே.

செல்வா
06-05-2010, 08:15 PM
கவிதை நல்லாருக்கு...

ஆனால் கருத்து முழுமையாகப் புரிந்துகொள்ளுமளவிற்கு இன்னும் வளரவில்லை...

என்ன ஏதுண்ணு சொன்னீங்கண்ணா புரிஞ்சுக்குவோம்...

M.Rishan Shareef
02-06-2010, 02:06 PM
அன்பின் பாரதி, செல்வா,

//நேசத்தை இழந்தவர்கள் குறித்த கவிதையா..?

இரண்டாவது பத்தியின் இறுதி கவிதையோடு முழுமையாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றவில்லை.

சொல்லாடல் அழகு. பாராட்டு நண்பரே.//

நண்பர் சிவா.ஜி க்கு அளித்த பதிலில் கவிதை குறித்த விபரம், உங்கள் கருத்த்துக்களை தெளிவாக்கியிருக்குமென நம்புகிறேன்.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பர்களே :-)

பாரதி
10-06-2010, 12:32 AM
நண்பர் சிவா.ஜி க்கு அளித்த பதிலில் கவிதை குறித்த விபரம், உங்கள் கருத்துக்களை தெளிவாக்கியிருக்குமென நம்புகிறேன்.

பதில் பதிவாகாமல் போய்விட்டது என எண்ணுகிறேன் நண்பரே.

M.Rishan Shareef
10-06-2010, 03:58 AM
அன்பின் சிவா.ஜி,

//முதலிரண்டு பத்திகள் தனிக்கவிதையாகவும், மூன்றாவது பத்தி மற்றொரு தனிக்கவிதையாகவும் தெரிகிறது.

உங்கள் கவிதைகளின் பலமே....சிறப்பான சொல்லாடல்கள்தான். மிக வித்தியாசமாய் வார்த்தைகளைப் பொருத்தி...சாதாரணத்தை அசாதாரணமாக்கிவிடுகிறீர்கள் ரிஷான்.

அழகான கவிதை....ஆனால்....முழுதும் ஒரே கவிதை என நினைக்கத் தோன்றவில்லை.

வாழ்த்துக்கள் ரிஷான்.//

நிச்சயமாக நண்பரே.. இக் கவிதையில் முதலிரண்டு பத்திகளும் நிகழ்காலத்தையும் மூன்றாவது பத்தி இறந்தகால நிகழ்வொன்றையும் குறிப்பிடுகின்றன.

பொதுவாக நாம் குழந்தையாக இருக்கும் போது, ஒரு ஆபத்து நேருமிடத்து உடனே காக்க தாய் இருக்கிறாள். ஆனால் இக் கவிதையில் சம்பந்தப்பட்ட நாயகனுக்கு/ நாயகிக்கு அவர் தவறான காதலில் விழுந்தபோது அவ்வாறு அறிவுரை கூறி காத்திட யாருமிருக்கவில்லை.

//நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிருந்தாய்//

ஆனாலும்,

//துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்//

காதலில் துயருற்றவரைக் காப்பாற்ற பிற்காலத்தில் அன்பானவர் யாரேனும் வரக் கூடும் அல்லவா? :-)

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef
10-06-2010, 03:59 AM
அன்பின் பாரதி,

மீண்டும் திரு.சிவா.ஜி க்கான பதிலை தந்திருக்கிறேன்.
சுட்டிக் காட்டியமைக்கு நண்பரே.

பாரதி
10-06-2010, 06:26 AM
நன்றி நண்பரே.

அக்னி
10-06-2010, 06:57 AM
விளக்கியமைக்கு நன்றி ரிஷான் ஷெரீப்... (இல்லாவிட்டால், நாம எங்க புரிஞ்சுக்கிறது...)

வீரியமிக்க இடியும் மின்னலும்
காதலருக்குப் பிடித்தமான பயம்...

ஸ்பரிசம், தொடல் என்ற
என்ற படிநிலைகளை
ஒரேயடியாகத் தாண்டித்
தழுவிக்கொள்ள
அவர்கள் கொள்ளும் காரணம்...

காதல் கைவிட்டால்
மின்னல் அவஸ்தைதான்...
இனியொரு மின்னல்
இனியொரு காதலைக்
கூட்டிவரும்வரைக்கும்...

தலைப்புக்கள் தான் உங்கள் கவிதைகளின் மணிமகுடம்...
கவிதை முழுவதும் அழகுச்சொல்லாடல்கள் நண்பர்கள் சொன்னதைப்போல என்றால்,
உங்கள் தலைப்புக்களோ புதுமைச் சொற்கோர்வைகள்...

பாராட்டு... பாராட்டு... பாராட்டு...

M.Rishan Shareef
16-06-2010, 03:07 AM
அன்பின் நண்பர் அக்னி,

//விளக்கியமைக்கு நன்றி ரிஷான் ஷெரீப்... (இல்லாவிட்டால், நாம எங்க புரிஞ்சுக்கிறது...)

வீரியமிக்க இடியும் மின்னலும்
காதலருக்குப் பிடித்தமான பயம்...

ஸ்பரிசம், தொடல் என்ற
என்ற படிநிலைகளை
ஒரேயடியாகத் தாண்டித்
தழுவிக்கொள்ள
அவர்கள் கொள்ளும் காரணம்...

காதல் கைவிட்டால்
மின்னல் அவஸ்தைதான்...
இனியொரு மின்னல்
இனியொரு காதலைக்
கூட்டிவரும்வரைக்கும்...//

மிகச் சரியான கூற்று.
உங்கள் கருத்தினை வெகுவாக ரசித்தேன் நண்பரே.

//தலைப்புக்கள் தான் உங்கள் கவிதைகளின் மணிமகுடம்...
கவிதை முழுவதும் அழகுச்சொல்லாடல்கள் நண்பர்கள் சொன்னதைப்போல என்றால்,
உங்கள் தலைப்புக்களோ புதுமைச் சொற்கோர்வைகள்...

பாராட்டு... பாராட்டு... பாராட்டு... //

பாராட்டுக்கள் ஊக்கம் தருகின்றன.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே.

pujanaki
16-06-2010, 08:51 AM
நல்ல பதிவு
---------------
good one

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-06-2010, 07:43 PM
வழக்கமாக உங்கள் கவிதைகளை இரண்டு தடவை படித்தபின்புதான் இலேசாக புரிய ஆரம்பிக்கும். ஆனால் இந்த கவிதை சற்று கூடவே நேரம் பிடித்துக்கொண்டது. அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

M.Rishan Shareef
29-06-2010, 02:09 PM
அன்பின் ஜானகி,

//நல்ல பதிவு
---------------
good one//

கருத்துக்கு நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef
29-06-2010, 02:11 PM
அன்பின் சுனைத் ஹசனீ,

//வழக்கமாக உங்கள் கவிதைகளை இரண்டு தடவை படித்தபின்புதான் இலேசாக புரிய ஆரம்பிக்கும். ஆனால் இந்த கவிதை சற்று கூடவே நேரம் பிடித்துக்கொண்டது. அருமையான கவிதை. பாராட்டுக்கள்.//

உங்கள் கருத்திலும் பாராட்டுக்களிலும் மகிழ்கிறேன். மிகவும் நன்றி நண்பரே :-)

இளசு
29-06-2010, 09:24 PM
கண்ணைப் பறிக்கும் மின்னல் வெளிச்சக் கவர்ச்சி..
திண்ணை மாட மாவிளக்கிடம் இல்லை..

அழகும் அதிகம்..
ஆபத்தும் அதிகம்..

பிள்ளை மனங்கள் ஈர்க்கப்படுவதில் வியப்பில்லை!


பால வயதில் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுதல் - சுலபம்.
பருவயதில் இரண்டுமே கடினம்..


பாராட்டுகள் ரிஷான்.


( நன்றி செல்வா ---- பொழிப்புரை பெற்றுத்தந்ததற்கு)

M.Rishan Shareef
05-07-2010, 02:32 AM
அன்பின் இளசு,

அழகான, நிதர்சனமான கருத்து.கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

nambi
05-07-2010, 04:53 AM
விளக்கத்திற்கு பிறகு விளங்கி கொண்டேன்...வரிகள் நன்று! பகிர்வுக்கு நன்றி!

M.Rishan Shareef
15-07-2010, 03:42 AM
நன்றி நண்பர் நம்பி :-)

பாலன்
15-07-2010, 04:24 PM
கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்றுமில்லை. கருணைக்கு காத்திருப்பதைவிட* பற்றற்று இருக்கலாம் இல்லை காதலை பற்றாமல் இருக்கலாம். நான் சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே நீங்கள் சொலதுதான் சரியென்று தோன்றுகிறது. கவிதையில் குழந்தையின் உவமை அழகோ அழகு.

M.Rishan Shareef
04-08-2010, 01:41 AM
அன்பின் பாலன்,

//கொடியது, அப்படி அல்லாதது என்றெல்லாம் காதலில் ஒன்றுமில்லை. கருணைக்கு காத்திருப்பதைவிட* பற்றற்று இருக்கலாம் இல்லை காதலை பற்றாமல் இருக்கலாம். நான் சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாதது எனவே நீங்கள் சொலதுதான் சரியென்று தோன்றுகிறது. கவிதையில் குழந்தையின் உவமை அழகோ அழகு.//

காதல் குறித்து நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எல்லாக் காதல்களும் அப்படியிருப்பதில்லை அல்லவா? அதனால்தான் நேசங்களை எதிர்பார்த்து துயரங்கள் தொடர்ந்துவருகின்றன.

கருத்துக்கு நன்றி நண்பரே :-)