PDA

View Full Version : சூஃபி கவிதைகள் (தமிழில்)



ஆதி
30-04-2010, 06:50 AM
என் நேசன் தோன்றுகையில்

என் நேசன் என்முன் தோன்றுகையில்
எந்த விழியால்
அவனை காண்பேன் நான்?

என்னுடையதால் அல்ல..
அவனுடைய விழியால்
ஏனெனில்
அவனைத் தவிர யாராலும்
அவனை காணுதல் இயலாது..


-------------------


When My Beloved Appears

When my Beloved appears,
With what eye do I see Him?

With His eye, not with mine,
For none sees Him except Himself.

ஆதி
30-04-2010, 08:14 AM
உனது கைகளிலொரு மாசற்ற குழைந்தையாக

நான் மிக உயர்ந்து மேலெழுந்த
எனதன்பின் அலையை
பிரளயமாய் உன்னில் பாய்ச்சுகிறேன்..

அது
உனது யாதொரு பயத்தையும், மாயையையும்
அழித்துவிடும்
சில நேரம் விழிகளை மூடு.

அவ்வாறு நிகழ்கையில்
உனது கைகளில் மாசற்ற குழந்தையாக
இறைவன் மாறுவான்..

பின் படைப்பு யாவற்றையும்
நீ கவனித்துக் கொள்ள கடவாய்..

- ஹஃபீஸ்

------------------



An Infant In Your Arms


The tide of my love
Has risen so high let me flood
over

You.

Close your eyes for a moment
And maybe all your
fears and fantasies

Will end.

If that happened
God would become an infant in your

Arms

And then you
Would have to nurse all

Creation!

கீதம்
30-04-2010, 08:20 AM
கவிதைகள் நன்றாக உள்ளன. சூஃபி கவிதைகள் பற்றி முன்பு நீங்கள் எழுதியிருந்த விளக்கங்களை இப்போதுதான் படித்து வருகிறேன். புரிந்துகொண்டபிறகு பின்னூட்டமிடுவேன்.

பாரதி
30-04-2010, 02:33 PM
புதிய கவிதைகளை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி ஆதன்.
படிக்கவும், பாடலின் உட்கருத்தைப் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிப்பேன்.

சிவா.ஜி
30-04-2010, 02:48 PM
சூஃபி கவிதைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரும்பாலும் கவிதைகளின் சாராம்சங்களை உரைநடையாய்தான் படித்திருக்கிறேன்.

முதன் முதலாய் கவிதை வடிவில்...அதுவும் ஆதனின் அழகு தமிழில் படிக்க சுவையாக இருக்கிறது. புரிந்துகொள்ள சற்று சிரமம்...ஆனால் புரிந்துகொண்டால் பரவசம்.

பகிர்வுக்கு நன்றி ஆதன்.

ஆதி
03-05-2010, 07:37 AM
பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி..

சூஃபி கவிதைகள் குறித்த விவாதங்கள் மிக குறைச்சலாய் இருகின்றன எனும் எண்ணம் என்னக்குள் வெகு நாட்களாகவே இருந்து வந்தது.. ஆன்மிக கவிதைகள் என்பதால் இவை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது சூஃபிகளை இஸ்லாமியர்களே ஏற்றுக் கொள்ளாததால், இவை புறக்கணிக்கப்பட்டிருக்கலாம்..

ஆனால் ஜிப்ரானும், கயாமும் இதில் விதி விலக்காக அமைந்துவிட்டனர்.. அவர்களும் சூஃபிகள் தாம் என்றாலும், அவர்கள் கடவுளை காதலித்துப்பாடாமல், கடவுளின் கருத்து மக்களுக்கு சென்றடைகிற வகையில் அவர்களின் கவிதைகள் அமைந்திருந்தன.. அதனால் அவர்களை சூஃபிகளாக புரிந்து கொள்ளாத மக்கள் அவர்களின் படைப்புகளையும் ஏற்றுக் கொண்டார்கள். ஜிப்ரானையும், கயாமையும் கவிமேதைகளாக தூக்கி கொண்டாடினார்கள்..

ஆனால் கவிஞர்களின் கவிஞன் என்று அழைக்கப்படும் ஹஃபீஸ், மற்றும் ரூமி போன்றவர்கள் பெரும்பாலும் ஒதுக்கியே வைக்கப்பட்டுவிட்டனர்..

அந்த குறையை இந்த திரி மூலம் சரி செய்துவிட முடியுமா என்றால், முடியாது தான், ஆனால் என்னை நானே சமாதான செய்து கொள்ளவும் வகையில் இந்த திரியை துவங்கி இருக்கிறேன்..

உங்கள் கருத்துக்களையும், பங்கெடுப்பையும் எதிர்ப்பார்க்கிறேன்..

செல்வா
03-05-2010, 10:00 AM
மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் புதினங்களும் தமிழில் நிறைய இருந்தாலும் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் அளவில் குறைவே...

அப்படியிருந்தாலும் வார்த்தைகளை வளைத்தும் சிதைத்தும் போட்டு வரும் கவிதைகளே.. அதிகம்

ஆதனின் அழகுதமிழில் சூஃபி கவிதைகள்... வாசிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் நான்.

தொடர்ந்து எழுது ...

வாசித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

ஆதி
03-05-2010, 11:07 AM
என்னை நீ நேசிக்கிறாயா ?

தான் நேசிப்பளிடம் காதலனொருவன்
"என்னைக்காட்டிலும் நீ
உன்னை மிக நேசிக்கிறாயா ?"
என கேட்டான்

நேசிப்பிற்குரியவள் சொன்னாள்:
"என் வாழ்வானது உன்னுடையது
ஏனெனில்
"நான்" என்பது மாய்ந்தாயிற்று
எனை பொருத்தமட்டில்"

என் இருப்பு உனக்கும் மட்டுமானதே
ஏனெனில்
என்னிலிருந்து, என் செயல்களிலிருந்து
நான் மறைவுற்றேன்..

உன்னறிதல்களில் இருந்தே
ஒரு மேதையாகினேன்
ஏனெனில்
நான் கற்றன யாவும் மறந்திழந்தேன்..

உன் பலத்தால்தான்
என்னால் யாவும் இயல்கிறது
ஏனெனில்
என் பலமனைத்தும் தொலைத்திழந்தேன்..

நான் எனை நேசிக்கிறேன் என்றாலும்
உன்னையே நேசிக்கிறேன்
நான் உனை நேசிக்கிறேன் என்றாலும்
என்னையே நேசிக்கிறேன்..

-ரூமி


---------------------------

Do You Love Me?


A lover asked his beloved,
Do you love yourself more
than you love me?



The beloved replied,
I have died to myself
and I live for you.



I’ve disappeared from myself
and my attributes.
I am present only for you.



I have forgotten all my learning,
but from knowing you
I have become a scholar.



I have lost all my strength,
but from your power
I am able.



If I love myself
I love you.
If I love you
I love myself.

ஆதி
03-05-2010, 12:54 PM
நான், நானற்று (ரூமியிடம் மிக ரசித்த கவிதைகளில் ஒன்று)

இது காறும் வந்திடாத
வெள்ளத்தில் நனைந்தேன் நான்

இது காறுமற்ற சிறையில்
பிணைக்கப்பட்டேன் நான்..

நான் சதுரங்கம் விளையாடியதில்லை
அடுத்த அடியில்லாமல்
முன்பே முற்றுகைக்குள்ளாகிவிட்டேன்

நான் ஒரு குவளை மதுரசத்தையும்
பருகியதில்லை முன்னிருந்தே
பருகியநிலையில்தான் இருக்கிறேன்

போர்க்களங்களை வருடியதில்லை நான்
முன்னமே
ரணமுற்றும், மரணித்தும் இருக்கிறேன்..

உருவத்திற்கும், படிமத்திற்கும்
வேறுபாடறியேன் ஒரு நிழல் போல்

நான்..
நானற்று..


I Am and I Am Not

I’m drenched
in the flood
which has yet to come

I’m tied up
in the prison
which has yet to exist



Not having played
the game of chess
I’m already the checkmate



Not having tasted
a single cup of your wine
I’m already drunk



Not having entered
the battlefield

I’m already wounded and slain



I no longer
know the difference
between image and reality



Like the shadow
I am

And

I am not

குணமதி
07-05-2010, 09:40 AM
பாராட்டப்படவேண்டிய அரிய முயற்சி!

மொழிநடை குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன்.

என்றாலும்,

நல்ல மொழிபெயர்ப்பு!

மனமார்ந்த பாராட்டு.

தொடர்க!

ஆதி
07-05-2010, 10:15 AM
நன்றி டா செல்வா


பாராட்டப்படவேண்டிய அரிய முயற்சி!

மொழிநடை குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன்.

என்றாலும்,

நல்ல மொழிபெயர்ப்பு!

மனமார்ந்த பாராட்டு.

தொடர்க!

குணமதி குறைகளை கண்டிப்பாய் சுட்டிக்காட்டுங்கள், அதுவே எனக்கு மகிழ்ச்சியை திருப்தியை தரும்..

பின்னூட்டத்திற்கு நன்றி..

பாபா.ஜி
12-05-2010, 05:33 AM
அடடா ! ஆதன் சூஃபி பக்கமும் ஒரு ரவுண்டு போனவரா !! ஆதன் அவர்கள் ஆன்மிகத்தில் ஆல்ரவுண்டர் போலும்.

ஒரு பக்கம் ஜென், உபநிடதம் - இன்னொரு பக்கம் கலீல் ஜிப்ரன், ஜலாலுதீன் ரூமி என்று பிரித்து மேய்கிறீர்கள். ஏசுக்காவியம் எப்போது ?

உங்களிடமிருந்து அறிந்துக்கொள்வதற்கு நிறைய உண்டு என்று நினைக்கிறேன்.

பாராட்டுக்கள் ஆதன், தொடருங்கள் உங்க சிந்தனகளை !

ஆதி
01-03-2011, 11:32 AM
உனது யாதொரு சிந்தனையும், சொல்லும், செயலும்
அழகானவையே யாதொறு போதிலும்
அவனின் நேச விழிகளில்..
உன் நேசனின்
மெய்ச் சொரூபம் அறி.

- ஹஃபீஸ்

-------------------------

"Know
The true nature of your Beloved.
In His loving eyes your every thought,
Word and movement is always-
Always Beautiful."

- Hafiz

ஜானகி
01-03-2011, 02:46 PM
ஒவ்வொன்றும் அருமை...! உபநிடதங்களின் தமிழாக்கம் போலிருக்கிறது.... மிகச் சிறந்த பணி ! தொடருங்கள் !