rajureva
20-04-2010, 11:41 AM
வீட்டுக்கு நுழையும் போது பையன் IPL-Match பார்த்து கொண்டிருந்தான். என்ன கிரிக்கெட் இது, எல்லாம் சூதாட்டம், வீரர்களை விலைக்கு வாங்கி பணத்திற்காக, ச ச என்று அலுத்து கொண்டார். மனைவி முனு முனுப்பது அவருக்கு காதில் விழவில்லை........ம் ம்..ம்ம் பத்து வருடத்திற்கு முன்னால் என் அப்பா வரதக்ஷினையும் கொடுத்து, என்ன விலைக்கு என் பெற்றோர் வாழ்க்கை பூராவும் இங்கே விட்டிட்டு போனாறோ................