சுடர்விழி
18-04-2010, 07:52 AM
உறவென்று
எண்ணி உறவாட
நீ மட்டுமே எனக்கு...
என் உள்ளம் நெகிழ
வைத்த இசையை
நீயும் ரசிக்கிறாய்.....
எனை பாதித்த கவிதை
உனையும்
ஈர்த்திருக்கிறது.....
என் மனக் குமுறலுக்கு
செவி சாய்த்து
சிறு அணைப்பில் எனை
பரவசப் படுத்துகிறாய்...
துன்பத்தில் அழும்போது
மெளனமாய் புன்னகையில்
மனதை லேசாக்குகிறாய்....
உன் மெல்லிய விரல்கள்
தலை கோதிவிட
மடியில் முடங்கித்
தூங்கிப் போகிறேன்
நிம்மதியாய்....
கனவில் மட்டுமே நினைவாகிப்
போன நீ...
கனவை நினைவாக்க
என்று வருவாய்...?
காத்திருக்கிறேன்
கண்களில் காதலோடு...!
--சுடர்விழி
எண்ணி உறவாட
நீ மட்டுமே எனக்கு...
என் உள்ளம் நெகிழ
வைத்த இசையை
நீயும் ரசிக்கிறாய்.....
எனை பாதித்த கவிதை
உனையும்
ஈர்த்திருக்கிறது.....
என் மனக் குமுறலுக்கு
செவி சாய்த்து
சிறு அணைப்பில் எனை
பரவசப் படுத்துகிறாய்...
துன்பத்தில் அழும்போது
மெளனமாய் புன்னகையில்
மனதை லேசாக்குகிறாய்....
உன் மெல்லிய விரல்கள்
தலை கோதிவிட
மடியில் முடங்கித்
தூங்கிப் போகிறேன்
நிம்மதியாய்....
கனவில் மட்டுமே நினைவாகிப்
போன நீ...
கனவை நினைவாக்க
என்று வருவாய்...?
காத்திருக்கிறேன்
கண்களில் காதலோடு...!
--சுடர்விழி