simariba
16-04-2010, 03:14 AM
கோவில் கோபுரம்
மசூதி கோபுரம்
பேராலய கோபுரம்
எல்லாம் வானுயர
நிற்கின்றன...
ஒவ்வொன்றும் தலையில்
இடி தாங்கியை
சுமந்தபடி...
இயற்கை சீற்றங்களிலிருந்து
மனித குலத்தை
காத்தபடி...
வீடுகள் யாவும்
குடில்களாக
இருந்தபோது...
கடவுள் அருகில் சென்றால்
பாதுகாப்பு...
என நம்பியவர்
ஏராளம்...
இன்று
கோவிலை விட
உயரமான
அடுக்கு மாடி
குடியிருப்பு
இடி தாங்கியுடன்...
இன்றும் அவற்றுக்கு
சென்று கொண்டு தான்
இருக்கிறோம்..
நிம்மதி தேடி..
மசூதி கோபுரம்
பேராலய கோபுரம்
எல்லாம் வானுயர
நிற்கின்றன...
ஒவ்வொன்றும் தலையில்
இடி தாங்கியை
சுமந்தபடி...
இயற்கை சீற்றங்களிலிருந்து
மனித குலத்தை
காத்தபடி...
வீடுகள் யாவும்
குடில்களாக
இருந்தபோது...
கடவுள் அருகில் சென்றால்
பாதுகாப்பு...
என நம்பியவர்
ஏராளம்...
இன்று
கோவிலை விட
உயரமான
அடுக்கு மாடி
குடியிருப்பு
இடி தாங்கியுடன்...
இன்றும் அவற்றுக்கு
சென்று கொண்டு தான்
இருக்கிறோம்..
நிம்மதி தேடி..