ரங்கராஜன்
15-04-2010, 03:36 PM
தல வீட்டுக்கு போனேன்
கிரிக்கெட் காலமான இந்த ஐபிஎல் காலத்தில் தலையை பார்க்கவே முடியாது என்று நினைத்து இருக்கிறேன். காரணம் தலயுடன் என்னுடைய மீட்டிங் எல்லாவற்றிலும் கண்டிப்பாக மூன்று
விஷயங்களை பற்றி பேச தலை மறக்கவே மாட்டார். முதலில் கிரிக்கெட் அதுவும் ஐபிஎல் முடிந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகி இருந்தால் பழைய ஐபிஎல்-லை பற்றி பேசுவார். ஆட்டம் முடிந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தால் வரப்போகும் ஐபிஎல்-லை பற்றி பேசுவார்.
"ஐய்யோ நீங்க அந்த மேட்சை பார்த்தீங்களா?????? ச்ச சான்ஸே இல்லை. அவன் அடிச்சான் பாரு ஐய்யோ" குழந்தையை போல குதுகலிப்பார்.
அந்த நீங்க என்ற வார்த்தை பெரும்பாலும் தாமரை அண்ணன் இல்ல ஆரென் அண்ணா மதி போன்றவர்கள் தான் இருப்பார்கள். நான் கிரிக்கெட்டில் அதிகமாக கோல் அடிப்பேன் என்ற காரணத்தால் என்னிடம் அதுபற்றி பேச மாட்டார். இப்படி இருக்க கிரிக்கெட் டிக்கெட் கேட்க அவருக்கு போன் செய்தேன். எனக்கு கிரிக்கெட்டின் மீது பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது, காரணம் சின்ன வயதில் பொறுமையாக டிவியின் முன் அமர்ந்து பார்க்கும் பழக்கம் எல்லாம் இல்லை. ஆனால் கிரிக்கெட் விளையாடுவேன் ஸ்கூல் படிக்கும் போது, அதுவும் கார்க் பாலில் தான். எனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்கும் வழியாக
கிரிக்கெட்டை நான் பயன்படுத்தினேன். குறிவைத்து பார்ட் பை பார்ட்டாக எதிரிகள் ஆடும் போது அடிப்பேன், கனுக்கால், தொடை, கால் முட்டி, கை முட்டி, நெஞ்சு, தாடை என்று பந்து வீச்சுளே அடிப்பேன். ஒரு கட்டத்தில் எதிரிகள் சுதாரித்துக் கொண்டார்கள், அந்த சமயம் பார்த்து ஸ்கூலில் பேடு, ஹெல்மட் ஆகிய பாதுகாப்பு சாதனங்கள் வாங்கி தந்து நிர்வாகம் எதிரிகளை காப்பாற்றி விட்டு என்னுடைய சாபத்தை பெற்றுக் கொண்டது. அதன்பின் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டேன், காரணம் கல்லூரியில் கைப்பந்து விளையாட்டுக்கு மாறிவிட்டேன், அதுல இன்னும் எதிரியின் முகத்திலே குறிப்பார்த்து
அடிக்கலாம் இல்லையா............. தல பேசும் இரண்டாவது விஷயம், சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த கோலங்கள் தொடரை பற்றி பேசுவார், காதில் இருந்து ரத்தம் வரும் வரை பேசுவார். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கும் மனிதர் எப்படி அந்த கருமாந்திர சீரியலை பார்க்கிறார் என்று.
மூன்றாவது நம் மன்ற உறவுகளை பற்றி.
இப்படி இருக்க முதல் முறை மைதானத்தில் சென்று மேட்ச் பார்க்கலாம் என்ற ஆசையில் தலையிடம் கேட்கலாம் என்று தோன்றியது. வருட கணக்கில் ஒரே ஊரில் இருந்தும், ஒரு பேச்சுக்கு
கூட எப்படி இருக்கீங்க என்று ஒரு வார்த்தை கூட நான் தலையை கேட்டது கிடையாது. ஆனால் டிக்கெட்டுக்கு மட்டும் அவரிடம் போய் நிற்க அசிங்கமாக இருந்தது. இருந்தாலும் நம்ம தலையிடம் என்
அசிங்கம் என்று நினைத்து மெசேஜ் அனுப்பினேன்.
"எத்தனை டிக்கெட் வேண்டும்" என்றார்.
"இரண்டு தல"
"இரண்டு இருக்காதே, பார்க்கனும்பா"
"தல நானும் என்னுடைய கேள் ப்ரன்டும் வரோம் தல, அதனால் கண்டிப்பா இரண்டு டிக்கெட் வேணும்"
"கிடைத்தால் கண்டிப்பா தருகிறேன்"
"தல அப்படி சொல்லாதீங்க, நான் அவளை கண்டிப்பாக மேட்சுக்கு அழைத்து செல்வதாக வாக்கு கொடுத்து விட்டேன்"
"அப்ப கவலைப்படாதே நானும் உன் கேள் ப்ரன்டும் மேட்சுக்கு போகிறோம்"
"யப்பா சாமி எனக்கு டிக்கெட்டை வேண்டாம்" என்று அனுப்பி விட்டு மெசேஜ் செய்வதை நிறுத்திவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் முதலுக்கே மோசமாகி இருக்கும். இரண்டு நாள் கழித்து தலையே போன்
செய்தார்.
"டிக்கெட் இருக்கு, 10 டூ 1 ஆபிஸில் இருப்பேன், 1டூ 2 வீட்டுக்கு போயிடுவேன். மறுபடியும் 2 டூ 5 ஆபிஸில் இருப்பேன் எப்ப வர"
"எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, தலை நான் இப்போ டபுள் சிப்டில் இருக்கேன் நாளை காலை வீட்டிலே வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றேன்"
"வீட்டுக்கா??????? யோசிச்சி சொல்றேன்" என்று போனை வைத்து விட்டார்.
எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. தலைவர் நம்மை வீட்டுக்கு அழைக்க மறுக்கிறார். அப்போ வீட்டுல மாமியிடம் இவர் பண்ணுகிற வேலைகள் எல்லாம் தெரியாது, ராயல் செலஞ்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய மல்லையா மாதிரி எப்போதும் பெண்கள் கூட்டத்திற்கு நடுவில் தல இருக்கும் மேட்டர் எல்லாம், மாமிக்கு தெரியாது போல, நாம் எப்படியாவது வீட்டிற்கு சென்று மாமியிடம் இவரை போட்டு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு ஆப்பிரேஸன் திட்டத்தை ஆரம்பித்தேன். இவர் என்ன சொன்னாலும் கேட்காமல் அவர் வீட்டுக்கு போக வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அதே போல அடுத்த நாள் காலை அவருக்கு போன் செய்து அவருடைய வீட்டிற்கு வழி கேட்டேன். போனை எடுத்தவர் அவர் வீடு இருக்கும் தெரு பெயரை மட்டும் சொன்னார்.
"தல வீட்டு நம்பரை சொல்லுங்கோ"
"முதல்ல அந்த தெருவுக்கு வா அப்புறம் சொல்றேன்" என்று போனை கட் செய்து விடுவார். ஆஹா அப்ப எதோ, மாமியிடம் சொல்லப்போகிறார். நான் எங்கே வந்து அவரைப் பற்றி சொல்லிவிடப்போறேன் என்ற பயத்தில் மாமியிடம்,
"இப்ப வீட்டுக்கு ஒருத்தன் வருவான், அவனிடன் நீ பேச்சு கொடுக்காதே. அவன் ஏற்கனவே ஜெயிலில் இருந்தவன், மூன்று கொலை செய்து இருக்கான். அவன் வந்ததும் வா என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு
உள்ளே போய்விடு. அப்புறம் ஒரு நிமிஷத்திற்கு ஒருமுறை கிச்சனில் இருந்து ஒவ்வொரு பாத்திரமாக கீழே சத்தமாய் போடு, நாய் பூனையை விரட்டுவது போல அடிக்கடி சூசூசூசூ என்று விரட்டு,,,, அவனே போய் கிளம்பி விடுவான்" என்று சொல்வதற்காக அந்த அவகாசம் அவருக்கு தேவைப்பட்டு இருக்கும்.
நான் இருந்தாலும் விடுவதாக இல்லை இவர் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் மாமியிடம் சொல்லியிருக்கட்டும், மாமி என்னை அடிக்க வந்தால் கூட அடியை வாங்கிக் கொண்டு தலையை பற்றி சொல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். பைக்கை ஆபிஸில் இருந்து விரட்டினேன் தல வீட்டிற்கு. பைக்கை ஒட்டிக்கொண்டே தலையுடனான என் பழைய சந்திப்பை நினைத்து பார்த்தேன். மன்ற சந்திப்புகளில் எத்தனை பேர் இருந்தாலும் தல தனியாக தெரிவார்
ஆனால் கடந்த சந்திப்பின் போது தலையை தூக்கி சாப்பிடும் விதமாக ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. அது தலையின் கசின் சுவாமிநாதன், பார்க்க நல்ல கலர், நல்ல உயரம், அழகான சிரிப்பு தலையின் வயதுக்கு கொஞ்சம் கம்மியாக இருக்கும்................ஆம் தலைக்கு 16 இவருக்கு 14 இருக்கும். மனிதன் பேசினாலே கிண்டல் தான், அதுவும் கிண்டல் என்றால் சிரித்துக் கொண்டே செய்வது. ஆனால் இவர் சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லும் போது, சிரிப்பு பிடுங்கிக் கொண்டு வரும், ஒர் உதாரணம்
நாங்கள் டின்னர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம், நான் தல, சுவாமிநாதன் மற்றும் நம்ப ஆரென் அண்ணா. சிக்கன், ரைஸ், என்று நிறைய பண்டங்கள் இருந்தது.
"தல அவருக்கு கொஞ்சம் சிக்கன் போடுங்க" என்றேன் நான்.
"இல்ல இல்ல அவர் அதெல்லாம் சாப்பிட மாட்டார்" என்றார் தல.
"யார் சொன்னது" இது அவர். உடனே தலை என்னை பார்த்து
"எப்பவாவது சாப்பிடுவார்" என்றார். உடனே அவர்
"அந்த எப்பவாவது தான் இன்னைக்கு வை" என்றார். உடனே தல, சிரித்துக் கொண்டே வைத்தார். சிக்கனை சாப்பிட்டவர், நன்றாக இருக்கு என்றவர். திடீரென
"இந்த சிக்கன் பிளேட் எவ்வளவு இருக்கும்" என்றார். உடனே தல
"என்ன 150 ரூபாய் இருக்கும்" என்றார். கேட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்தவர். மறுபடியும் ஆரென் அண்ணாவை பார்த்து
"சிங்கப்பூரில் மருத்துவத்துக்கு அதிகமா செலவு ஆகும் இல்ல" என்றார். அவரும் ஆமா என்பது போல தலையை ஆட்டினார்.
"ஒரு பல்லை பிடுங்க எவ்வளவு ஆகும் என்றார்".
"உடனே அவர் என்ன ஒரு 150 டாலர் ஆகும்" என்றார். உடனே சுவாமிநாதன்
"சோ திஸ் சில்லி சிக்கன் சேவ்டு மீ, 150 டாலர்ஸ்" என்று சிரிக்காமல் கையில் இருந்த பல்லை காட்டினார். அனைவரும் சிரித்தோம், அவரும் லேசாக சிரித்தார், மனதுக்கு இதமான சிரிப்பு அது. கிரிக்கெட்டை பற்றி பிச்சி உதறினார். எந்த பவுலர் எந்த விக்கெட் எடுத்தான், எந்த வருடம், யாருடன் விளையாடும் போது எடுத்தான் என்று அனைத்து தகவல்களையும் சொன்னார். பொது அறிவும் அப்படித்தான் புவனேஸ்வரி கேஸில் இருந்து போப் பாண்டவர் வரை அலசுகிறார். தினம் நிகழும் நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்து இருக்கிறார். இதில் என்ன அதிசயம் இருக்கு என்று நீங்கள் கேட்டால். அதற்கான பதில் கண்டிப்பாக இருக்கு என்பது தான்........................... அவருக்கு இரு கண்களும் தெரியாது. ஆனால் ஒருமுறை பார்த்தாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் பர்சனாலிட்டி
தல தெருவின் பக்கத்தில் வந்து விட்டேன். அடுத்த பாகத்தில் அவர் வீட்டிற்குள் சென்று விடுவேன்.
இறுதி பாகம் விரைவில்...........
கிரிக்கெட் காலமான இந்த ஐபிஎல் காலத்தில் தலையை பார்க்கவே முடியாது என்று நினைத்து இருக்கிறேன். காரணம் தலயுடன் என்னுடைய மீட்டிங் எல்லாவற்றிலும் கண்டிப்பாக மூன்று
விஷயங்களை பற்றி பேச தலை மறக்கவே மாட்டார். முதலில் கிரிக்கெட் அதுவும் ஐபிஎல் முடிந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகி இருந்தால் பழைய ஐபிஎல்-லை பற்றி பேசுவார். ஆட்டம் முடிந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தால் வரப்போகும் ஐபிஎல்-லை பற்றி பேசுவார்.
"ஐய்யோ நீங்க அந்த மேட்சை பார்த்தீங்களா?????? ச்ச சான்ஸே இல்லை. அவன் அடிச்சான் பாரு ஐய்யோ" குழந்தையை போல குதுகலிப்பார்.
அந்த நீங்க என்ற வார்த்தை பெரும்பாலும் தாமரை அண்ணன் இல்ல ஆரென் அண்ணா மதி போன்றவர்கள் தான் இருப்பார்கள். நான் கிரிக்கெட்டில் அதிகமாக கோல் அடிப்பேன் என்ற காரணத்தால் என்னிடம் அதுபற்றி பேச மாட்டார். இப்படி இருக்க கிரிக்கெட் டிக்கெட் கேட்க அவருக்கு போன் செய்தேன். எனக்கு கிரிக்கெட்டின் மீது பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது, காரணம் சின்ன வயதில் பொறுமையாக டிவியின் முன் அமர்ந்து பார்க்கும் பழக்கம் எல்லாம் இல்லை. ஆனால் கிரிக்கெட் விளையாடுவேன் ஸ்கூல் படிக்கும் போது, அதுவும் கார்க் பாலில் தான். எனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்கும் வழியாக
கிரிக்கெட்டை நான் பயன்படுத்தினேன். குறிவைத்து பார்ட் பை பார்ட்டாக எதிரிகள் ஆடும் போது அடிப்பேன், கனுக்கால், தொடை, கால் முட்டி, கை முட்டி, நெஞ்சு, தாடை என்று பந்து வீச்சுளே அடிப்பேன். ஒரு கட்டத்தில் எதிரிகள் சுதாரித்துக் கொண்டார்கள், அந்த சமயம் பார்த்து ஸ்கூலில் பேடு, ஹெல்மட் ஆகிய பாதுகாப்பு சாதனங்கள் வாங்கி தந்து நிர்வாகம் எதிரிகளை காப்பாற்றி விட்டு என்னுடைய சாபத்தை பெற்றுக் கொண்டது. அதன்பின் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டேன், காரணம் கல்லூரியில் கைப்பந்து விளையாட்டுக்கு மாறிவிட்டேன், அதுல இன்னும் எதிரியின் முகத்திலே குறிப்பார்த்து
அடிக்கலாம் இல்லையா............. தல பேசும் இரண்டாவது விஷயம், சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த கோலங்கள் தொடரை பற்றி பேசுவார், காதில் இருந்து ரத்தம் வரும் வரை பேசுவார். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கும் மனிதர் எப்படி அந்த கருமாந்திர சீரியலை பார்க்கிறார் என்று.
மூன்றாவது நம் மன்ற உறவுகளை பற்றி.
இப்படி இருக்க முதல் முறை மைதானத்தில் சென்று மேட்ச் பார்க்கலாம் என்ற ஆசையில் தலையிடம் கேட்கலாம் என்று தோன்றியது. வருட கணக்கில் ஒரே ஊரில் இருந்தும், ஒரு பேச்சுக்கு
கூட எப்படி இருக்கீங்க என்று ஒரு வார்த்தை கூட நான் தலையை கேட்டது கிடையாது. ஆனால் டிக்கெட்டுக்கு மட்டும் அவரிடம் போய் நிற்க அசிங்கமாக இருந்தது. இருந்தாலும் நம்ம தலையிடம் என்
அசிங்கம் என்று நினைத்து மெசேஜ் அனுப்பினேன்.
"எத்தனை டிக்கெட் வேண்டும்" என்றார்.
"இரண்டு தல"
"இரண்டு இருக்காதே, பார்க்கனும்பா"
"தல நானும் என்னுடைய கேள் ப்ரன்டும் வரோம் தல, அதனால் கண்டிப்பா இரண்டு டிக்கெட் வேணும்"
"கிடைத்தால் கண்டிப்பா தருகிறேன்"
"தல அப்படி சொல்லாதீங்க, நான் அவளை கண்டிப்பாக மேட்சுக்கு அழைத்து செல்வதாக வாக்கு கொடுத்து விட்டேன்"
"அப்ப கவலைப்படாதே நானும் உன் கேள் ப்ரன்டும் மேட்சுக்கு போகிறோம்"
"யப்பா சாமி எனக்கு டிக்கெட்டை வேண்டாம்" என்று அனுப்பி விட்டு மெசேஜ் செய்வதை நிறுத்திவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் முதலுக்கே மோசமாகி இருக்கும். இரண்டு நாள் கழித்து தலையே போன்
செய்தார்.
"டிக்கெட் இருக்கு, 10 டூ 1 ஆபிஸில் இருப்பேன், 1டூ 2 வீட்டுக்கு போயிடுவேன். மறுபடியும் 2 டூ 5 ஆபிஸில் இருப்பேன் எப்ப வர"
"எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, தலை நான் இப்போ டபுள் சிப்டில் இருக்கேன் நாளை காலை வீட்டிலே வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றேன்"
"வீட்டுக்கா??????? யோசிச்சி சொல்றேன்" என்று போனை வைத்து விட்டார்.
எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. தலைவர் நம்மை வீட்டுக்கு அழைக்க மறுக்கிறார். அப்போ வீட்டுல மாமியிடம் இவர் பண்ணுகிற வேலைகள் எல்லாம் தெரியாது, ராயல் செலஞ்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய மல்லையா மாதிரி எப்போதும் பெண்கள் கூட்டத்திற்கு நடுவில் தல இருக்கும் மேட்டர் எல்லாம், மாமிக்கு தெரியாது போல, நாம் எப்படியாவது வீட்டிற்கு சென்று மாமியிடம் இவரை போட்டு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு ஆப்பிரேஸன் திட்டத்தை ஆரம்பித்தேன். இவர் என்ன சொன்னாலும் கேட்காமல் அவர் வீட்டுக்கு போக வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அதே போல அடுத்த நாள் காலை அவருக்கு போன் செய்து அவருடைய வீட்டிற்கு வழி கேட்டேன். போனை எடுத்தவர் அவர் வீடு இருக்கும் தெரு பெயரை மட்டும் சொன்னார்.
"தல வீட்டு நம்பரை சொல்லுங்கோ"
"முதல்ல அந்த தெருவுக்கு வா அப்புறம் சொல்றேன்" என்று போனை கட் செய்து விடுவார். ஆஹா அப்ப எதோ, மாமியிடம் சொல்லப்போகிறார். நான் எங்கே வந்து அவரைப் பற்றி சொல்லிவிடப்போறேன் என்ற பயத்தில் மாமியிடம்,
"இப்ப வீட்டுக்கு ஒருத்தன் வருவான், அவனிடன் நீ பேச்சு கொடுக்காதே. அவன் ஏற்கனவே ஜெயிலில் இருந்தவன், மூன்று கொலை செய்து இருக்கான். அவன் வந்ததும் வா என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு
உள்ளே போய்விடு. அப்புறம் ஒரு நிமிஷத்திற்கு ஒருமுறை கிச்சனில் இருந்து ஒவ்வொரு பாத்திரமாக கீழே சத்தமாய் போடு, நாய் பூனையை விரட்டுவது போல அடிக்கடி சூசூசூசூ என்று விரட்டு,,,, அவனே போய் கிளம்பி விடுவான்" என்று சொல்வதற்காக அந்த அவகாசம் அவருக்கு தேவைப்பட்டு இருக்கும்.
நான் இருந்தாலும் விடுவதாக இல்லை இவர் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் மாமியிடம் சொல்லியிருக்கட்டும், மாமி என்னை அடிக்க வந்தால் கூட அடியை வாங்கிக் கொண்டு தலையை பற்றி சொல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். பைக்கை ஆபிஸில் இருந்து விரட்டினேன் தல வீட்டிற்கு. பைக்கை ஒட்டிக்கொண்டே தலையுடனான என் பழைய சந்திப்பை நினைத்து பார்த்தேன். மன்ற சந்திப்புகளில் எத்தனை பேர் இருந்தாலும் தல தனியாக தெரிவார்
ஆனால் கடந்த சந்திப்பின் போது தலையை தூக்கி சாப்பிடும் விதமாக ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. அது தலையின் கசின் சுவாமிநாதன், பார்க்க நல்ல கலர், நல்ல உயரம், அழகான சிரிப்பு தலையின் வயதுக்கு கொஞ்சம் கம்மியாக இருக்கும்................ஆம் தலைக்கு 16 இவருக்கு 14 இருக்கும். மனிதன் பேசினாலே கிண்டல் தான், அதுவும் கிண்டல் என்றால் சிரித்துக் கொண்டே செய்வது. ஆனால் இவர் சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லும் போது, சிரிப்பு பிடுங்கிக் கொண்டு வரும், ஒர் உதாரணம்
நாங்கள் டின்னர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம், நான் தல, சுவாமிநாதன் மற்றும் நம்ப ஆரென் அண்ணா. சிக்கன், ரைஸ், என்று நிறைய பண்டங்கள் இருந்தது.
"தல அவருக்கு கொஞ்சம் சிக்கன் போடுங்க" என்றேன் நான்.
"இல்ல இல்ல அவர் அதெல்லாம் சாப்பிட மாட்டார்" என்றார் தல.
"யார் சொன்னது" இது அவர். உடனே தலை என்னை பார்த்து
"எப்பவாவது சாப்பிடுவார்" என்றார். உடனே அவர்
"அந்த எப்பவாவது தான் இன்னைக்கு வை" என்றார். உடனே தல, சிரித்துக் கொண்டே வைத்தார். சிக்கனை சாப்பிட்டவர், நன்றாக இருக்கு என்றவர். திடீரென
"இந்த சிக்கன் பிளேட் எவ்வளவு இருக்கும்" என்றார். உடனே தல
"என்ன 150 ரூபாய் இருக்கும்" என்றார். கேட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்தவர். மறுபடியும் ஆரென் அண்ணாவை பார்த்து
"சிங்கப்பூரில் மருத்துவத்துக்கு அதிகமா செலவு ஆகும் இல்ல" என்றார். அவரும் ஆமா என்பது போல தலையை ஆட்டினார்.
"ஒரு பல்லை பிடுங்க எவ்வளவு ஆகும் என்றார்".
"உடனே அவர் என்ன ஒரு 150 டாலர் ஆகும்" என்றார். உடனே சுவாமிநாதன்
"சோ திஸ் சில்லி சிக்கன் சேவ்டு மீ, 150 டாலர்ஸ்" என்று சிரிக்காமல் கையில் இருந்த பல்லை காட்டினார். அனைவரும் சிரித்தோம், அவரும் லேசாக சிரித்தார், மனதுக்கு இதமான சிரிப்பு அது. கிரிக்கெட்டை பற்றி பிச்சி உதறினார். எந்த பவுலர் எந்த விக்கெட் எடுத்தான், எந்த வருடம், யாருடன் விளையாடும் போது எடுத்தான் என்று அனைத்து தகவல்களையும் சொன்னார். பொது அறிவும் அப்படித்தான் புவனேஸ்வரி கேஸில் இருந்து போப் பாண்டவர் வரை அலசுகிறார். தினம் நிகழும் நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்து இருக்கிறார். இதில் என்ன அதிசயம் இருக்கு என்று நீங்கள் கேட்டால். அதற்கான பதில் கண்டிப்பாக இருக்கு என்பது தான்........................... அவருக்கு இரு கண்களும் தெரியாது. ஆனால் ஒருமுறை பார்த்தாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் பர்சனாலிட்டி
தல தெருவின் பக்கத்தில் வந்து விட்டேன். அடுத்த பாகத்தில் அவர் வீட்டிற்குள் சென்று விடுவேன்.
இறுதி பாகம் விரைவில்...........