PDA

View Full Version : கவிதையா என்பதில் சந்தேகம்



சுஜா
13-04-2010, 05:13 AM
வெந்து பிதுங்கும்
டவுன் பஸ்ஸில்
காலியாய் கிடக்கும்
சீட்டிற்கு
கிழவனை மிதித்து
கருத்தவளை இடித்து
காலிப்பய என போற்றப்பட்டுப்
போய் நின்றால்
அங்கு ஏற்கனவே ஒருவன்
வாந்தி எடுத்திருப்பான்.

அக்னி
13-04-2010, 06:47 AM
கருத்தவள் வெளுத்தவள் பார்ப்பார்களா
இடிப்பவர்கள்...

கருத்தவள் - கருத்தரித்தவள்
கருத்திற் கொள்ளவும்.

தலைப்பின் தொடர்பு பிடிபடுகுதில்லை...

சுஜா
13-04-2010, 01:10 PM
கருத்தவள் வெளுத்தவள் பார்ப்பார்களா
இடிப்பவர்கள்...

கருத்தவள் - கருத்தரித்தவள்
கருத்திற் கொள்ளவும்.

தலைப்பின் தொடர்பு பிடிபடுகுதில்லை...


இடிப்பது என்பது தெரிந்து செய்வதில்லை, கூட்டத்தின் நெருக்கடியில் தெரியாமல் நிகழ்வது .

நான் எழுதியது கவிதையா என்னும் கேள்விக்கு
நீங்கள் பின்னூட்டம் இட வேண்டும் என்று கருத்தில் வைத்து தலைப்பிட்டேன்.