PDA

View Full Version : காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்!



trifriends
06-04-2010, 12:08 PM
நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு!

1. முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!

2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!

3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.

5. அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.

6. அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!

7. தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.

8. கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.

9. கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவரசியமான செய்திபற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.

10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்றுவிட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!

11. அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!

12. அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!!

13. அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

14.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க்கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..

15. அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.

16. இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!

நன்றி: தமிழ்த்துளி - தேவா.
http://abidheva.blogspot.com/2009/07/16.html

விகடன்
07-04-2010, 06:57 AM
ஏனப்பா ரைஃபிரண்ட்ஸ்,
லவ் பண்ணுறதையே பெரிய வேலைத்திட்டம் போலிருக்கிறதே!
இப்படித்தான் ஒருவருடைய மனதைக் கவரவேண்டுமென்றால், அது நம்ம நடத்தைக்கெல்லாம் சரிப்பட்டு வராதப்பா.

இந்த விடயத்தைப் பொறுத்தவரை, பிச்சை வேண்டாம், நாயைப் பிடி என்பதுதான் நம்ம சுலோகம்.

ஜனகன்
07-04-2010, 07:17 AM
இப்படி அவரின் விருப்பு வெறுப்பறிந்து அவ பின்னாலை லோ... லோ.......என்று அலையிரத்தை விடுத்து, எம்மை விரும்பிற பெண்ணாய் பார்த்து கட்டிக்கிறது ரொம்ப ஈசி.
விராடன் சொன்ன மாதிரி "பிச்சை வேண்டாம், நாயைப் பிடி என்பதுதான்" என்கருத்தும்.

விகடன்
08-04-2010, 12:49 PM
ஜனகன். உங்கள் வசனத்தில் ஓர் திருத்தம்...

எம்மை விருப்பிற பெண்ணில் நமக்கும் விருப்பமிருந்தால்... என்று வரவேண்டும்.
கூட்டிக்கழிச்சுப்பார்த்தால் உலகத்தில ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை கூடவாம். அதால ஆண்களுக்கு எப்பவும் தனிமவுசு இருக்கத்தான் செய்யும்.

அதனால்த்தான் என்னவோ “ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்று ஓர் பழமொழி சொல்லுவாங்கள்.

ஜனகன்
08-04-2010, 01:07 PM
ஆமாம் நாமும் விரும்பினால் தான்.இல்லை என்றால் எப்படி?
சுட்டிகாடியமைக்கு நன்றி விராடா.

ஜேஜே
22-04-2010, 06:20 AM
அடங்கோப்பா.... என்னாமா சொல்றாங்கய்யா... மேலே நண்பர் சொன்னதை மொத்தமாக ஒரேவரியில் சொல்லவேண்டுமானால்,

உங்கள் பார்வை,பேச்சு,செயல்கள் அனைத்தும் உங்களை துணையை பற்றியே இருக்கட்டும். சில பொய்களை அவிழ்த்துவிடுங்கள், தவறில்லை. பெண்கள் பொய்களை உள்ளுற ரசிப்பார்கள். நமது பாராட்டுக்களை மயிலிறகை புத்தகத்தில் வைத்து அடிக்கடி திறந்துப்பார்த்து சந்தோசப்படுவதைப்போல நினைத்து நினைத்து மகிழ்வார்கள்.

பெண்களுக்கு மதிப்பளியுங்கள், அவளின் ஆலோசனைகளை செவிமடுத்து கேளுங்கள். ஆனால் அவள் காலில் விழுந்துவிடாதீர்கள், அரவணைத்து போகவும் வேணும், ஆண்மையாக நடந்துக்கொள்ளவும் வேணும்...

யவனிகா
08-05-2010, 04:16 PM
காதலியுடன் முதல் சந்திப்பில் மட்டும் வெற்றி பெறணும்னா
இதை எல்லாம் மட்டும் பின்பற்றினால் போதும்.

காதலை மனைவியாக்கி எல்லா சந்திப்பிலும் வெற்றிபெறணும்னா
இன்னொரு பாயிண்டையும் சேர்க்கணும்.

17.முடிந்தவரை உண்மையாக இருங்கள்.
இது தான் அது.

மதிக்கண்ணு படிச்சிட்டையாப்பா?

எங்க முதலில் காதலி கிடைச்சாத்தான சந்திக்க....:traurig001::traurig001::traurig001:

உன்னப் பாத்தாலே எல்லாரும் பயப்படறாங்க...என்னை தற்கொலை செய்யவா வற்றேன்னு என்ன செய்ய???

மதி
08-05-2010, 04:24 PM
காதலியுடன் முதல் சந்திப்பில் மட்டும் வெற்றி பெறணும்னா
இதை எல்லாம் மட்டும் பின்பற்றினால் போதும்.

காதலை மனைவியாக்கி எல்லா சந்திப்பிலும் வெற்றிபெறணும்னா
இன்னொரு பாயிண்டையும் சேர்க்கணும்.

17.முடிந்தவரை உண்மையாக இருங்கள்.
இது தான் அது.

மதிக்கண்ணு படிச்சிட்டையாப்பா?

எங்க முதலில் காதலி கிடைச்சாத்தான சந்திக்க.... :traurig001::traurig001::traurig001:

உன்னப் பாத்தாலே எல்லாரும் பயப்படறாங்க...என்னை தற்கொலை செய்யவா வற்றேன்னு என்ன செய்ய???
:icon_b::icon_b::icon_b::icon_b:

யவனிகா
08-05-2010, 04:32 PM
:icon_b::icon_b::icon_b::icon_b:

இந்த புள்ள மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தா இப்படி அக்காகிட்ட் ஒருவார்த்த கூட பேசாம போயிருக்கும்.

துக்கம் வரும்போது தொண்டை வலிக்க சிரிக்க போயிருக்குமோ?

ஆண்டனே தம்பிக்கு நல்ல வழியக் காட்டுப்பா?:):)

சிவா.ஜி
08-05-2010, 04:50 PM
அடப்பாவமே....ஆமா மதி அப்படி என்னங்க துக்கம்...? ஒண்ணுமே பேசாமப் போயிட்டீங்க.....

சரி விடுங்க.....நீங்க பாக்காததா....???

மதி
08-05-2010, 05:02 PM
இந்த புள்ள மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தா இப்படி அக்காகிட்ட் ஒருவார்த்த கூட பேசாம போயிருக்கும்.

துக்கம் வரும்போது தொண்டை வலிக்க சிரிக்க போயிருக்குமோ?

ஆண்டனே தம்பிக்கு நல்ல வழியக் காட்டுப்பா?:):)


அடப்பாவமே....ஆமா மதி அப்படி என்னங்க துக்கம்...? ஒண்ணுமே பேசாமப் போயிட்டீங்க.....

சரி விடுங்க.....நீங்க பாக்காததா....???
இந்த கணினில இ கலப்பை இல்லே. அதனால டைப் பண்ண சோம்பல் பட்டுட்டு ஸ்மைலிய பயன்படுத்தினேன்.. வேற ஒண்ணுமில்ல. அதுக்குள்ளே துக்கம் தூக்கம்னு சொல்லிட்டீங்க. :icon_b:

aren
11-05-2010, 12:34 PM
மதி

காதலில் வெற்றி பெற முதலில் காதலியாக ஒருத்தியை தேர்வு செய்திட வேண்டும். அப்புறம்தான் மற்றதெல்லாம். அதனாலே இங்கே இருந்து நேரத்தை வீணாக்காமல் தேடுதல் வேட்டையில் ஈடுபடுங்கள். இது முதல் வழிமுறைன்னு வச்சுக்குங்க.

பால்ராஜ்
18-05-2010, 03:06 PM
நேரத்தை வீணாக்கக் கூடாது ....
சரியான அறிவுறை....!

அறிஞர்
26-05-2010, 09:39 PM
நல்ல அறிவுறைகள்....

இந்த காலத்து பெண்களில், சிலர் அறிவுகூர்மையை, சிரிப்புத்தன்மை வாய்ந்தவரை விரும்புவர்...

தங்கவேல்
04-06-2010, 05:10 AM
காதலித்து திருமணம் செய்தவன் என்ற வகையில் சொல்கிறேன் மேற்படி சமாச்சாரங்கள் எல்லாம் காதலுக்கு ஒத்தே வராது. சினிமாக்காதல் வேறு உண்மைக்காதல் வேறு.

எந்திரன்
13-07-2010, 10:37 AM
நான் விரும்பும் பெண் என் மனைவிதான். எனவே இதில் நீங்கள் கூறியுள்ளது எல்லாம் யாராவது காதலிக்கும் இளைஞருக்கு கற்றுத்தருகிறேன்

த.ஜார்ஜ்
20-07-2010, 01:51 PM
இந்த வழிகளை பின்பற்றி யாரெல்லாம் ஜெயித்தார்கள். அதையும் சொல்லுங்கப்பா.. தெரிஞ்சிக்கறோம்

மதி
20-07-2010, 01:53 PM
இன்னும் முதல் வழிமுறையிலேயே இருக்கிறேன்... சந்திக்க நான் ரெடி... அவங்க...!!

samuthraselvam
21-07-2010, 10:08 AM
இன்னும் முதல் வழிமுறையிலேயே இருக்கிறேன்... சந்திக்க நான் ரெடி... அவங்க...!!

அதுக்கு தானே ஒருத்தரும் முன் வரமாட்டேங்கிறான்களே....

ஆனா நான் இதை படிச்சதும் என் நபர்களுக்கு மெயில் பண்ணினே... மதி மாதிரி தான் அவங்களும் பாவம்னு அனுப்பி வச்சேன்.... ஏதோ நம்மால முடிஞ்சா உதவி....

பகிர்வுக்கு நன்றி நண்பரே...!

மதி
21-07-2010, 10:09 AM
அதுக்கு தானே ஒருத்தரும் முன் வரமாட்டேங்கிறான்களே....

ஆனா நான் இதை படிச்சதும் என் நபர்களுக்கு மெயில் பண்ணினே... மதி மாதிரி தான் அவங்களும் பாவம்னு அனுப்பி வச்சேன்.... ஏதோ நம்மால முடிஞ்சா உதவி....

பகிர்வுக்கு நன்றி நண்பரே...!
ஏதோ நான் பாவம்னு ஒத்துக்கிட்டீங்களே.. அது வரைக்கும் நன்றி..

samuthraselvam
21-07-2010, 11:15 AM
ஏதோ நான் பாவம்னு ஒத்துக்கிட்டீங்களே.. அது வரைக்கும் நன்றி..

நெஜமாவே நீங்க பாவம் தான் மதி...

எல்லா திரியிலையும் உங்க பேர் வரது தவிர்க்கமுடியாதது மாதிரி ஆகிப் போச்சு...

மன்றத்தின் சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகிட்டீங்க....

மதி
21-07-2010, 11:53 AM
நெஜமாவே நீங்க பாவம் தான் மதி...

எல்லா திரியிலையும் உங்க பேர் வரது தவிர்க்கமுடியாதது மாதிரி ஆகிப் போச்சு...

மன்றத்தின் சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகிட்டீங்க....
அதுக்கு காரணம்... என்னைப்பத்தி ஏகப்பட்ட ஆளுங்களுக்கும் தெரிஞ்சு போச்சு... :eek::eek::eek:

kathir_tamil
07-11-2010, 02:32 PM
தன்னை தானே முதலில் காதலிப்பவனுக்கு சுலபமாக கிடைத்து விடுகிறது காதல் வெற்றி ...

ஆன்டனி ஜானி
07-11-2010, 02:55 PM
காதலில் பல வயதிலும் வரக்கூடிய காதல் உள்ளன நீங்கள் எந்த பருவக்காதலை சொல்லுகிறீர்கள் நண்பா சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்

ஸ்ரீசரண்
13-11-2010, 08:53 AM
எனக்கு ஒரு சந்தேகம்ப்பு, மொத சந்திப்புல அவ தான் நம்ம காதலி ன்னு எப்படி தெரியும்?

நம்ம காதலி ன்னு முடிவான அப்புறம்னா அந்த சந்திப்பு மொத சந்திப்பா இருக்காதே .....

எப்பூடி...............:medium-smiley-080:

ஆதவா
15-11-2010, 02:17 PM
பரவாயில்லையே... ஒருநாளைக்கு நமக்கும் உபயோகமா இருக்குமே!
பகிர்வுக்கு நன்றி

M.Jagadeesan
15-11-2010, 10:05 PM
காதலியை ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போயி வயிறு முட்ட வாங்கிக் கொடுக்கணும்.