அகத்தியன்
31-03-2010, 01:33 PM
ஒரு கனவுப்புள்ளியில் ஆரம்பமானது..
உன்னுடனான உரையாடல்கள்..
காலம் கரைக்கும் அவை பற்றி
உனக்கும் எனக்கும் யாதொரு கவலையுமில்லை.
உன் தோழியர் பற்றி..
அவர்களின் காதல் பற்றி..
இன்னும் உன் கனவுகள் பற்றி ..
இன்னும் இன்னும்
கண்கள் விரிய ..
ஓர் அபிநயத்துடன் சொல்லிச்செல்வாய்..
எதுவும் என்னுள் மிஞ்சாது.. உன் அபிநயங்கள் தவிர்த்து.
கனவுகள் இறந்து..
நிஜங்கள் மீதமான போது..
என்னுடன் நீயுமில்லை..
நாம் தொடர்ந்த அப்புள்ளியும் மறைந்தே போயிற்று.
ஆனாலும்
நான் சேமித்தே வைத்துள்ளேன்..
உன் அபிநயங்களினையும்…
நீ கொஞ்சமாய் தந்துவிட்டுப்போன உன்காதலையும்..
உன்னுடனான உரையாடல்கள்..
காலம் கரைக்கும் அவை பற்றி
உனக்கும் எனக்கும் யாதொரு கவலையுமில்லை.
உன் தோழியர் பற்றி..
அவர்களின் காதல் பற்றி..
இன்னும் உன் கனவுகள் பற்றி ..
இன்னும் இன்னும்
கண்கள் விரிய ..
ஓர் அபிநயத்துடன் சொல்லிச்செல்வாய்..
எதுவும் என்னுள் மிஞ்சாது.. உன் அபிநயங்கள் தவிர்த்து.
கனவுகள் இறந்து..
நிஜங்கள் மீதமான போது..
என்னுடன் நீயுமில்லை..
நாம் தொடர்ந்த அப்புள்ளியும் மறைந்தே போயிற்று.
ஆனாலும்
நான் சேமித்தே வைத்துள்ளேன்..
உன் அபிநயங்களினையும்…
நீ கொஞ்சமாய் தந்துவிட்டுப்போன உன்காதலையும்..