PDA

View Full Version : என் கவிதைகளினை கொல்பவளே..



அகத்தியன்
31-03-2010, 01:19 PM
என் கவிதைகளினை கொல்பவளே..

நினைவுகள் வழியும் நாட்களில்,
எதையெல்லாமோ எழுத எண்ணுகின்றேன்..
ஆனாலும் முடிவதில்லை
யாவும் அந்தரத்தில் நிற்க..
நீ மட்டும் வியாபகமாகி தோன்றுகின்றாய்..

என் கவிதைகளினை கொல்பவளே..
என்னை விட்டுவிடு..
நான் மட்டும் வாழ்கின்றேன்..
உன் பொருட்டில் எனக்கேதும் அக்கறை இல்லை..

சிவா.ஜி
31-03-2010, 02:54 PM
சிந்தனை முழுதும் அவள் நின்றால்.....சிந்தும் எண்ணங்கள் சிறைபட்டுத்தான் போகும்.

என்னை விட்டுவிடு...நானும், என் கவிதைகளும் மட்டும் வாழ்ந்துகொள்கிறோம்....என சொல்லியிருந்தால் கவிதையின் தலைப்புக்குப் பொருத்தமாய் இருக்கும்.

பாராட்டுக்கள் அகத்தியன்.

பா.ராஜேஷ்
31-03-2010, 03:57 PM
நீர் விட்டாலும் உமது கவிதை அவளை விடாதே ...
பாராட்டுக்கள் அகத்தியன்