PDA

View Full Version : ஜோக்ஸ்



gvchandran
31-03-2010, 01:02 AM
ஜோக்ஸ்
1.ஓற்றன் ; மன்னா! எதிரி நாட்டு மன்னன் நம் நாட்டின் மீது வேகமாக படை எடுத்து வருகிறான்
மன்னன் : அப்படியா, பாதையில் சைபால் களிம்பை தடவச்சொல்லு .சறுக்கி விழுந்து சாகட்டும்.

2. ரவி : கோபு ! ஆப்பரேஷன் ரூம் வரை போய்ட்டு ஒடி வந்துட்டியே.ஏன்?
கோபு : நர்ஸ் சொன்னா “ஆப்பரேஷன் ரொம்ப சிம்பிள். பயப்பட வேண்டாம்”னு.
ரவி : அப்ப ஏண்டா ஓடி வந்துட்டே?
கோபு :நர்ஸ் என் கிட்ட சொல்லலை. அவ டாக்டர் கிட்டன்னா சொன்னாள் .அதான்.

3 மணி : என் மனைவி எந்த சப்ஜக்ட் கொடுத்தாலும் அதைப்பத்தி அரை மணி நேரம் பேசுவாள்.
குரு: இது என்ன பிரமாதம்? சப்ஜெக்டே இல்லாம என் மனைவி மணிக் கணக்கிலே பேசுவாளே.

4.ஆசிரியர் ? பாலா, எட்டை ரெண்டாலே வகுத்தால் எவ்வளவு வரும்?
பாலா : செங்குத்தா வகுத்தா 3 வரும். கிடைமட்டமா வகுத்தா பூஜ்யம் வரும்/
--------------------------------------------------------------------------------------------
5 வியாபாரி : இது விசித்திரமான கிளி ! வலது காலில் கட்டி இருக்கும் நூலை இழுத்தா ஆங்கிலம் பேசும். இடது காலின் நூலை இழுத்தா ஜப்பான் மொழி பேசும்.
சங்கர் : ரெண்டு நூலையும் இழுத்தா..?
கிளி : முட்டாளே ! நான் விழுந்துடுவேன். (தமிழில் பேசியது)
--------------------------------------------------------------------------------------------------
6 ரகு : கலர் பிலிம் போட்டு போட்டோ எடுத்தும் பிளாக் அண்ட் ஒயிட் படம் தான் கிடைச்சது.
ரவி ;ஏன் அப்படி?
ரகு ; நான் போட்டோ எடுத்தது வரிக்குதிரையின் க்ளோஸ் அப் ஆச்சே.
----------------------------------------------------------------------------------------------------------------

7 கோபு ; இந்த மிருகத்தை விட நீ வேகமா ஒடினாலும் இதை உன்னாலே கையாலே பிடிக்க முடியாது
எந்த மிருகம் சொல்லு.
மணி . தெரியலை. நீயே சொல்லு.
கோபு முள்ளம்பன்றி டா,

8 ரகு: ஒரு பறவையை மரக்கூண்டில் அடைத்து வச்சேன் ஆனாலும் அது தப்பிச்சுடுத்து.
ரவி : எப்படி தப்பிச்சது?
ரகு : அது மரங்கொத்திப்பறவை ஆச்சே.

9 அமைச்சர் . (பேரக்குழந்தையிடம்) நீ ஸ்கூலுக்கு எந்த வண்டியிலே போக ஆசைப்படறே?
நான் காரா ஜீப்பா ஸ்கூட்டரா சொல்லு. எதுவானாலும் ஏற்பாடு பண்றேன்.?

பேரன்: தாத்தா! எனக்கு ரோட் இஞ்சினிலே தான் போகணும் அப்ப தான் ஸ்கூல் முடியற நேரம் போய் சேரும். வரப்ப காரில் வந்துடறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

10 பையன்: அப்பா! இந்த பிளாஸ்க்கினாலே என்ன பிரயோஜனம்?
அப்பா : இது சூடான பொருளை சூடாகவும் குளிர்ச்சியான பொருளை குளிர்ச்சியாகவும்
வச்சிருக்கும்.
பையன் ; இல்லையே, நேற்று நான் சூடான காப்பி , ஐஸ் கிரீம் ரெண்டையும் இதிலே ஊத்தினேன். காப்பி ஜில்லுனு ஆச்சு; ஐஸ் கரைஞ்சே போச்சு.

அன்புரசிகன்
31-03-2010, 08:31 AM
நகைச்சுவைகள் அருமை...



4.ஆசிரியர் ? பாலா, எட்டை ரெண்டாலே வகுத்தால் எவ்வளவு வரும்?
பாலா : செங்குத்தா வகுத்தா 3 வரும். கிடைமட்டமா வகுத்தா பூஜ்யம் வரும்/

இது மட்டும் புரியல..:rolleyes:

சிவா.ஜி
31-03-2010, 08:50 AM
அன்பு...8....என்ற எண்ணை குறுக்கேப் பிரித்தால்....இரண்டு 0 கிடைக்கும்...நெடுக்காய் பிரித்தால் 3 ஒரு புறமும், தலைகீழான 3 ஒரு பக்கமும் இருக்கும். அதைத்தான் நகைச்சுவையாய் சொல்லியிருக்கிறார்.
நல்ல நகைச்சுவைகள் சந்திரன். பகிர்வுக்கு நன்றி.

அன்புரசிகன்
31-03-2010, 09:00 AM
அடக்கடவுளே............

பா.ராஜேஷ்
04-04-2010, 09:47 AM
நல்ல நகைச்சுவை துணுக்குகள். நன்றி அன்பரே.

ஆர்.ஈஸ்வரன்
04-04-2010, 10:12 AM
நல்ல நகைச்சுவை

ஜனகன்
04-04-2010, 02:31 PM
மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு
சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்
உனக்குத்தானே...!

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு,
நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா
தண்ணியடிக்கிறாரு.
கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா
கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

சிவா.ஜி
04-04-2010, 03:12 PM
பல வருடமா இந்தக் கணவனும் மனைவியும் இணையத்தில் சுத்தி சுத்தி வராங்க.....

மீண்டும் தூசு தட்டி கொடுத்ததற்கு நன்றி ஜனகன்.

கலையரசி
04-04-2010, 03:14 PM
நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்
உனக்குத்தானே...!
இந்தத் துணுக்குக்கு வாய்விட்டுச் சிரித்தேன்.
நல்ல நகைச்சுவை துணுக்குகளைத் தந்த ஜனகனுக்குப் பாராட்டுக்கள்.

கலையரசி
04-04-2010, 03:16 PM
நர்ஸ் என் கிட்ட சொல்லலை. அவ டாக்டர் கிட்டன்னா சொன்னாள் .அதான்.

இந்தத் துணுக்கை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

ஜனகன்
04-04-2010, 03:31 PM
படித்து ரசித்தமைக்கு நன்றி.