gvchandran
31-03-2010, 01:02 AM
ஜோக்ஸ்
1.ஓற்றன் ; மன்னா! எதிரி நாட்டு மன்னன் நம் நாட்டின் மீது வேகமாக படை எடுத்து வருகிறான்
மன்னன் : அப்படியா, பாதையில் சைபால் களிம்பை தடவச்சொல்லு .சறுக்கி விழுந்து சாகட்டும்.
2. ரவி : கோபு ! ஆப்பரேஷன் ரூம் வரை போய்ட்டு ஒடி வந்துட்டியே.ஏன்?
கோபு : நர்ஸ் சொன்னா “ஆப்பரேஷன் ரொம்ப சிம்பிள். பயப்பட வேண்டாம்”னு.
ரவி : அப்ப ஏண்டா ஓடி வந்துட்டே?
கோபு :நர்ஸ் என் கிட்ட சொல்லலை. அவ டாக்டர் கிட்டன்னா சொன்னாள் .அதான்.
3 மணி : என் மனைவி எந்த சப்ஜக்ட் கொடுத்தாலும் அதைப்பத்தி அரை மணி நேரம் பேசுவாள்.
குரு: இது என்ன பிரமாதம்? சப்ஜெக்டே இல்லாம என் மனைவி மணிக் கணக்கிலே பேசுவாளே.
4.ஆசிரியர் ? பாலா, எட்டை ரெண்டாலே வகுத்தால் எவ்வளவு வரும்?
பாலா : செங்குத்தா வகுத்தா 3 வரும். கிடைமட்டமா வகுத்தா பூஜ்யம் வரும்/
--------------------------------------------------------------------------------------------
5 வியாபாரி : இது விசித்திரமான கிளி ! வலது காலில் கட்டி இருக்கும் நூலை இழுத்தா ஆங்கிலம் பேசும். இடது காலின் நூலை இழுத்தா ஜப்பான் மொழி பேசும்.
சங்கர் : ரெண்டு நூலையும் இழுத்தா..?
கிளி : முட்டாளே ! நான் விழுந்துடுவேன். (தமிழில் பேசியது)
--------------------------------------------------------------------------------------------------
6 ரகு : கலர் பிலிம் போட்டு போட்டோ எடுத்தும் பிளாக் அண்ட் ஒயிட் படம் தான் கிடைச்சது.
ரவி ;ஏன் அப்படி?
ரகு ; நான் போட்டோ எடுத்தது வரிக்குதிரையின் க்ளோஸ் அப் ஆச்சே.
----------------------------------------------------------------------------------------------------------------
7 கோபு ; இந்த மிருகத்தை விட நீ வேகமா ஒடினாலும் இதை உன்னாலே கையாலே பிடிக்க முடியாது
எந்த மிருகம் சொல்லு.
மணி . தெரியலை. நீயே சொல்லு.
கோபு முள்ளம்பன்றி டா,
8 ரகு: ஒரு பறவையை மரக்கூண்டில் அடைத்து வச்சேன் ஆனாலும் அது தப்பிச்சுடுத்து.
ரவி : எப்படி தப்பிச்சது?
ரகு : அது மரங்கொத்திப்பறவை ஆச்சே.
9 அமைச்சர் . (பேரக்குழந்தையிடம்) நீ ஸ்கூலுக்கு எந்த வண்டியிலே போக ஆசைப்படறே?
நான் காரா ஜீப்பா ஸ்கூட்டரா சொல்லு. எதுவானாலும் ஏற்பாடு பண்றேன்.?
பேரன்: தாத்தா! எனக்கு ரோட் இஞ்சினிலே தான் போகணும் அப்ப தான் ஸ்கூல் முடியற நேரம் போய் சேரும். வரப்ப காரில் வந்துடறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
10 பையன்: அப்பா! இந்த பிளாஸ்க்கினாலே என்ன பிரயோஜனம்?
அப்பா : இது சூடான பொருளை சூடாகவும் குளிர்ச்சியான பொருளை குளிர்ச்சியாகவும்
வச்சிருக்கும்.
பையன் ; இல்லையே, நேற்று நான் சூடான காப்பி , ஐஸ் கிரீம் ரெண்டையும் இதிலே ஊத்தினேன். காப்பி ஜில்லுனு ஆச்சு; ஐஸ் கரைஞ்சே போச்சு.
1.ஓற்றன் ; மன்னா! எதிரி நாட்டு மன்னன் நம் நாட்டின் மீது வேகமாக படை எடுத்து வருகிறான்
மன்னன் : அப்படியா, பாதையில் சைபால் களிம்பை தடவச்சொல்லு .சறுக்கி விழுந்து சாகட்டும்.
2. ரவி : கோபு ! ஆப்பரேஷன் ரூம் வரை போய்ட்டு ஒடி வந்துட்டியே.ஏன்?
கோபு : நர்ஸ் சொன்னா “ஆப்பரேஷன் ரொம்ப சிம்பிள். பயப்பட வேண்டாம்”னு.
ரவி : அப்ப ஏண்டா ஓடி வந்துட்டே?
கோபு :நர்ஸ் என் கிட்ட சொல்லலை. அவ டாக்டர் கிட்டன்னா சொன்னாள் .அதான்.
3 மணி : என் மனைவி எந்த சப்ஜக்ட் கொடுத்தாலும் அதைப்பத்தி அரை மணி நேரம் பேசுவாள்.
குரு: இது என்ன பிரமாதம்? சப்ஜெக்டே இல்லாம என் மனைவி மணிக் கணக்கிலே பேசுவாளே.
4.ஆசிரியர் ? பாலா, எட்டை ரெண்டாலே வகுத்தால் எவ்வளவு வரும்?
பாலா : செங்குத்தா வகுத்தா 3 வரும். கிடைமட்டமா வகுத்தா பூஜ்யம் வரும்/
--------------------------------------------------------------------------------------------
5 வியாபாரி : இது விசித்திரமான கிளி ! வலது காலில் கட்டி இருக்கும் நூலை இழுத்தா ஆங்கிலம் பேசும். இடது காலின் நூலை இழுத்தா ஜப்பான் மொழி பேசும்.
சங்கர் : ரெண்டு நூலையும் இழுத்தா..?
கிளி : முட்டாளே ! நான் விழுந்துடுவேன். (தமிழில் பேசியது)
--------------------------------------------------------------------------------------------------
6 ரகு : கலர் பிலிம் போட்டு போட்டோ எடுத்தும் பிளாக் அண்ட் ஒயிட் படம் தான் கிடைச்சது.
ரவி ;ஏன் அப்படி?
ரகு ; நான் போட்டோ எடுத்தது வரிக்குதிரையின் க்ளோஸ் அப் ஆச்சே.
----------------------------------------------------------------------------------------------------------------
7 கோபு ; இந்த மிருகத்தை விட நீ வேகமா ஒடினாலும் இதை உன்னாலே கையாலே பிடிக்க முடியாது
எந்த மிருகம் சொல்லு.
மணி . தெரியலை. நீயே சொல்லு.
கோபு முள்ளம்பன்றி டா,
8 ரகு: ஒரு பறவையை மரக்கூண்டில் அடைத்து வச்சேன் ஆனாலும் அது தப்பிச்சுடுத்து.
ரவி : எப்படி தப்பிச்சது?
ரகு : அது மரங்கொத்திப்பறவை ஆச்சே.
9 அமைச்சர் . (பேரக்குழந்தையிடம்) நீ ஸ்கூலுக்கு எந்த வண்டியிலே போக ஆசைப்படறே?
நான் காரா ஜீப்பா ஸ்கூட்டரா சொல்லு. எதுவானாலும் ஏற்பாடு பண்றேன்.?
பேரன்: தாத்தா! எனக்கு ரோட் இஞ்சினிலே தான் போகணும் அப்ப தான் ஸ்கூல் முடியற நேரம் போய் சேரும். வரப்ப காரில் வந்துடறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
10 பையன்: அப்பா! இந்த பிளாஸ்க்கினாலே என்ன பிரயோஜனம்?
அப்பா : இது சூடான பொருளை சூடாகவும் குளிர்ச்சியான பொருளை குளிர்ச்சியாகவும்
வச்சிருக்கும்.
பையன் ; இல்லையே, நேற்று நான் சூடான காப்பி , ஐஸ் கிரீம் ரெண்டையும் இதிலே ஊத்தினேன். காப்பி ஜில்லுனு ஆச்சு; ஐஸ் கரைஞ்சே போச்சு.