View Full Version : ஆண்டவன் பேரால்...!
குணமதி
20-03-2010, 05:10 PM
ஆண்டவன் பேரால்...!
கட்டத் துணியின்றிப் பல்லாயிரவர்
கந்தல் உடையோடு!
உண்ண உணவின்றி உலகில் உழல்வோர்
உள்ளனர் பல இலக்கம்!
வேள்வி நெருப்பில் -
பட்டுப் புடைவையும்
பல்வேறு உணவுப் பொருள்களும்
போட்டுப் பொசுக்கம்!
ஆண்டவன் பேரால்...
அறமிலாச் செயல்!
பா.ராஜேஷ்
20-03-2010, 05:37 PM
உண்மைதான். ஆண்டவன் பெயர் சொல்லி அவற்றை இல்லாதவர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது. நியாயமான கேள்விதான் ... பாராட்டுகள்
அமரன்
20-03-2010, 10:22 PM
விடுங்க பாஸ்.
பழசுகள் புதுசாகத் தெரியும் ஒரு குமுகம் கூட இருக்கும் போது போகி கொண்டாடுறோமே.. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆகுதியில் சேர்பவை தம்மாத்துண்டு.
இந்த மாதிரியானவர்களால்தான்
அகராதிகளில் இடம் பிடிக்கிறது
விரயம்.
நல்லடி.
பாராட்டு.
குணமதி
21-03-2010, 01:29 AM
உண்மைதான். ஆண்டவன் பெயர் சொல்லி அவற்றை இல்லாதவர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது. நியாயமான கேள்விதான் ... பாராட்டுகள்
நன்றி.
குணமதி
21-03-2010, 01:29 AM
நன்றி அமரன்.
கலையரசி
21-03-2010, 05:37 AM
குடம் குடமாகப் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யும் பக்தர்கள் ஒரு டம்ளர் பாலை அழுகின்ற பச்சைக்குழந்தைக்குக் கொடுக்க மாட்டார்கள். அதனால் தான் தந்தை பெரியார் சொன்னார்:-
கடவுளை மற, மனிதனை நினை.
நல்ல கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டு.
சிவா.ஜி
21-03-2010, 06:29 AM
யாராலும் திருத்தமுடியாது. ஆண்டவனைக் கைக்கூலி வாங்கிக்கொண்டு, தங்கள் எல்லா செயல்களுக்கும் துணை நிற்கும் பார்ட்னராக நினைக்கும் மக்கள் இருக்கும்வரை இது நடந்துகொண்டுதானிருக்கும்.
வாழ்த்துக்கள்.
குணமதி
21-03-2010, 12:06 PM
சிறப்பான பின்னூட்ட மிட்டுள்ளீர்கள் கலையரசி!
பாராட்டும் நன்றியும்.
குணமதி
21-03-2010, 12:06 PM
நன்றி சிவா.
உமாமீனா
15-02-2011, 05:51 AM
நெத்தி பொட்டில் ஆணி அடித்தமைக்கு வாழ்த்துக்கள்