PDA

View Full Version : எங்கே என் இன்பம்



சரோசா
19-03-2010, 02:24 PM
கவலை என் நிழல்
சோகம் என் இல்லம்
பிரிவு என் சொந்தம்
காதல் என் கானல் நீர்
எங்கே என் இன்பம் :traurig001:

Ravee
19-03-2010, 02:36 PM
கவலை என் நிழல்
சோகம் என் இல்லம்
பிரிவு என் சொந்தம்
காதல் என் கானல் நீர்
எங்கே என் இன்பம் :traurig001:

ஆஹா ஏன் இந்த சோகம்..... வருத்தம் வேணாமே ... :rolleyes:

govindh
19-03-2010, 02:39 PM
சோகம் என் இல்லம்
வருத்தமிகு வார்த்தைகள்...
தொடர்ந்து எழுதுங்கள்...அசத்துங்கள்...

சரோசா
19-03-2010, 02:55 PM
வெறும் கற்பனை தான் ரவி. நன்றி ரவி

சரோசா
19-03-2010, 02:56 PM
நன்றி கோவிந்த்

சிவா.ஜி
19-03-2010, 03:11 PM
ஆஹா ஏன் இந்த சோகம்..... வருத்தம் வேணாமே ... ... :rolleyes:

ரவி, தயவுசெய்து எழுத்தை எழுத்தாளருடன் பொருத்திப்பார்க்காதீர்கள்?

கற்பனைக் கவிதையை....கற்பனை என்ற அளவில் ரசித்தால் நன்றாக இருக்கும்.

ஆதி
19-03-2010, 03:12 PM
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம் *
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்

கவியரசர் வரிகள் ஞாபகம் வருகின்றன சரோச அவர்களே..

Ravee
19-03-2010, 03:27 PM
ரவி, தயவுசெய்து எழுத்தை எழுத்தாளருடன் பொருத்திப்பார்க்காதீர்கள்?

கற்பனைக் கவிதையை....கற்பனை என்ற அளவில் ரசித்தால் நன்றாக இருக்கும்.

ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை , சிறிய தவறு காயமாக காரணம் ஆகலாம் .

சிவா.ஜி
19-03-2010, 03:29 PM
புரிதலுக்கு மிக்க நன்றி ரவி. மிகவும் மகிழ்ச்சி.

Ravee
19-03-2010, 03:33 PM
புரிதலுக்கு மிக்க நன்றி ரவி. மிகவும் மகிழ்ச்சி.

என் பின்னூட்டத்தில் திருத்தி விட்டேன் , என் பின்னூட்டத்துக்கு இட்ட பின்னூட்டத்தை திருத்தி விடுங்கள் சிவா

குணமதி
19-03-2010, 04:44 PM
நெஞ்சை உருக்கும் துயரம்.

அமரன்
19-03-2010, 11:44 PM
கவலை என் நிழல்
சோகம் என் இல்லம்
பிரிவு என் சொந்தம்
காதல் என் கானல் நீர்
எங்கே என் இன்பம் :traurig001:


துன்பம் நிழல் எனில்
இன்பம் நிஜம்.


நிஜமின்றி நிழலேது...?

தொடருங்கள்..

வாழ்த்துகள்..

muthuvel
20-03-2010, 03:04 AM
கவலை என் நிழல்
சோகம் என் இல்லம்
பிரிவு என் சொந்தம்
காதல் என் கானல் நீர்
எங்கே என் இன்பம் :traurig001:



கவலை என் சவால்,
சோகம் என் எதிர் நீச்சல்,
பிரிவு என் சோதனை ,
காதல் என் கனவு,
எங்கே என் இன்பம் ,அது கிடைத்தது என் மனதில்

பா.ராஜேஷ்
20-03-2010, 04:17 PM
நன்று சரோசா. பாராட்டுக்கள்

சரோசா
22-03-2010, 07:06 PM
பாராட்டுக்கள் கூறிய இனிய உறவுகளுக்கு நன்றிகள் நன்றிகள்

இனியவள்
22-03-2010, 07:43 PM
கவலை எதற்க்காக
கண்ணீரும் எதற்காக
பிரிவை நினைத்து
சோகத்தை தழுவாதே
உன்னைச் சுற்றிப்
புதைந்த்திருக்கிறது
சந்தோஷப் புன்னகை
உன் நம்பிக்கை கொண்டு
தேடி அணைத்திடு
இன்பம் பிறந்த்திடும்
பின்னாளில்

கற்பனையில் பிறந்திட்ட அழகிய கவி இது
வாழ்த்துக்கள் நண்பரே

சரோசா
22-03-2010, 08:34 PM
அழகிய இனியவளே ,வாழ்த்துக்கள் எல்லாம்
அசத்தல்.நன்றிகள் பல