sudakar88
18-03-2010, 05:52 PM
போக்குவரத்து காவலர் கதிரவன் சாலையில் வருத்தம் கலந்த ஆத்திரத்தோடு நின்று கொண்டு இருந்தார். இருக்காதா பின்னே? கடந்த 3 மணி நேரமாக ஒரு வாகனம் கூட உரிமம் இல்லாமல் மாட்டவில்லை. தொலைவில் தெரிந்த வாகனத்தை பார்த்து அவர் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் தோன்றின. அந்த இரு சக்கர வாகனத்தில் மூவர் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் மதுவின் மயக்கத்தில் இருந்ததற்கு அடையாளமாக வண்டி சற்று தள்ளாடியவாறு வந்தது. அருகில் வந்த வண்டியை கதிரவன் நிறுத்தினார்.
"வண்டியில் மூவர் வருவது சட்டப்படி குற்றம். அதுவும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது குற்றம். சரி, உரிமம் மற்றும் மற்ற ஆவணங்களை எடுங்கள் " என்றார் கதிரவன்.
மன்னித்துவிடுங்கள். அவசரமாக வந்ததில் அவற்றை எடுக்க மறந்துவிட்டோம். என்றான் வண்டியை ஓட்டி வந்தவன்.
இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டி இருக்கும். மற்றும் சிறை தண்டனையும் கிடைக்கும். உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. எனவே 1000 ரூபாய் செலுத்துங்கள். கேஸ் எழுதாமல் விட்டுவிடுகிறேன்.
அந்த வாலிபர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என பணம் கொடுத்துவிட்டு ஓடினர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கதிரவனின் செல்போன் அடித்தது. செல்போனை எடுத்துப் பேசினார்.
...............
எப்போது?
...............
எந்த மருத்துவமனையில்?
................
உடனே வருகிறேன்.
கதிரவன் வண்டியில் கிளம்பினார். வண்டி நேராக கங்கா மருத்துவமனைக்குச் சென்றது. ஒரு புயலின் வேகத்தோடு மருத்துவமனைக்குள் நுழைந்தார். உள்ளே வரவேற்பறையில் விசாரித்த பின் ஒரு அறையில் நுழைத்தார். அங்கே படுக்கையில் அவரது மூன்று வயது மகன் கையில் கட்டோடு படுத்திருந்தான். அருகே அவர் மனைவி அழுகையோடு தெரிந்தார்.
இப்போது எப்படி உள்ளது?
பரவாயில்லை. மருத்துவர் இப்போதுதான் பார்த்துவிட்டு சென்றார். கையில் எலும்பு விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறினார்.
எப்படி ஏற்பட்டது?
சாலை ஓரத்தில் நின்றிந்தோம். போதையில் இருந்த ஒரு கயவன் வண்டியில் வந்து மோதிவிட்டான்.
கதிரவனுக்கு தான் லஞ்சம் வாங்க கை நீட்டியது நினைவுக்கு வந்தது.
"வண்டியில் மூவர் வருவது சட்டப்படி குற்றம். அதுவும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது குற்றம். சரி, உரிமம் மற்றும் மற்ற ஆவணங்களை எடுங்கள் " என்றார் கதிரவன்.
மன்னித்துவிடுங்கள். அவசரமாக வந்ததில் அவற்றை எடுக்க மறந்துவிட்டோம். என்றான் வண்டியை ஓட்டி வந்தவன்.
இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டி இருக்கும். மற்றும் சிறை தண்டனையும் கிடைக்கும். உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. எனவே 1000 ரூபாய் செலுத்துங்கள். கேஸ் எழுதாமல் விட்டுவிடுகிறேன்.
அந்த வாலிபர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என பணம் கொடுத்துவிட்டு ஓடினர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கதிரவனின் செல்போன் அடித்தது. செல்போனை எடுத்துப் பேசினார்.
...............
எப்போது?
...............
எந்த மருத்துவமனையில்?
................
உடனே வருகிறேன்.
கதிரவன் வண்டியில் கிளம்பினார். வண்டி நேராக கங்கா மருத்துவமனைக்குச் சென்றது. ஒரு புயலின் வேகத்தோடு மருத்துவமனைக்குள் நுழைந்தார். உள்ளே வரவேற்பறையில் விசாரித்த பின் ஒரு அறையில் நுழைத்தார். அங்கே படுக்கையில் அவரது மூன்று வயது மகன் கையில் கட்டோடு படுத்திருந்தான். அருகே அவர் மனைவி அழுகையோடு தெரிந்தார்.
இப்போது எப்படி உள்ளது?
பரவாயில்லை. மருத்துவர் இப்போதுதான் பார்த்துவிட்டு சென்றார். கையில் எலும்பு விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறினார்.
எப்படி ஏற்பட்டது?
சாலை ஓரத்தில் நின்றிந்தோம். போதையில் இருந்த ஒரு கயவன் வண்டியில் வந்து மோதிவிட்டான்.
கதிரவனுக்கு தான் லஞ்சம் வாங்க கை நீட்டியது நினைவுக்கு வந்தது.