Ravee
16-03-2010, 12:51 AM
என்று வரும் என் வசந்த காலம் .....
http://farm3.static.flickr.com/2316/2314391406_0871cac35d.jpg
அந்த குளிர் காலத்தின் துவக்கம்
மனம் கும்மாளம் இட்டுக்கொண்டு இருந்தது
காலை விடியல் சற்று தாமதமாய்
மாலை மங்கிய வெயில் மனதுக்கு இதமாய்
வலசைக்கு புறப்பட்ட பறவைகள் சத்தம்
வாசலில் சருகாய் பறந்து விழுந்த இலைகள்
குளிர்காலத்தின் இதமாய் வீசிய பனிக்காற்று
மயக்கம் தந்த மங்கிய அந்த சாலை விளக்கு
வண்ண வண்ண வீடுகளின் கூரைகள் மேலே
எங்கிருந்தோ விழுந்த வெண் பனித்துகள்கள்
மெல்லிய பல அடுக்காய் பனிப்பொழிவு
பல வண்ணங்களின் அழகுக்கு அழகாய்
குழந்தைகள் அனைவரும் குதுகலமாய்
கூடிக்களித்தது கும்மாளம் இட்டே
நடக்கும் விபரீதத்தின் விளைவுகள் அறியாமல்
வியந்து நின்றது எங்கள் உள்ளம்
விளைவுகளை முழுதாய் கண்ட போது
இங்கே வெறுமையை தவிர வேறில்லை
வண்ண வண்ண வீடுகள் இல்லை
வாசலில் நின்ற மரத்தில் இலைகள் இல்லை
கூக்குரல் இட்ட பறவைகள் இல்லை
கும்மாளம் போட்ட குழந்தைகள் இல்லை
சலசலக்கும் நதிகள் இல்லை
சந்தித்து பேச ஒருவர் இல்லை
சாலைகள் முழுதும் வெறிச்சோடி
குவியல் குவியலாய் வெண் பனி
எங்கும் எதிலும் வெண்மை நிறமே
கற்பனைக்கு வறட்சி..... வண்ணமில்லா வறட்சி
வாருங்கள் வாருங்கள் ... கூச்சலிட்டு பார்த்தாலும்
சாலையில் நான் மட்டும் தனியாய்
பதில் குரல் இல்லை , பதில் குரலே இல்லை
வீட்டுக்குள் மனதை பூட்டிக்கொண்ட மனிதர்கள்
உறைபனிகாலத்தில் என் உள்ளம் உறைந்தது
என்று வரும் என் வசந்த காலம் .............:huh:
http://farm3.static.flickr.com/2316/2314391406_0871cac35d.jpg
அந்த குளிர் காலத்தின் துவக்கம்
மனம் கும்மாளம் இட்டுக்கொண்டு இருந்தது
காலை விடியல் சற்று தாமதமாய்
மாலை மங்கிய வெயில் மனதுக்கு இதமாய்
வலசைக்கு புறப்பட்ட பறவைகள் சத்தம்
வாசலில் சருகாய் பறந்து விழுந்த இலைகள்
குளிர்காலத்தின் இதமாய் வீசிய பனிக்காற்று
மயக்கம் தந்த மங்கிய அந்த சாலை விளக்கு
வண்ண வண்ண வீடுகளின் கூரைகள் மேலே
எங்கிருந்தோ விழுந்த வெண் பனித்துகள்கள்
மெல்லிய பல அடுக்காய் பனிப்பொழிவு
பல வண்ணங்களின் அழகுக்கு அழகாய்
குழந்தைகள் அனைவரும் குதுகலமாய்
கூடிக்களித்தது கும்மாளம் இட்டே
நடக்கும் விபரீதத்தின் விளைவுகள் அறியாமல்
வியந்து நின்றது எங்கள் உள்ளம்
விளைவுகளை முழுதாய் கண்ட போது
இங்கே வெறுமையை தவிர வேறில்லை
வண்ண வண்ண வீடுகள் இல்லை
வாசலில் நின்ற மரத்தில் இலைகள் இல்லை
கூக்குரல் இட்ட பறவைகள் இல்லை
கும்மாளம் போட்ட குழந்தைகள் இல்லை
சலசலக்கும் நதிகள் இல்லை
சந்தித்து பேச ஒருவர் இல்லை
சாலைகள் முழுதும் வெறிச்சோடி
குவியல் குவியலாய் வெண் பனி
எங்கும் எதிலும் வெண்மை நிறமே
கற்பனைக்கு வறட்சி..... வண்ணமில்லா வறட்சி
வாருங்கள் வாருங்கள் ... கூச்சலிட்டு பார்த்தாலும்
சாலையில் நான் மட்டும் தனியாய்
பதில் குரல் இல்லை , பதில் குரலே இல்லை
வீட்டுக்குள் மனதை பூட்டிக்கொண்ட மனிதர்கள்
உறைபனிகாலத்தில் என் உள்ளம் உறைந்தது
என்று வரும் என் வசந்த காலம் .............:huh: