aren
12-03-2010, 08:00 AM
மரிக்கொழுந்து!!!
மாலை ஐந்தாகிவிட்டது இன்னும் கனகா வரவில்லையே என்று சரசா கவலைப்பட்டாள். இப்போ வந்தாதான் ராவு எட்டு மணிக்குள் இருக்கிற பூவையெல்லாம் வித்துவிடலாம், அப்படி இல்லையென்றால் நேரமாகிவிடும், பூவை விக்கமுடியாது என்று சரசா நினைத்தாள்.
சரசாவும் கனகாவும் அடுத்தடுத்தே உட்கார்ந்து அந்த மாரியம்மன் கோவில் வாசலிலே பூ விற்பவர்கள். இருவரும் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பூ வித்தபிறகு இருவரும் ஒத்தையடிப் பாதை வழியாகவே ஊர் போய் சேரவேண்டும், சரசாவுக்கும் கனகாவுக்கு தனியாக அந்த வழியே ராத்திரியில் போக பயம், ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து பேசிக்கொண்டே போனால் அவ்வளவு பயமாக இருக்காது, அதனாலே இருவரும் ஒன்றாகவே போவார்கள். கனகா இன்னிக்கு வரலைன்னா தனியா தான் எப்படி போவது என்று இன்னும் கவலைப்பட்டாள் சரசா.
அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே மரிக்கொழுந்து கூடையைத் தூக்கிக்கொண்டு அங்கே வந்தாள்.
மரிக்கொழுந்து கனகாவின் மகள். பத்தாம் வகுப்பு முடிச்சவுடன் கனகா அவளோட படிப்பை நிறுத்திட்டு யார் கையிலாவது பிடித்துக் கொடுத்துவிட்டால் தமக்கு நிம்மதி என்று நினைத்திருந்தாள், ஆனால் அவளோட போறாத வேளை மரிக்கொழுந்து நன்றாக படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள், வெறுமனே தேர்ச்சி பெறவில்லை, அந்தப் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்தாள். அதனால் அவளுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்த டீச்சர்கள் அனைவரும் அவள் பிளஸ் டூ படித்துவிட்டு பின் டிகிரி படிக்க வேண்டும் என்று கனகாவை வற்புறுத்தி மரிக்கொழுந்தை பிளஸ் டூவில் சேர்த்துவிட்டார்கள். இப்போ இருக்கும் கஷ்டத்திலும் கனகா இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு மரிக்கொழுந்தை படிக்க வைத்துக்கொண்டிருந்தாள்.
மரிக்கொழுந்து கூடையைத் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்து சரசா அவளிடம், கனகாக்கா எங்கே என்றாள்.
அம்மாவுக்கு தலைவலி, எழுந்துக்கவே முடியாம படுத்திருக்குது, நான் ஸ்கூல் விட்டு நாலு மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ, பூ வீட்டு வாசலில் கட்டப்படாமல் அப்படியே இருந்தது, வீட்டுக்குள் போய் பாத்தா, அம்மா தலைவலியைத் தாங்கமுடியாமல் அப்படியே படுத்திருந்தது. பூ வாசலிலே கட்டாமலே இருக்குதே என்றேன் அம்மாவை எழுப்பி, சுப்ரமணி பூவை வாசல்லேயே வச்சுட்டுப் போய்ட்டாணா, நான் உள்ளே இருந்தது அவனுக்குத் தெரிந்திருக்காது, நான் வீட்டில் இல்லே என்று நினைத்து அங்கேயே வைச்சுட்டுப் போய்ட்டான் போலிருக்கு என்றாள் அம்மா தலையைத் தடவிக்கொண்டே.
எப்படி சுப்ரமணி பணம் வாங்காமல் பூ கொடுத்தான் என்று கேட்டாள் சரசா.
ஆமாக்கா, சுப்ரமணி முதல் நாள் கொடுத்த பூவுக்கு பணம் கொடுக்கலைன்னா மறுநாள் பூ கொடுக்கமாட்டான், ஆனால் எப்போதும் பணம் தயாராக வைத்துக்கொண்டு நின்றிருக்கும் அம்மா இன்னிக்கு காணலியே, எங்கேயாவது போயிருப்பாள் நாளைக்கு வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து இன்றைக்குக் கொடுக்கவேண்டிய பூவை வீட்டு வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டான்னு நினைக்கிறேன்.
பூ கட்டாம கிடக்குதே, பூவை கட்டலைன்னா, பூத்திடும், நீ படுத்துக்கோ, நான் இதை கவனிக்கிறேன் என்று சொல்லிவிட்டு நானே உட்கார்ந்து பூவை கட்டினேன் என்றாள் மரிக்கொழுந்து சரசாவிடம்.
சரி சரி, அங்கே உன் கடையைப் போடு, எப்படியாவது இருட்டறதுக்குள் பூவை வித்துடனும் என்று சொன்னாள் சரசா.
கனகாவும் சரசாவும் ஒன்றாகவே இங்கே பூ விக்க ஆரம்பித்தார்கள் ஒரு இருபது வருஷத்துக்கு முன்பு. அதுக்கு முன்னால கனகாவின் அம்மா கிருஷ்ணவேணிதான் இங்கே பூ வித்துக்கொண்டிருப்பாள். சில சமயங்களில் அம்மாவுக்குத் துணையாக கனகாவும் இங்கே வந்து பூ விப்பாள். அப்பொழுதுதான் இங்கே எலக்ரிகல் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்யும் மாரிப்பனிடம் தன் மனதைப் பறி கொடுத்தாள். கிருஷ்ணவேணியும் தன் பொண்ணு ஆசைப்பட்டுட்டாளேன்னு அவனுக்கே கட்டிக் கொடுத்துவிட்டாள்.
கல்யாணமான புதிதில் மாரி ரொம்ப நல்லவனாகவே இருந்தான். காண்டிராக்ட் எடுத்து கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கனகாவிடம் கொடுத்து வீட்டு செலவுக்கு வைத்துக்கொள்ளச் சொல்லுவான். அந்த நல்ல சமயத்தில் பிறந்தவதான் இந்த மரிக்கொழுந்து. மரிக்கொழுந்து வாசனை கனகாவிக்கு ரொம்பவும் பிடிக்கும், அதனாலே தன் பொண்ணுக்கு மரிக்கொழுந்து என்றே பெயர் வைக்கவேண்டும் என்று ஒத்தக்காலில் நின்று அந்தப் பெயரையே வைத்துவிட்டாள்.
மரிக்கொழுந்து பிறந்த சமயத்தில் கனகா அவ்வளவாக மாரியின் தேவைகளை கவனிக்கமுடியவில்லை, ஆனால் மாரியும் நல்ல மாதிரியாக நடந்துகொண்டான். என்னவோ தெரியவில்லை, ஒரு நாள் காத்தால கூட வேலை செய்யும் ஒருத்தியுடன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். எங்கே இந்த மாரியைக் காணவில்லை என்று கிருஷ்ணவேணியும் எல்லா இடத்திலேயும் தேடினாள். ரெண்டு நாள் கழித்து மாரிக்கு உதவி செய்யும் சேகரைப் பார்த்து அவனைப் பிடித்து எங்கேடா மாரி என்று கேட்டபோது அவன் இடியுடன் ஒரு விஷயத்தைச் சொன்னான். அவன் கூட வேலை செய்யும் மல்லிகா என்ற பொண்ணை கூட்டிக்கொண்டு மெட்ராஸ் ஓடிட்டான் என்று தெரிந்தது.
பிறகு சேகரை இன்னும் கொஞ்சம் அடிச்சபோது அவன் சொன்னான், மல்லிகாவுக்கும் மாரிக்கும் ஒரு வருஷமாவே தொடர்பு இருந்ததாகவும், அது முத்தி, இப்போ ஒடிட்டாங்க என்றும் தெரிந்தது.
இந்த விஷயம் தெரிந்தபோது கனகா, சரி போனது போய்ட்டான், அவளையாவது நல்லா வெச்சுக்கட்டும் என்று சொல்லிவிட்டு தன் பூ விற்கும் வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
பூ என்ன விலைம்மா என்ற கேள்வியைக் கேட்டவுடன் சகஜ நிலைக்கு வந்தாள் சரசா.
கேட்டவருக்கு பூ கொடுத்துவிட்டு மரிக்கொழுந்தைப் பார்த்தாள். தளதளவென்று தங்க விக்ரகம் மாதிரி வளர்ந்திருந்தாள் மரிக்கொழுந்து. அவ பூப்பெய்தலிலிருந்து அவளை பூ விக்க வரவிடுவதில்லை கனகா, அவளுக்கு நேர்ந்தது மாதிரி தன் மகளுக்கு ஆயிடக்கூடாது என்பதாலும் இருக்கலாம், அல்லது நல்லா படிக்கிறாளே, படிக்கட்டும் என்று நினைத்து இங்கே அனுப்புவதில்லையோ என்னவோ, இங்கே அவ்வளவாக வருவதில்லை, அதனால் ரொம்ப நாள் கழிச்சு சரளா மரிக்கொழுந்துவைப் பார்த்ததில் இவளுடைய அழகு இப்போதுதான் இவளுக்குத் தெரிந்தது.
ஆனால் அந்த அழகை மறைக்க சரியான ஆடையில்லை என்பதையும் கவனித்தாள் சரசா. மரிக்கொழுந்து போட்டிருந்த ரவிக்கை கொஞ்சம் கிழிந்து அவள் உள்ளழகு கொஞ்சம் வெளியே தெரிந்தது. அதை மறைக்க தாவணியை கொஞ்சம் இழுத்துவிட்டிருந்தாள். ஆனால் தாவணியும் ஒரிரு இடத்தில் கிழிந்திருந்தது தெரிந்தது. படிக்கிற பொண்ணு, பாவம் என்று நினைத்தாள் சரசா.
மரிக்கொழுந்து அங்கே போகிற வருபவர்களைப் பார்த்து பூ வாங்கிக்கோங்க என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கேட்டபிறகும் ஒரு சிலர் தலையை அந்தப் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு போனார்கள், ஒரு சிலர் இவள் பக்கம் திரும்பி, வேண்டாம்மா என்று பதில் சொல்லிவிட்டுப் போனார்கள், ஒரு சிலர் இவள் கேட்டதற்கு மதிப்பு கொடுத்து இவளிடம் பூ வாங்கினார்கள்.
சரசா அனைத்து பூவையும் விற்றுவிட்டாள், மரிக்கொழுந்துவிடமும் இன்னும் ஒரு சில முழம் பூக்களே இருந்தன. அதையும் எப்படியாவது விற்றுவிடவேண்டும் என்று மரிக்கொழுந்து அனைவரையும் கேட்டாள்.
அப்போ, ஒரு மைனர் மாதிரி இருந்தவன் பல்லை இளித்துக்கொண்டே மரிக்கொழுந்துவிடம் வந்தான்.
என்ன பூ நல்லாயிருகியே என்று மரிக்கொழுந்துவைப் பார்த்து நேரடியாகவேச் சொன்னான்.
ஆனால் மரிக்கொழுந்து அவன் பேசியதைச் சட்டைச் செய்யாமல், அண்ணே பூ வாங்கிக்கோங்க அண்ணே, வீட்டில் இருக்கும் அண்ணிக்கு பூ வாங்கிட்டுப் போங்க அண்ணே என்றாள்.
வந்தவன் மரிக்கொழுந்து சொன்ன அண்ணன் என்ற வார்த்தையைச் சட்டை செய்யாமல், இவளைப் பார்த்து பல்லை இளித்துக்கொண்டே, இவள் கையில் வைத்திருந்த பூவைக் காண்பித்து, எனக்கு இந்தப் பூ வேணாம், ஆனா எனக்கு இந்தப் பூ தான் வேணும் என்று சொல்லிக்கொண்டே மரிக்கொழுந்து கையைப் பிடித்தான்.
அதுவரை பூ விக்க வேண்டும் என்று பொறுத்துக்கொண்டிருந்த மரிக்கொழுந்து, அவள் கையை அவனிடமிருந்து இழுத்துவிட்டு பின் தன் கையை ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டுவிட்டு, தன்னிடம் மீதமிருந்த பூவை அவன் முகத்தில் வீசிவிட்டு, நீயெல்லாம் ஒரு ஆம்பளைன்னு நினைச்சுட்டு பொம்பளைக் கையைப் பிடிச்சு இழுக்கிறயே தூ என்று அவன் முகத்தில் காரி துப்பிவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு, சரசக்கா வா நாம போகலாம் என்று அங்கிருந்து விருவிருவென்று நடந்தாள்.
வாங்கிய அடியும் முகத்தில் விழுந்த எச்சிலையையும் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே சிலைமாதிரி நின்றுவிட்டான் அந்த மைனர்.
விடுவிடுவென நடந்துபோய்க் கொண்டிருந்த மரிக்கொழுந்துவைப் பின் தொடர்ந்து சரசா பின்னாலே வேகமாக நடந்தாள்.
போட்டிருந்த துணி கிழிந்திருந்தாலும் மரிக்கொழுந்துவின் திடமான மன நிலையை நினைத்து பெருமிதம் அடைந்த சரசா, மரிக்கொழுந்துவின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவள் பின்னால் சந்தோஷத்துடன் நடந்தாள் சரசா.
மாலை ஐந்தாகிவிட்டது இன்னும் கனகா வரவில்லையே என்று சரசா கவலைப்பட்டாள். இப்போ வந்தாதான் ராவு எட்டு மணிக்குள் இருக்கிற பூவையெல்லாம் வித்துவிடலாம், அப்படி இல்லையென்றால் நேரமாகிவிடும், பூவை விக்கமுடியாது என்று சரசா நினைத்தாள்.
சரசாவும் கனகாவும் அடுத்தடுத்தே உட்கார்ந்து அந்த மாரியம்மன் கோவில் வாசலிலே பூ விற்பவர்கள். இருவரும் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பூ வித்தபிறகு இருவரும் ஒத்தையடிப் பாதை வழியாகவே ஊர் போய் சேரவேண்டும், சரசாவுக்கும் கனகாவுக்கு தனியாக அந்த வழியே ராத்திரியில் போக பயம், ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து பேசிக்கொண்டே போனால் அவ்வளவு பயமாக இருக்காது, அதனாலே இருவரும் ஒன்றாகவே போவார்கள். கனகா இன்னிக்கு வரலைன்னா தனியா தான் எப்படி போவது என்று இன்னும் கவலைப்பட்டாள் சரசா.
அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே மரிக்கொழுந்து கூடையைத் தூக்கிக்கொண்டு அங்கே வந்தாள்.
மரிக்கொழுந்து கனகாவின் மகள். பத்தாம் வகுப்பு முடிச்சவுடன் கனகா அவளோட படிப்பை நிறுத்திட்டு யார் கையிலாவது பிடித்துக் கொடுத்துவிட்டால் தமக்கு நிம்மதி என்று நினைத்திருந்தாள், ஆனால் அவளோட போறாத வேளை மரிக்கொழுந்து நன்றாக படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள், வெறுமனே தேர்ச்சி பெறவில்லை, அந்தப் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்தாள். அதனால் அவளுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்த டீச்சர்கள் அனைவரும் அவள் பிளஸ் டூ படித்துவிட்டு பின் டிகிரி படிக்க வேண்டும் என்று கனகாவை வற்புறுத்தி மரிக்கொழுந்தை பிளஸ் டூவில் சேர்த்துவிட்டார்கள். இப்போ இருக்கும் கஷ்டத்திலும் கனகா இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு மரிக்கொழுந்தை படிக்க வைத்துக்கொண்டிருந்தாள்.
மரிக்கொழுந்து கூடையைத் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்து சரசா அவளிடம், கனகாக்கா எங்கே என்றாள்.
அம்மாவுக்கு தலைவலி, எழுந்துக்கவே முடியாம படுத்திருக்குது, நான் ஸ்கூல் விட்டு நாலு மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ, பூ வீட்டு வாசலில் கட்டப்படாமல் அப்படியே இருந்தது, வீட்டுக்குள் போய் பாத்தா, அம்மா தலைவலியைத் தாங்கமுடியாமல் அப்படியே படுத்திருந்தது. பூ வாசலிலே கட்டாமலே இருக்குதே என்றேன் அம்மாவை எழுப்பி, சுப்ரமணி பூவை வாசல்லேயே வச்சுட்டுப் போய்ட்டாணா, நான் உள்ளே இருந்தது அவனுக்குத் தெரிந்திருக்காது, நான் வீட்டில் இல்லே என்று நினைத்து அங்கேயே வைச்சுட்டுப் போய்ட்டான் போலிருக்கு என்றாள் அம்மா தலையைத் தடவிக்கொண்டே.
எப்படி சுப்ரமணி பணம் வாங்காமல் பூ கொடுத்தான் என்று கேட்டாள் சரசா.
ஆமாக்கா, சுப்ரமணி முதல் நாள் கொடுத்த பூவுக்கு பணம் கொடுக்கலைன்னா மறுநாள் பூ கொடுக்கமாட்டான், ஆனால் எப்போதும் பணம் தயாராக வைத்துக்கொண்டு நின்றிருக்கும் அம்மா இன்னிக்கு காணலியே, எங்கேயாவது போயிருப்பாள் நாளைக்கு வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து இன்றைக்குக் கொடுக்கவேண்டிய பூவை வீட்டு வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டான்னு நினைக்கிறேன்.
பூ கட்டாம கிடக்குதே, பூவை கட்டலைன்னா, பூத்திடும், நீ படுத்துக்கோ, நான் இதை கவனிக்கிறேன் என்று சொல்லிவிட்டு நானே உட்கார்ந்து பூவை கட்டினேன் என்றாள் மரிக்கொழுந்து சரசாவிடம்.
சரி சரி, அங்கே உன் கடையைப் போடு, எப்படியாவது இருட்டறதுக்குள் பூவை வித்துடனும் என்று சொன்னாள் சரசா.
கனகாவும் சரசாவும் ஒன்றாகவே இங்கே பூ விக்க ஆரம்பித்தார்கள் ஒரு இருபது வருஷத்துக்கு முன்பு. அதுக்கு முன்னால கனகாவின் அம்மா கிருஷ்ணவேணிதான் இங்கே பூ வித்துக்கொண்டிருப்பாள். சில சமயங்களில் அம்மாவுக்குத் துணையாக கனகாவும் இங்கே வந்து பூ விப்பாள். அப்பொழுதுதான் இங்கே எலக்ரிகல் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்யும் மாரிப்பனிடம் தன் மனதைப் பறி கொடுத்தாள். கிருஷ்ணவேணியும் தன் பொண்ணு ஆசைப்பட்டுட்டாளேன்னு அவனுக்கே கட்டிக் கொடுத்துவிட்டாள்.
கல்யாணமான புதிதில் மாரி ரொம்ப நல்லவனாகவே இருந்தான். காண்டிராக்ட் எடுத்து கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கனகாவிடம் கொடுத்து வீட்டு செலவுக்கு வைத்துக்கொள்ளச் சொல்லுவான். அந்த நல்ல சமயத்தில் பிறந்தவதான் இந்த மரிக்கொழுந்து. மரிக்கொழுந்து வாசனை கனகாவிக்கு ரொம்பவும் பிடிக்கும், அதனாலே தன் பொண்ணுக்கு மரிக்கொழுந்து என்றே பெயர் வைக்கவேண்டும் என்று ஒத்தக்காலில் நின்று அந்தப் பெயரையே வைத்துவிட்டாள்.
மரிக்கொழுந்து பிறந்த சமயத்தில் கனகா அவ்வளவாக மாரியின் தேவைகளை கவனிக்கமுடியவில்லை, ஆனால் மாரியும் நல்ல மாதிரியாக நடந்துகொண்டான். என்னவோ தெரியவில்லை, ஒரு நாள் காத்தால கூட வேலை செய்யும் ஒருத்தியுடன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். எங்கே இந்த மாரியைக் காணவில்லை என்று கிருஷ்ணவேணியும் எல்லா இடத்திலேயும் தேடினாள். ரெண்டு நாள் கழித்து மாரிக்கு உதவி செய்யும் சேகரைப் பார்த்து அவனைப் பிடித்து எங்கேடா மாரி என்று கேட்டபோது அவன் இடியுடன் ஒரு விஷயத்தைச் சொன்னான். அவன் கூட வேலை செய்யும் மல்லிகா என்ற பொண்ணை கூட்டிக்கொண்டு மெட்ராஸ் ஓடிட்டான் என்று தெரிந்தது.
பிறகு சேகரை இன்னும் கொஞ்சம் அடிச்சபோது அவன் சொன்னான், மல்லிகாவுக்கும் மாரிக்கும் ஒரு வருஷமாவே தொடர்பு இருந்ததாகவும், அது முத்தி, இப்போ ஒடிட்டாங்க என்றும் தெரிந்தது.
இந்த விஷயம் தெரிந்தபோது கனகா, சரி போனது போய்ட்டான், அவளையாவது நல்லா வெச்சுக்கட்டும் என்று சொல்லிவிட்டு தன் பூ விற்கும் வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
பூ என்ன விலைம்மா என்ற கேள்வியைக் கேட்டவுடன் சகஜ நிலைக்கு வந்தாள் சரசா.
கேட்டவருக்கு பூ கொடுத்துவிட்டு மரிக்கொழுந்தைப் பார்த்தாள். தளதளவென்று தங்க விக்ரகம் மாதிரி வளர்ந்திருந்தாள் மரிக்கொழுந்து. அவ பூப்பெய்தலிலிருந்து அவளை பூ விக்க வரவிடுவதில்லை கனகா, அவளுக்கு நேர்ந்தது மாதிரி தன் மகளுக்கு ஆயிடக்கூடாது என்பதாலும் இருக்கலாம், அல்லது நல்லா படிக்கிறாளே, படிக்கட்டும் என்று நினைத்து இங்கே அனுப்புவதில்லையோ என்னவோ, இங்கே அவ்வளவாக வருவதில்லை, அதனால் ரொம்ப நாள் கழிச்சு சரளா மரிக்கொழுந்துவைப் பார்த்ததில் இவளுடைய அழகு இப்போதுதான் இவளுக்குத் தெரிந்தது.
ஆனால் அந்த அழகை மறைக்க சரியான ஆடையில்லை என்பதையும் கவனித்தாள் சரசா. மரிக்கொழுந்து போட்டிருந்த ரவிக்கை கொஞ்சம் கிழிந்து அவள் உள்ளழகு கொஞ்சம் வெளியே தெரிந்தது. அதை மறைக்க தாவணியை கொஞ்சம் இழுத்துவிட்டிருந்தாள். ஆனால் தாவணியும் ஒரிரு இடத்தில் கிழிந்திருந்தது தெரிந்தது. படிக்கிற பொண்ணு, பாவம் என்று நினைத்தாள் சரசா.
மரிக்கொழுந்து அங்கே போகிற வருபவர்களைப் பார்த்து பூ வாங்கிக்கோங்க என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கேட்டபிறகும் ஒரு சிலர் தலையை அந்தப் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு போனார்கள், ஒரு சிலர் இவள் பக்கம் திரும்பி, வேண்டாம்மா என்று பதில் சொல்லிவிட்டுப் போனார்கள், ஒரு சிலர் இவள் கேட்டதற்கு மதிப்பு கொடுத்து இவளிடம் பூ வாங்கினார்கள்.
சரசா அனைத்து பூவையும் விற்றுவிட்டாள், மரிக்கொழுந்துவிடமும் இன்னும் ஒரு சில முழம் பூக்களே இருந்தன. அதையும் எப்படியாவது விற்றுவிடவேண்டும் என்று மரிக்கொழுந்து அனைவரையும் கேட்டாள்.
அப்போ, ஒரு மைனர் மாதிரி இருந்தவன் பல்லை இளித்துக்கொண்டே மரிக்கொழுந்துவிடம் வந்தான்.
என்ன பூ நல்லாயிருகியே என்று மரிக்கொழுந்துவைப் பார்த்து நேரடியாகவேச் சொன்னான்.
ஆனால் மரிக்கொழுந்து அவன் பேசியதைச் சட்டைச் செய்யாமல், அண்ணே பூ வாங்கிக்கோங்க அண்ணே, வீட்டில் இருக்கும் அண்ணிக்கு பூ வாங்கிட்டுப் போங்க அண்ணே என்றாள்.
வந்தவன் மரிக்கொழுந்து சொன்ன அண்ணன் என்ற வார்த்தையைச் சட்டை செய்யாமல், இவளைப் பார்த்து பல்லை இளித்துக்கொண்டே, இவள் கையில் வைத்திருந்த பூவைக் காண்பித்து, எனக்கு இந்தப் பூ வேணாம், ஆனா எனக்கு இந்தப் பூ தான் வேணும் என்று சொல்லிக்கொண்டே மரிக்கொழுந்து கையைப் பிடித்தான்.
அதுவரை பூ விக்க வேண்டும் என்று பொறுத்துக்கொண்டிருந்த மரிக்கொழுந்து, அவள் கையை அவனிடமிருந்து இழுத்துவிட்டு பின் தன் கையை ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டுவிட்டு, தன்னிடம் மீதமிருந்த பூவை அவன் முகத்தில் வீசிவிட்டு, நீயெல்லாம் ஒரு ஆம்பளைன்னு நினைச்சுட்டு பொம்பளைக் கையைப் பிடிச்சு இழுக்கிறயே தூ என்று அவன் முகத்தில் காரி துப்பிவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு, சரசக்கா வா நாம போகலாம் என்று அங்கிருந்து விருவிருவென்று நடந்தாள்.
வாங்கிய அடியும் முகத்தில் விழுந்த எச்சிலையையும் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே சிலைமாதிரி நின்றுவிட்டான் அந்த மைனர்.
விடுவிடுவென நடந்துபோய்க் கொண்டிருந்த மரிக்கொழுந்துவைப் பின் தொடர்ந்து சரசா பின்னாலே வேகமாக நடந்தாள்.
போட்டிருந்த துணி கிழிந்திருந்தாலும் மரிக்கொழுந்துவின் திடமான மன நிலையை நினைத்து பெருமிதம் அடைந்த சரசா, மரிக்கொழுந்துவின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவள் பின்னால் சந்தோஷத்துடன் நடந்தாள் சரசா.