குணமதி
11-03-2010, 03:52 PM
அதனால் குறையில்லை!
வீட்டில் உள்ள பூனைக்கு மூன்று நான்கு வீடுகளோடே இயக்கம் எல்லை கண்டு விடுகிறது.
அவைதாம் அந்தப் பூனையின் உலகு!
எங்கள் வீட்டில் மிச்சம் மீதி என ஏதோ போடுவதை
வந்து வாலைக் குழைத்துக் கொண்டு தின்றுவிட்டுப் போகும் நாயின் ஒட்டம் குரைப்பு உலாவல் எல்லாம்
இந்தப்பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு
மொத்தம் நான்கு தெருக்களே.
அதன் உலகு அந்நான்கு தெருக்களே!
எங்கள் கொல்லையில் காவலுக்கு இருக்கும் அழகையா அறிந்தவை எங்கள் சிற்றூரும் கொல்லைக்காடும் மட்டுமே!
அவர் உலகம் அந்தச் சிற்றூர், கொல்லைக்காடு, மூன்றுகல் தொலைவில் உள்ள மாரியம்மன் கோவிலுடன் முடிந்து விடுகிறது.
என் தாய்க்கு எங்கள் ஊர், அவருடைய பெற்றோர் வாழ்ந்த ஊர்,
சில கோவில்கள் உள்ள ஊர்,
சில சுற்றுலா செல்லும் ஊர்,
சென்னை - இவையே தெரியும்.
இவையே அவர் உலகம்!
என் தந்தை ஒரு குழுமத்தில் பணியாற்றினார்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றியிருக்கிறார்.
வட மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறார்.
அவர் இயங்கியிருந்த எல்லை
இந்தாயா முழுவதும் எனலாம்.
நான் படித்து வேலையில் சேரும் முன்
தமிழகத்தில் சில இடங்களையும்
சுற்றுலா சென்றதால்
வட இந்தியாவில் சில இடங்களையும் பார்த்திருக்கிறேன்.
வேலைக்குச் சென்றபின்
அரபு நாடுகள் ஐரோப்பா எனச் சுற்றி வருகிறேன்.
என் வீட்டுப் பூனையும்
எங்கள் தெரு நாயும்
எங்கள் கொல்லை அழகையாவும்
என்தாயும்
என் தந்தையும்
மகிழ்ந் திருந்ததைவிடவும்,
அவர்கள் மனம் பெற்றிருந்த நிறைவை டவும்,
அவர்கள் வாழ்க்கை பயன்பட்ட வகையை விடவும்
என் மகிழ்வும், மன நிறைவும், வாழ்வின் பயனும் மேம்பட்டது என்று என்னால் கூற முடிய வில்லை.
ஒருவர் பார்த்துப் பழகிய எல்லைக் குறைவால் பெருங் குறையேதுமில்லை என்பது உண்மையே!
வீட்டில் உள்ள பூனைக்கு மூன்று நான்கு வீடுகளோடே இயக்கம் எல்லை கண்டு விடுகிறது.
அவைதாம் அந்தப் பூனையின் உலகு!
எங்கள் வீட்டில் மிச்சம் மீதி என ஏதோ போடுவதை
வந்து வாலைக் குழைத்துக் கொண்டு தின்றுவிட்டுப் போகும் நாயின் ஒட்டம் குரைப்பு உலாவல் எல்லாம்
இந்தப்பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு
மொத்தம் நான்கு தெருக்களே.
அதன் உலகு அந்நான்கு தெருக்களே!
எங்கள் கொல்லையில் காவலுக்கு இருக்கும் அழகையா அறிந்தவை எங்கள் சிற்றூரும் கொல்லைக்காடும் மட்டுமே!
அவர் உலகம் அந்தச் சிற்றூர், கொல்லைக்காடு, மூன்றுகல் தொலைவில் உள்ள மாரியம்மன் கோவிலுடன் முடிந்து விடுகிறது.
என் தாய்க்கு எங்கள் ஊர், அவருடைய பெற்றோர் வாழ்ந்த ஊர்,
சில கோவில்கள் உள்ள ஊர்,
சில சுற்றுலா செல்லும் ஊர்,
சென்னை - இவையே தெரியும்.
இவையே அவர் உலகம்!
என் தந்தை ஒரு குழுமத்தில் பணியாற்றினார்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றியிருக்கிறார்.
வட மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறார்.
அவர் இயங்கியிருந்த எல்லை
இந்தாயா முழுவதும் எனலாம்.
நான் படித்து வேலையில் சேரும் முன்
தமிழகத்தில் சில இடங்களையும்
சுற்றுலா சென்றதால்
வட இந்தியாவில் சில இடங்களையும் பார்த்திருக்கிறேன்.
வேலைக்குச் சென்றபின்
அரபு நாடுகள் ஐரோப்பா எனச் சுற்றி வருகிறேன்.
என் வீட்டுப் பூனையும்
எங்கள் தெரு நாயும்
எங்கள் கொல்லை அழகையாவும்
என்தாயும்
என் தந்தையும்
மகிழ்ந் திருந்ததைவிடவும்,
அவர்கள் மனம் பெற்றிருந்த நிறைவை டவும்,
அவர்கள் வாழ்க்கை பயன்பட்ட வகையை விடவும்
என் மகிழ்வும், மன நிறைவும், வாழ்வின் பயனும் மேம்பட்டது என்று என்னால் கூற முடிய வில்லை.
ஒருவர் பார்த்துப் பழகிய எல்லைக் குறைவால் பெருங் குறையேதுமில்லை என்பது உண்மையே!