PDA

View Full Version : ஆக்கம்



simariba
09-03-2010, 12:31 AM
உன்னால்

ஒரு கண்டு நூல்
அழகிய பையானது

ஒரு கூடை பூ
அழகிய மாலையானது

உன் குழந்தை
சிறந்த அறிஞன் ஆனது

எல்லாம் சரி ஏன்
ஒரு சொல் கூட
கண்ணீராகிறது

அக்னி
09-03-2010, 07:05 AM
நா‘வில்’லிருந்து எய்யப்பட்டதாலோ...

சொல்ல வந்ததை இன்னமும் தெளிவாய்ச் சொல்லியிருக்கலாமோ...

பாராட்டுகின்றேன்.
தொடர்ந்தும் கவிகள் வரட்டும் உங்களிடமிருந்து...

govindh
09-03-2010, 07:36 AM
ஆவது பெண்ணால்...!
ஆக்கம்..தொடரட்டும்...!
வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
09-03-2010, 08:07 AM
ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்கும் அவளே...சொல்லிலிருந்துக் கண்ணீரை வரவழைக்கிறாள்...

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.

அமரன்
09-03-2010, 05:32 PM
உன்னால்

ஒரு கண்டு நூல்
அழகிய பையானது

ஒரு கூடை பூ
அழகிய மாலையானது

உன் குழந்தை
சிறந்த அறிஞன் ஆனது

எல்லாம் சரி ஏன்
ஒரு சொல் கூட
கண்ணீராகிறது

கல் நெஞ்சே!
கண்களை
சுத்தம் செய்யுமாம்
கண்ணீர்.....!

கல் நெஞ்சே...!
சுரக்கவில்லை உன்னிலிருந்து
நீர்.....!

அதனால்,
சொல் குத்திக் கழுவுகிறேன்
என் கண்களை..!

simariba
10-03-2010, 12:30 AM
என் குட்டிக் கவிதையை படித்து மறுமொழி கூறிய நண்பர்களுக்கு நன்றி. இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்.