PDA

View Full Version : நிஜம் தானா..?



govindh
05-03-2010, 03:55 PM
நிஜம் தானா..?
நித்தியானந்தா..!

நித்தமும் நீ
ஆனந்தம் தான்...!
நிழற்படம் உரைக்கின்றது..!

கதவைத் திற...
காற்று வரட்டும்..என
போதித்தாய்..!
களிப்பு வந்து நின்றது..!

உன் கதவை..
அடைத்து விட்டாய்..
காமம் வந்து கொன்றது..!

அருள்வாக்கில்..
அன்பர்களின்..கண்களை திறந்தாய்..!

இருள்வாக்கில்..
காமிரா கண்களை மூட மறந்தாய்..!

வீதிக்கு வந்து விட்டது..
விபரீத லீலைகள்..

நிஜம் தானா..?
நித்தியானந்தா..?

இன்பக்கவி
08-03-2010, 01:18 PM
நிஜம் தானா..?
நித்தியானந்தா..? :lachen001::lachen001::lachen001:

அவரை காணவில்லையாம்??:icon_ush::icon_ush::icon_ush:

அக்னி
08-03-2010, 01:25 PM
ஆசையை அடக்கத் தேவையில்லை.

ஆசையை அடக்கினாற்போல,
நடிக்காவிட்டால்,
இந்த அவஸ்தையில்லை...

பாராட்டு...

govindh
08-03-2010, 01:42 PM
மனிதன்...புனிதன்..எனக் காட்டிக் கொண்டதால் வந்த வேதனை..விபரீத ..விளைவுகள்...!

கலையரசி
08-03-2010, 01:55 PM
உபதேசம் ஊருக்கு மட்டும் தான் போலிருக்கிறது.

சிவா.ஜி
08-03-2010, 02:02 PM
எளிமையான வரிகளில் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் கோவிந்த்.

"கதவை அடைத்தாய்
காமம் வந்து கொன்றது"

உண்மைதான். புலனடக்கியவர் என பறைசாற்றியதால் வந்த வினை. இயல்பான ஒருவராய் இருந்திருந்தால், இருட்டில் நடந்ததற்கு இத்தனை முக்கியத்துவமிருந்திருக்காது.

பாராட்டுக்கள் கோவிந்த்.

ஜனகன்
08-03-2010, 02:35 PM
ராஜபாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் நித்யானந்தா, 10க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக ராஜபாளையம் டி.எஸ்.பி.யிடம் நற்பணி மன்றத் தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இன்னும் எத்தனை குற்றச்சாட்டு அவர் மீது வருமோ???
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.