செல்வா
25-02-2010, 09:13 PM
பெரிய மலைக்குக் கீழே
பரந்து விரிந்திருந்த அடிவாரப்
படுகையின் நடுவே
படுத்துக் கிடந்தது அந்த ஆறு
உயிரும் உடலும் வற்றிப்போய்
வறட்டு வெயிலில் யுகயுகமாய்
காய்ந்து போன
நீண்ட பெரிய ஒரு மலைப்பாம்பினைப் போல
சிதிலமாகிக் கிடந்தது அது
ஆற்று நீர் உருட்டி விளையாடிய
குளிர் கூழாங்கற்கள் அனைத்தும்
கடும் வெயிலில் காய்ந்து பழுத்திருந்தன.
ஆற்றுப் பாதை முழுதும்
வெயிலில் வெந்து கொண்டிருக்க
தனிமையும் மொளனமும்
தங்களுக்குள் சைகை மொழி பேசியபடி
அலைந்து கொண்டிருந்தன
முட்புதர்கள் முற்றும் எரிந்திருக்க…
ஒண்டியிருந்த ஒன்றிரண்டு மரங்கள் மட்டும்
இலையாடைகளைத் துறந்து விட்டு
கிளைக் கரங்கள் எரிந்த நிலையில்
உடன் கட்டை ஏறிக் கொண்டிருந்தன.
இருந்த ஒன்றிரண்டு புற்களையும்
கருகவைத்த கதிரவன்
கடலுள் மூழ்கி தன் பாவம்
கழுவச் சென்றான்.
அடர்ந்த அமாவாசை இரவு
அன்று மட்டும் இருளாயில்லை
எங்கிருந்தோப் பறந்து வந்த
கார்மேகங்களின் மோதுதலில்
இடியொலியும் மின்னலொளியும்
மங்கல வாத்தியங்களாய் முழங்க
நிறைந்து தளும்பும் ஏரி
கரையுடைத்துப் பாய்வது போல்
கொட்டித் தீர்த்தது வானம்
விடிகாலை வெளிப்போந்தக்
கதிரவன் கண்களுக்கு
மாறியிருந்தன காட்சிகள்
நுரைபொங்கக் கரை ததும்ப
ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம்
காய்ந்து கிடந்த முட்டைகள்
குளிர்நீர் பட்டதும் வெடித்துப்
பிறந்த மீன்குஞ்சுகள்
எங்கும் நீந்திக் களித்தன
ஓரிரவிற்குள்ளேயே பச்சையாடை
போர்த்தத் துவங்கியிருந்தாள் நிலமகள்.
பழுத்துக் கிடந்த கூழாங்கற்களை
தன் குளிர்கரங்களால் தழுவியபடி
அவற்றின் காதுகளுக்குள்
மலையின் இரகசியங்களை
உரத்துச் சொன்ன தண்ணீரின்
சலசலப்பு எங்கும் எதிரொலித்தது
புதிய கற்களுக்கும்
முன்பிருந்த கற்களுக்கும்
இடையே நடந்த நிலச் சண்டையில்
வழிந்தோடியது மணல் இரத்தம்
காணாமல் போயிருந்த
கொக்கு, காகம், மான், மயில்
மற்றும் உறவினர்கள் அனைவரும்
விருந்துண்ண வந்திருந்தனர்
இறந்து போய் உயிர் வந்தவன் போல்
கவனிப்புக்குள்ளானது ஆறு
மூன்று வருடங்களுக் கொருமுறை
மூன்று மாதம் வீடு வந்து செல்லும்
வெளிநாட்டுக் கணவன் போல்
மூன்று நாள் மழை விடைபெற
கணவனைப் பிரிந்த காரிகையாய்
களையிழந்தது ஆறு
அத்தனை உறவுகளும் மொத்தமாய்
பறந்து விட
குதூகலக் கொண்டாட்டத்தில்
குளித்திருந்த ஆறு தன்
வறண்டு போன நாவை
கடைசி துளி நீரை ஊறிஞ்சி
ஈரமாக்கிக் கொண்டது
பெருமழைக்காய் காத்திருப்பதும்
பெய்த சுவடு காயும் முன் ஓடுவதுமாய்
மழை நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி
ஆற்றின் மனதை அறுக்கும்
ஆறா இரணமாகிப் போனது…
ஆற்றின் வேதனைப் பெருமூச்சு
அந்தப் பாழ்வெளியெங்கும்
வெப்பக் காற்றாய் வீசியது
வானத்தைப் பார்த்தபடியே
காத்திருந்து சலித்துப் போன ஆறு
இப்போதெல்லாம் வான் நோக்கி கேட்பது
ஒன்றே ஒன்று தான்.
வந்து விடவே வேண்டாம்
இந்த மழை ….!
பரந்து விரிந்திருந்த அடிவாரப்
படுகையின் நடுவே
படுத்துக் கிடந்தது அந்த ஆறு
உயிரும் உடலும் வற்றிப்போய்
வறட்டு வெயிலில் யுகயுகமாய்
காய்ந்து போன
நீண்ட பெரிய ஒரு மலைப்பாம்பினைப் போல
சிதிலமாகிக் கிடந்தது அது
ஆற்று நீர் உருட்டி விளையாடிய
குளிர் கூழாங்கற்கள் அனைத்தும்
கடும் வெயிலில் காய்ந்து பழுத்திருந்தன.
ஆற்றுப் பாதை முழுதும்
வெயிலில் வெந்து கொண்டிருக்க
தனிமையும் மொளனமும்
தங்களுக்குள் சைகை மொழி பேசியபடி
அலைந்து கொண்டிருந்தன
முட்புதர்கள் முற்றும் எரிந்திருக்க…
ஒண்டியிருந்த ஒன்றிரண்டு மரங்கள் மட்டும்
இலையாடைகளைத் துறந்து விட்டு
கிளைக் கரங்கள் எரிந்த நிலையில்
உடன் கட்டை ஏறிக் கொண்டிருந்தன.
இருந்த ஒன்றிரண்டு புற்களையும்
கருகவைத்த கதிரவன்
கடலுள் மூழ்கி தன் பாவம்
கழுவச் சென்றான்.
அடர்ந்த அமாவாசை இரவு
அன்று மட்டும் இருளாயில்லை
எங்கிருந்தோப் பறந்து வந்த
கார்மேகங்களின் மோதுதலில்
இடியொலியும் மின்னலொளியும்
மங்கல வாத்தியங்களாய் முழங்க
நிறைந்து தளும்பும் ஏரி
கரையுடைத்துப் பாய்வது போல்
கொட்டித் தீர்த்தது வானம்
விடிகாலை வெளிப்போந்தக்
கதிரவன் கண்களுக்கு
மாறியிருந்தன காட்சிகள்
நுரைபொங்கக் கரை ததும்ப
ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம்
காய்ந்து கிடந்த முட்டைகள்
குளிர்நீர் பட்டதும் வெடித்துப்
பிறந்த மீன்குஞ்சுகள்
எங்கும் நீந்திக் களித்தன
ஓரிரவிற்குள்ளேயே பச்சையாடை
போர்த்தத் துவங்கியிருந்தாள் நிலமகள்.
பழுத்துக் கிடந்த கூழாங்கற்களை
தன் குளிர்கரங்களால் தழுவியபடி
அவற்றின் காதுகளுக்குள்
மலையின் இரகசியங்களை
உரத்துச் சொன்ன தண்ணீரின்
சலசலப்பு எங்கும் எதிரொலித்தது
புதிய கற்களுக்கும்
முன்பிருந்த கற்களுக்கும்
இடையே நடந்த நிலச் சண்டையில்
வழிந்தோடியது மணல் இரத்தம்
காணாமல் போயிருந்த
கொக்கு, காகம், மான், மயில்
மற்றும் உறவினர்கள் அனைவரும்
விருந்துண்ண வந்திருந்தனர்
இறந்து போய் உயிர் வந்தவன் போல்
கவனிப்புக்குள்ளானது ஆறு
மூன்று வருடங்களுக் கொருமுறை
மூன்று மாதம் வீடு வந்து செல்லும்
வெளிநாட்டுக் கணவன் போல்
மூன்று நாள் மழை விடைபெற
கணவனைப் பிரிந்த காரிகையாய்
களையிழந்தது ஆறு
அத்தனை உறவுகளும் மொத்தமாய்
பறந்து விட
குதூகலக் கொண்டாட்டத்தில்
குளித்திருந்த ஆறு தன்
வறண்டு போன நாவை
கடைசி துளி நீரை ஊறிஞ்சி
ஈரமாக்கிக் கொண்டது
பெருமழைக்காய் காத்திருப்பதும்
பெய்த சுவடு காயும் முன் ஓடுவதுமாய்
மழை நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி
ஆற்றின் மனதை அறுக்கும்
ஆறா இரணமாகிப் போனது…
ஆற்றின் வேதனைப் பெருமூச்சு
அந்தப் பாழ்வெளியெங்கும்
வெப்பக் காற்றாய் வீசியது
வானத்தைப் பார்த்தபடியே
காத்திருந்து சலித்துப் போன ஆறு
இப்போதெல்லாம் வான் நோக்கி கேட்பது
ஒன்றே ஒன்று தான்.
வந்து விடவே வேண்டாம்
இந்த மழை ….!