சிவா.ஜி
21-02-2010, 11:58 AM
சண்முகம், தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட்டைக் கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சானலாகத் தாவிக்கொண்டே இருந்தார். ஓய்வான முன்னிரவு நேரம். ஒரு சானலில் பளிச்சென்று சந்தோஷின் முகம் தெரிந்ததும், பட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.
சந்தோஷ், சண்முகத்தின் அண்ணன் மகன். இவர் அவனுடைய மேல் படிப்புக்கு உதவ மறுத்துவிட்டதிலிருந்து, அந்தக் குடும்பத்துக்கும் இவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனாலும், சந்தோஷின் தொழில்ரீதியான வளர்ச்சியை கவனித்துக்கொண்டுதானிருந்தார். இன்று அவன் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்.
அவனுடைய பேட்டியைத்தான் ஒளிபரப்புகிறார்கள். என்ன சொல்கிறானென்று ஆர்வமாய் பார்த்தார்...
சம்பிரதாயமான சில கேள்விகளுக்குப் பிறகு,
"நீங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வரக் காரணமானவர்கள், அல்லது உதவியவர்கள் என்று யாரையாவது குறிப்பிட விரும்புகிறீர்களா?"
என்ற கேள்விக்கு,
"நிச்சயமாய். என்னுடைய இந்த உயர்ந்த நிலைக்கு முக்கியமான...இல்லையில்லை...ஒரே ஒரு காரணகர்த்தா என் சித்தப்பா திரு. சண்முகம் அவர்கள்..."
சண்முகம் திடுக்கிட்டு நிமிர்ந்தார். என்ன சொல்கிறான் இவன்...எதுவும் விளங்காமல், தொடர்ந்து பேட்டியைக் கவனித்தார்.
"அப்படியா? அவரின் உதவியாலா நீங்கள் இவ்வளவு பெரிய தொழிலதிபர் ஆனீர்கள்?"
அந்தக் கேள்வியைக் கேட்டு புன்னகையோடு,
"தவறு. அவரது உதவி கிடைக்காததால்தான் இந்த உயர்வை நான் அடைய முடிந்தது."
"குழப்பமாய் இருக்கிறதே...என்ன சொல்ல வருகிறீர்கள் சந்தோஷ் அவர்களே"
"உண்மைதான், நான் மேல்நிலைப்பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்று தேறிய நிலையில், மேற்கொண்டு படிக்க மிகவும் விருப்பப்பட்டேன். என் தந்தையார் மிகக் குறைவான சம்பளத்தில், குடும்பத்தைக் காப்பாற்றவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததால், அப்போது வசதியாக இருந்த என் சித்தப்பாவிடம் உதவி கேட்டேன். அவர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் இருக்க வேண்டும். உனக்கெல்லாம் இந்தப் படிப்பே அதிகம், இனி ஏதாவது வேலை செய்து உன் குடும்பத்தைக் காப்பாற்று எனச் சொல்லிவிட்டார்."
பார்த்துக்கொண்டிருந்த சண்முகம் சங்கடத்தில் நெளிந்தார்.
"வெறுமனே உதவமுடியாது எனச் சொல்லியிருந்தால் நான் வேறு யாரிடமாவது போய் உதவி கேட்டிருப்பேன்...ஆனால், உன் குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது வேலை செய் எனச் சொன்னது என் மூளைக்குள் உறுத்திக்கொண்டேயிருந்தது. தக்காளி கமிஷன் மண்டியில் பெட்டியடித்துக்கொடுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்களிலேயே அந்தத் தொழிலின் நாடிபிடித்துவிட்டேன்."
அருகிலிருந்த நீரைக் குடித்துவிட்டு,
"நானே கமிஷன் வேலை பார்க்கத் தொடங்கி, மளமளவென்று வளர்ந்து, வெளி மாநிலங்களுக்கு சரக்கை அனுப்ப வாடகை லாரிகளை பயன்படுத்தினேன். சில மாதங்களில் சொந்தமாய் லாரிகள் வாங்கி...வளர்ந்து...இன்று உணவு பதனிடும் ஆலை, குளிர்ப்பதனக் கிடங்குகள் என நிறைய நிறுவனங்களுக்குச் சொந்தக்காரன். இப்போது சொல்லுங்கள்...அவரால்தானே நான் இந்த நிலைக்கு வந்தேன். அவர் மட்டும் உதவியிருந்தால், எல்லோரையும் போல ஒரு எஞ்சினியராகவோ, ஊழியனாகவோ இருந்திருப்பேன். ஆனால் இன்று என் நிறுவனங்களில் எத்தனையோ எஞ்சினியர்கள் பணிபுரிகிறார்கள்."
"அப்படியென்றால் இனி படிப்புக்கு உதவிக் கேட்டு வருபவர்களுக்கு உதவவேண்டியதில்லை எனச் சொல்கிறீர்களா?"
"பார்த்தீர்களா? தவறான கோணத்தில் பார்க்கிறீர்கள். உதவி கிடைக்கவில்லையென்றாலும், சோர்ந்துபோகாமல், உழைத்து, தன் சொந்தக்காலில் நிற்க முயலவேண்டும் என்ற செய்தி இதிலிருப்பது தெரியவில்லையா?"
"மன்னிக்கவும் சந்தோஷ் அவர்களே...நாம் பேட்டியைத் தொடரலாமா?"
சண்முகம் குற்ற உணர்ச்சியில் தடுமாறினார்.
சந்தோஷ், சண்முகத்தின் அண்ணன் மகன். இவர் அவனுடைய மேல் படிப்புக்கு உதவ மறுத்துவிட்டதிலிருந்து, அந்தக் குடும்பத்துக்கும் இவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனாலும், சந்தோஷின் தொழில்ரீதியான வளர்ச்சியை கவனித்துக்கொண்டுதானிருந்தார். இன்று அவன் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்.
அவனுடைய பேட்டியைத்தான் ஒளிபரப்புகிறார்கள். என்ன சொல்கிறானென்று ஆர்வமாய் பார்த்தார்...
சம்பிரதாயமான சில கேள்விகளுக்குப் பிறகு,
"நீங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வரக் காரணமானவர்கள், அல்லது உதவியவர்கள் என்று யாரையாவது குறிப்பிட விரும்புகிறீர்களா?"
என்ற கேள்விக்கு,
"நிச்சயமாய். என்னுடைய இந்த உயர்ந்த நிலைக்கு முக்கியமான...இல்லையில்லை...ஒரே ஒரு காரணகர்த்தா என் சித்தப்பா திரு. சண்முகம் அவர்கள்..."
சண்முகம் திடுக்கிட்டு நிமிர்ந்தார். என்ன சொல்கிறான் இவன்...எதுவும் விளங்காமல், தொடர்ந்து பேட்டியைக் கவனித்தார்.
"அப்படியா? அவரின் உதவியாலா நீங்கள் இவ்வளவு பெரிய தொழிலதிபர் ஆனீர்கள்?"
அந்தக் கேள்வியைக் கேட்டு புன்னகையோடு,
"தவறு. அவரது உதவி கிடைக்காததால்தான் இந்த உயர்வை நான் அடைய முடிந்தது."
"குழப்பமாய் இருக்கிறதே...என்ன சொல்ல வருகிறீர்கள் சந்தோஷ் அவர்களே"
"உண்மைதான், நான் மேல்நிலைப்பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்று தேறிய நிலையில், மேற்கொண்டு படிக்க மிகவும் விருப்பப்பட்டேன். என் தந்தையார் மிகக் குறைவான சம்பளத்தில், குடும்பத்தைக் காப்பாற்றவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததால், அப்போது வசதியாக இருந்த என் சித்தப்பாவிடம் உதவி கேட்டேன். அவர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் இருக்க வேண்டும். உனக்கெல்லாம் இந்தப் படிப்பே அதிகம், இனி ஏதாவது வேலை செய்து உன் குடும்பத்தைக் காப்பாற்று எனச் சொல்லிவிட்டார்."
பார்த்துக்கொண்டிருந்த சண்முகம் சங்கடத்தில் நெளிந்தார்.
"வெறுமனே உதவமுடியாது எனச் சொல்லியிருந்தால் நான் வேறு யாரிடமாவது போய் உதவி கேட்டிருப்பேன்...ஆனால், உன் குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது வேலை செய் எனச் சொன்னது என் மூளைக்குள் உறுத்திக்கொண்டேயிருந்தது. தக்காளி கமிஷன் மண்டியில் பெட்டியடித்துக்கொடுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்களிலேயே அந்தத் தொழிலின் நாடிபிடித்துவிட்டேன்."
அருகிலிருந்த நீரைக் குடித்துவிட்டு,
"நானே கமிஷன் வேலை பார்க்கத் தொடங்கி, மளமளவென்று வளர்ந்து, வெளி மாநிலங்களுக்கு சரக்கை அனுப்ப வாடகை லாரிகளை பயன்படுத்தினேன். சில மாதங்களில் சொந்தமாய் லாரிகள் வாங்கி...வளர்ந்து...இன்று உணவு பதனிடும் ஆலை, குளிர்ப்பதனக் கிடங்குகள் என நிறைய நிறுவனங்களுக்குச் சொந்தக்காரன். இப்போது சொல்லுங்கள்...அவரால்தானே நான் இந்த நிலைக்கு வந்தேன். அவர் மட்டும் உதவியிருந்தால், எல்லோரையும் போல ஒரு எஞ்சினியராகவோ, ஊழியனாகவோ இருந்திருப்பேன். ஆனால் இன்று என் நிறுவனங்களில் எத்தனையோ எஞ்சினியர்கள் பணிபுரிகிறார்கள்."
"அப்படியென்றால் இனி படிப்புக்கு உதவிக் கேட்டு வருபவர்களுக்கு உதவவேண்டியதில்லை எனச் சொல்கிறீர்களா?"
"பார்த்தீர்களா? தவறான கோணத்தில் பார்க்கிறீர்கள். உதவி கிடைக்கவில்லையென்றாலும், சோர்ந்துபோகாமல், உழைத்து, தன் சொந்தக்காலில் நிற்க முயலவேண்டும் என்ற செய்தி இதிலிருப்பது தெரியவில்லையா?"
"மன்னிக்கவும் சந்தோஷ் அவர்களே...நாம் பேட்டியைத் தொடரலாமா?"
சண்முகம் குற்ற உணர்ச்சியில் தடுமாறினார்.