lenram80
08-02-2010, 01:39 PM
இனிமேல்....என்ன நடக்குமோ!!
காரம் இனிக்குமாமே ?!
நாள் நொடியாகுமாமே..?!
கிருக்கல் கவிதையாகுமாமே...?!
உதடுகள் எப்போதும் சிரிக்குமாமே...?!
பூ ரசித்தல்,
தேன் குடித்தல்,
உயரப் பறத்தல்,
பறவை செயல் செய்வேனாமே...?!
உள்ளவை உள்ளவையாக இருக்கும்போதே
உருப்படியாய் எதுவும் செய்ய முடியவில்லை!
இப்படி உருமாற்றம் கொண்டு தெரிந்தால்...
என்ன நடக்குமோ??
முகம் கழுவினாலாவது இந்தக் கலக்கம் குறையுமா?
அய்யோ...
கொதிநீரை குளிர்ந்த நீரெனக் கருதி
முகம் கழுவி விட்டேனே!!!!
காரம் இனிக்குமாமே ?!
நாள் நொடியாகுமாமே..?!
கிருக்கல் கவிதையாகுமாமே...?!
உதடுகள் எப்போதும் சிரிக்குமாமே...?!
பூ ரசித்தல்,
தேன் குடித்தல்,
உயரப் பறத்தல்,
பறவை செயல் செய்வேனாமே...?!
உள்ளவை உள்ளவையாக இருக்கும்போதே
உருப்படியாய் எதுவும் செய்ய முடியவில்லை!
இப்படி உருமாற்றம் கொண்டு தெரிந்தால்...
என்ன நடக்குமோ??
முகம் கழுவினாலாவது இந்தக் கலக்கம் குறையுமா?
அய்யோ...
கொதிநீரை குளிர்ந்த நீரெனக் கருதி
முகம் கழுவி விட்டேனே!!!!