PDA

View Full Version : என் மனதைத் தொட்ட வரிகள் !!!



palani1985
02-02-2010, 11:53 AM
:icon_rollout:மனதைத் தொட்ட வரிகள் !!!
________________________________________
ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். -கவியரசு கண்ணதாசன்

ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்

ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் -நெப்போலியன்

ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் -பெர்னாட்ஷா

ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. -ப்ரெட்ரிக் நீட்சே

ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை..

ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

சிவா.ஜி
02-02-2010, 12:00 PM
அருமையான சொற்றொடர்கள் பகிர்வுக்கு நன்றி.

தலைப்பை தயவுசெய்து தமிழில் இடுங்கள். அதேபோல இந்தப் பதிவை படித்ததில் பிடித்தது பகுதியில் பதியுங்கள். இந்தமுறை பொறுப்பாளர்கள் செய்வார்கள். ஆனால் அடுத்தமுறை சரியான இடத்தில் நீங்களே தயவுசெய்து பதியுங்கள்.

பா.ராஜேஷ்
02-02-2010, 12:06 PM
நல்ல வரிகள் பழனி. தலைப்பை மட்டும் என் ஆங்கிலத்தில் பதித்துள்ளீர்கள் !? அதே போல் சரியான இடத்தில் பதியுங்களேன் .

அன்புரசிகன்
02-02-2010, 12:22 PM
தமிழில் பதிகிறீர்களே... பிறகு ஏன் தலைப்பினை ஆங்கிலத்தில் பதிகிறீர்கள்...

மன்றத்தில் ஆங்கிலப்பதிவுகள் தவிருங்கள் என்று சொல்லியே அலுத்துவிட்டது. :D

தயவு செய்து இதே தவறினை தொடராதீர்கள்.
நன்றி.

தவிர இந்த பதிவு இருக்கும் இடமே தவறு என்று நினைக்கிறேன். இது உங்களது சொந்த படைப்பாக இல்லாத பட்சத்தில் படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்தப்படும். பெறப்பட்ட இடத்திற்கு நன்றி சொல்லவேண்டியது மன்றத்தின் விதியில் கூறப்பட்டுள்ளது. தமிழ் மன்ற விதியினை படியுங்கள்...

மொழிபெயர்கப்பட்ட பதிவு எனின் அதற்கும் தகுந்த இடம் உண்டு. உங்கள் கருத்தினை கொண்டு திரி தகுந்த இடத்திற்கு நகர்த்தப்படும்.