PDA

View Full Version : விலைமகள் ..



muthuvel
31-01-2010, 02:43 PM
உள்ளம் அடகு வைத்து ,
உடலை விற்றாள்,



நாணம் நழுவியது ,
நாலுதிசை கடனால் ,



வரி இல்லை,
வருமானம் உண்டு,


இரவில் அணையும் விளக்கு,
ஏற்றும் அவள் வயிற்றுக்கு விளக்கு ,



அவனின் காம பசிக்கு அவள்,
அவளின் வறுமை பசிக்கு அவன் ,
.

நாகரா
31-01-2010, 04:00 PM
கலை மகளாய்
அலை மகளாய்
மலை மகளாய்ப்
விண்ணகத் தேவியரைக் கும்பிடுஞ் சமூகம்
மண்ணகத் தேவியராம் பெண்களை
விலை மகளாய் இழிவு படுத்தும்
அவலத்தை உணர்த்தும் கவிதை அருமை
வாழ்த்துக்கள் முத்துவேல்!

muthuvel
01-02-2010, 04:13 AM
உங்கள் கவிதை அருமை

சிவா.ஜி
01-02-2010, 04:22 AM
நல்ல வரிகள் முத்துவேல். நழுவியது நாணல் அல்ல...நாணம் என நினைக்கிறேன்..!!

muthuvel
01-02-2010, 04:52 AM
பிழையை திருத்திக்கொண்டேன்

ஆதி
01-02-2010, 06:46 AM
கெட்ட வார்த்தைகளால்
கெட்டவளாக்கி
நல்லவர்களாகிக் கொண்டோம்..

பட்டுப்போன்ற அவளின் வாழ்வு
பட்டுப்போக நம் சக மனிதர்களும்
காரணமென்றதை மறுதலித்து
தர்க்கம் பேசினோம்..

அவளின் நடத்தை குறித்து பேசும் முன்..
ஒருத்தரேனும் ஒப்புக் கொண்டோமா ?
ஒரு முறையேனும்
இச்சையோடு அவளை பார்த்ததை..

ஒரு பிடி சோறோ
ஒரு ஆடையோ
ஒரு விளக்கோ
கொடுக்க நீண்டிருக்கிறதா
குற்றம் சொன்ன
எவரின் கைகளும்..

தொடர்ந்து எழுதுங்கள் முத்துவேல்... வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
01-02-2010, 07:53 AM
ஒரு பிடி சோறோ
ஒரு ஆடையோ
ஒரு விளக்கோ
கொடுக்க நீண்டிருக்கிறதா
குற்றம் சொன்ன
எவரின் கைகளும்..
..

அருமையான வரிகள் ஆதன். குற்றம் சொல்வது எளிது.....! நிகழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை யாரும் சிந்திப்பதில்லை.

muthuvel
02-02-2010, 07:16 AM
பாராட்டுக்கு நன்றி

muthuvel
04-02-2010, 09:00 AM
கலை மகளாய்
அலை மகளாய்
மலை மகளாய்ப்
விண்ணகத் தேவியரைக் கும்பிடுஞ் சமூகம்
மண்ணகத் தேவியராம் பெண்களை
விலை மகளாய் இழிவு படுத்தும்
அவலத்தை உணர்த்தும் கவிதை அருமை
வாழ்த்துக்கள் முத்துவேல்!

நல்ல வரிகள்

ஆதி
04-02-2010, 09:26 AM
நல்ல வரிகள்

வணக்கம் முத்துவேல், பதில் போட்ட பின்னூட்டத்திற்கே பதில் போட வேண்டாமே..

கவிதையை மேலெழுப்பவது உங்கள் நோக்கமென்றால்.. நேரடியாகவே மேலெழுப்புங்கள்..

"படிக்காதவர்கள் படித்து பின்னூட்டம் போடுங்கள்" எப்படி ஏதாவது நீங்கள் எழுதலாம்.. பின்னூட்டம் ஊக்கம் எல்லோரும் எதிர்ப்பாக்கிற ஒன்றுதான்.. அதனால் தயக்கமோ.. பயமோ வேண்டாம்.. சந்தேகம் இருப்பின் பொறுப்பாளர்களை(பச்சை சட்டைக்காரர்கள்) நாடுங்கள் நிச்சயம் உதவுவார்கள்.. புரிதலுக்கு நன்றி..