PDA

View Full Version : இறை அருள்



அனுராகவன்
26-01-2010, 04:24 PM
என்ன விலை
என் உயிரே
நீ என்னுடன் இருக்க,

துன்பம் தரும்
மனமே
நீ என்னை விலக,

ஞானம் அருளும்
என் குருவே
நீ என்னுடன்
என்றும் கலக்க,

ஊரை விட்டு
போகும் போது
உன்னுடன்
வருவது யார்
உடலே,

கண்கள் பார்க்கும்
போதே நீ
அடைவாய்
திருவருள்,

நான் ,எனது
என் அகங்காரம்
தவிர என்
உடலல்ல...

ஆக
அடைவாய்
முதல் திருவருள்
பெறுவாய்
முழு
பரம்பருள்...

ஆன்மா
நீ தான்
என் சொத்து
பிறகு ஏன்
வெளி சொத்து(மனம்)...

ஆர்.ஈஸ்வரன்
27-01-2010, 09:31 AM
என்ன விலை
என் உயிரே
நீ என்னுடன் இருக்க,

துன்பம் தரும்
மனமே
நீ என்னை விலக,

அழகான ஆழமான கவிதை வரிகள். நன்றாக இருக்கிறது.

பா.ராஜேஷ்
27-01-2010, 10:10 AM
கவிதை வரிகள் மிக நன்றாக இருக்கிறது அனு

அனுராகவன்
27-01-2010, 06:22 PM
நன்றி ராஜேஷ்,ஈஷ்வர்