muthuvel
26-01-2010, 07:31 AM
படபிடிப்பில் நானிருந்தால் ,
நாள் ஓடுவது தெரியாது ,
நேரம் நகருவது புரியாது ,
உணவுக்கு நேரம் இல்லை,
உறவுகளோடு பேச வாய்ப்பு இல்லை ,
உழைப்பு மட்டும்தான் கூட வரும்,
ஒவ்வொரு படமும் எனக்கு, தலை பிரசவச
வேதனைதான்,
வெற்றி அடையும் வரை ,
பங்காளிகளுக்கு பதில் சொல்லணும் ,
பணம் போட்ட முதலாளிக்கு பதில் சொல்லணும் ,
பத்திரிகைக்கு பதில் சொல்லணும் ,
பக்கத்துக்கு வீட்டுக்காரன் முகம் முழிக்கணும் ,
படம் தோற்றுபோனா ,
சிலமணி நேரந்தான் ,ரசிகனான, நீ சிரிக்க,
பல மணி நேரம் உறங்காமல் நான் இருந்தேன் ,
உனக்காக வரைந்த என் படம், என்னும் ஓவியத்துல,
அதன் வண்ணங்களாக என் வியர்வையத்தான் வரஞ்சு வச்சேன் ,
இதில் ஒரு துளி வியர்வை கூட ,அதிக உப்பிலாம இருந்தாலும் ,
குற்றங்குறை சொல்லிடுவ ,
உப்பில்லாத பண்டமின்னு
வீடு வாசல் அடகு வச்சேன்,
பொண்டாட்டி தங்க தாலியையும் அடகு வச்சேன் ,
ஆறரை கோடி கடவுளான உன் பொழுதை போக்குவதற்கு ,
குறுக்கு தரிசனமா, சிலபேரு திருட்டு தனமா
வீ சி டி எடுப்பான் ,
அந்த களையை நான் பிடுங்க, எந்த சாமிக்கிட்ட நான் போவேன் ,
போட்டி பொறாமை அதிகம் உண்டு,
குழி பறிக்கும் கூட்டம் உண்டு,
இத்தனையும் சமாளிச்சு, நான் ஜெயிச்சு நின்னாலும் ,
சுதந்திர காற்று சுவாசிக்க, என்னால்தான் முடியல ,
என்னை சுற்றி ஆயிரம் கண்கள் ,
என்னையே சுற்றி வட்டமிட்டு பார்க்க,
கஷ்டப்பட்டு நான் உழைசாலும்,
இஷ்டப்படி வாழ ,என்னால்தான் முடியல,
திறமை இல்லாதவன் மேல வரலாம் ,
உலகத்தில எல்லா வேலைக்கு
சிபாரிசு உண்டு ,
ஆனா ,
சிபாரிசு இருந்தாலும் திறமை வேணும் ,
எங்க தொழில், மட்டும்தான் ,
நாள் ஓடுவது தெரியாது ,
நேரம் நகருவது புரியாது ,
உணவுக்கு நேரம் இல்லை,
உறவுகளோடு பேச வாய்ப்பு இல்லை ,
உழைப்பு மட்டும்தான் கூட வரும்,
ஒவ்வொரு படமும் எனக்கு, தலை பிரசவச
வேதனைதான்,
வெற்றி அடையும் வரை ,
பங்காளிகளுக்கு பதில் சொல்லணும் ,
பணம் போட்ட முதலாளிக்கு பதில் சொல்லணும் ,
பத்திரிகைக்கு பதில் சொல்லணும் ,
பக்கத்துக்கு வீட்டுக்காரன் முகம் முழிக்கணும் ,
படம் தோற்றுபோனா ,
சிலமணி நேரந்தான் ,ரசிகனான, நீ சிரிக்க,
பல மணி நேரம் உறங்காமல் நான் இருந்தேன் ,
உனக்காக வரைந்த என் படம், என்னும் ஓவியத்துல,
அதன் வண்ணங்களாக என் வியர்வையத்தான் வரஞ்சு வச்சேன் ,
இதில் ஒரு துளி வியர்வை கூட ,அதிக உப்பிலாம இருந்தாலும் ,
குற்றங்குறை சொல்லிடுவ ,
உப்பில்லாத பண்டமின்னு
வீடு வாசல் அடகு வச்சேன்,
பொண்டாட்டி தங்க தாலியையும் அடகு வச்சேன் ,
ஆறரை கோடி கடவுளான உன் பொழுதை போக்குவதற்கு ,
குறுக்கு தரிசனமா, சிலபேரு திருட்டு தனமா
வீ சி டி எடுப்பான் ,
அந்த களையை நான் பிடுங்க, எந்த சாமிக்கிட்ட நான் போவேன் ,
போட்டி பொறாமை அதிகம் உண்டு,
குழி பறிக்கும் கூட்டம் உண்டு,
இத்தனையும் சமாளிச்சு, நான் ஜெயிச்சு நின்னாலும் ,
சுதந்திர காற்று சுவாசிக்க, என்னால்தான் முடியல ,
என்னை சுற்றி ஆயிரம் கண்கள் ,
என்னையே சுற்றி வட்டமிட்டு பார்க்க,
கஷ்டப்பட்டு நான் உழைசாலும்,
இஷ்டப்படி வாழ ,என்னால்தான் முடியல,
திறமை இல்லாதவன் மேல வரலாம் ,
உலகத்தில எல்லா வேலைக்கு
சிபாரிசு உண்டு ,
ஆனா ,
சிபாரிசு இருந்தாலும் திறமை வேணும் ,
எங்க தொழில், மட்டும்தான் ,