ஜேஜே
25-01-2010, 12:34 PM
ஏன் பிறந்தோம்
வளங்களை குறைக்க அல்ல
பெருக்க பிறந்தோம்..
வலியோரை மிதிக்க அல்ல
மதிக்க பிறந்தோம்..
காடுகளை அழிக்க அல்ல
வளர்க்க பிறந்தோம்..
செல்வத்தை செலவழிக்க அல்ல
சேமிக்க பிறந்தோம்..
கல்வியை விற்க அல்ல
கற்க பிறந்தோம்..
கலாச்சாரத்தை சீர்குலைக்க அல்ல
பாதுகாக்க பிறந்தோம்..
சாதி மதங்களால் பிரிந்துக்கிடக்க அல்ல
சகோதரத்துவத்தில் மலர பிறந்தோம்..
குழந்தையாய் பிறந்து
இளைஞராய் உயர்ந்து
சிற்றின்பங்களில் விழுந்து
பேரின்பங்களை தொலைத்து
வெம்மையாக சாக அல்ல...
தடைகளை தகர்த்தெறிந்து
எல்லைகளை உடைத்தெறிந்து
சாதிக்க பிறந்தோம் இவ்வுலகில்...
வளங்களை குறைக்க அல்ல
பெருக்க பிறந்தோம்..
வலியோரை மிதிக்க அல்ல
மதிக்க பிறந்தோம்..
காடுகளை அழிக்க அல்ல
வளர்க்க பிறந்தோம்..
செல்வத்தை செலவழிக்க அல்ல
சேமிக்க பிறந்தோம்..
கல்வியை விற்க அல்ல
கற்க பிறந்தோம்..
கலாச்சாரத்தை சீர்குலைக்க அல்ல
பாதுகாக்க பிறந்தோம்..
சாதி மதங்களால் பிரிந்துக்கிடக்க அல்ல
சகோதரத்துவத்தில் மலர பிறந்தோம்..
குழந்தையாய் பிறந்து
இளைஞராய் உயர்ந்து
சிற்றின்பங்களில் விழுந்து
பேரின்பங்களை தொலைத்து
வெம்மையாக சாக அல்ல...
தடைகளை தகர்த்தெறிந்து
எல்லைகளை உடைத்தெறிந்து
சாதிக்க பிறந்தோம் இவ்வுலகில்...