ஆதி
22-01-2010, 12:06 PM
மனிதாபிமானம் வேண்டி
நடந்திருந்தது
ஒரு பிரார்த்தனைக் கூட்டம்
ஒவ்வொருவரும் தமக்கான
வார்த்தையைத் தேர்ந்தெடுத்து
பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்
மனிதாபிமானம் வேண்டி..
பிரார்த்தனை வார்த்தைகளின்
இடுக்கில் உறைந்திருக்கும் இடைவெளியில்
உலாவியது...
பிடிக்காதவர்கள் மீதான
சிலரின் கடும் வெறுப்புக்கள்..
அழகான பெண்ணின் மீது
சிலரின் சபலப்பார்வைகள்..
"பிரார்த்தனை நிறைவேறுமா ?" எனும்
கடவுளின் ஆற்றல் மீதான சந்தேகங்கள்..
சமீபத்தில் திருமணமான ஒருவனின்
அந்தரங்கம் பற்றிய யோசனைகள்..
யாவையும் கவனித்த கடவுள்
பிரார்த்தனை கூட்டத்தை நோக்கி
பிரார்த்திகத் துவங்கினார்
கடவுள் அபிமானத்தை..
நடந்திருந்தது
ஒரு பிரார்த்தனைக் கூட்டம்
ஒவ்வொருவரும் தமக்கான
வார்த்தையைத் தேர்ந்தெடுத்து
பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்
மனிதாபிமானம் வேண்டி..
பிரார்த்தனை வார்த்தைகளின்
இடுக்கில் உறைந்திருக்கும் இடைவெளியில்
உலாவியது...
பிடிக்காதவர்கள் மீதான
சிலரின் கடும் வெறுப்புக்கள்..
அழகான பெண்ணின் மீது
சிலரின் சபலப்பார்வைகள்..
"பிரார்த்தனை நிறைவேறுமா ?" எனும்
கடவுளின் ஆற்றல் மீதான சந்தேகங்கள்..
சமீபத்தில் திருமணமான ஒருவனின்
அந்தரங்கம் பற்றிய யோசனைகள்..
யாவையும் கவனித்த கடவுள்
பிரார்த்தனை கூட்டத்தை நோக்கி
பிரார்த்திகத் துவங்கினார்
கடவுள் அபிமானத்தை..